Friday, April 20, 2007

பயக்க வயக்கங்கல்

ன்ரு காலை ரொம்ப போரடித்ததால் தொலைக்காட்சி பார்க்கலாம் என்ரு உட்கார்ந்தேன்.

நிரம்ப நாட்களுக்கப்புறம் நான் தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலைகள் நிறைய இருப்பதால் முன் மாதிரி எல்லாம் நேரம் கிடைப்பதில்லை.

எந்த சானலைத் தேர்ந்தெடுத்தாலும் விவேக்கும் வடிவேலுவும் தான் அதிகம் தெரிந்தார்கள். தப்பித் தவறி இவர்கள் இல்லையென்றால் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. விளம்பரங்கள் என்றால் அப்போதெல்லாம் மூன்று நான்கு வரும். இப்போது முப்பது நாப்பது வருகிறது. அது எப்படித்தான் நம்மவர்கள் கொஞ்சம் கூட அலுக்காமல் உட்கார்ந்து இந்த விளம்பரங்களைப் பார்க்கிறார்களோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒருவேளை இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விடவும் இந்த விளம்பரங்கள் மிக அருமையாக இருக்கிறதோ என்னவோ!



இந்த காமெடி நிகழ்ச்சிகளில் இருக்கிற முக்கியமான காமெடி என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரி இருப்பது தான். தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளைப் பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். பத்திரிக்கையுடைய அட்டையை எடுத்து விட்டால் எந்தப் பத்திரிக்கை என்று தெரியாது என்று! பத்திரிக்கை ஆசிரியர்கள் புத்திசாலிகள்! பத்திரிக்கையுடைய பெயர், வெளியான தேதி இவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் கொடுத்து இதை சரி செய்து விட்டார்கள். இப்போது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் அதே மாதிரி ஆகி விட்டது.


இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் ஒரு கடற்கரையில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, காலார நடந்து கொண்டோ, இல்லை, பின்னாலேயே நடந்து கொண்டோ ஒரு விளக்கம் சொல்வார்கள். சில சமயம் அந்த விளக்கத்துக்கும் ஒளிபரப்பாகிற நகைச்சுவைக் காட்சிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருக்காது. ஒவ்வொருத்தரும் ஒரே மாதிரி தங்கள் ஆலாபனையை முடிப்பார்கள் -
'இப்ப இவரு என்ன பண்றாருன்னு பாருங்க!'


நம்ம மக்களும் போட்ட ஒரே நகைச்சுவைக் காட்சியை அலுக்காமல் 54324வது தடவையாக எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரிபடாத விஷயமாக இருக்கிறது.


அப்போதெல்லாம் டிவி கிடையாது. வானொலியில் ஒலிச்சித்திரம் என்று மாதம் ஒரு தடவை ஒலிபரப்புவார்கள். 'வானொலி' பத்திரிக்கையை இதற்கென்று வாங்கி, எந்தத் தேதியில் என்ன ஒலிச்சித்திரம் என்று பார்த்து வைத்துக் கொண்டு காத்திருந்து கேட்போம். சில சமயம் டேப் வந்திருக்காதோ என்னவோ பழைய ஒலிச்சித்திரத்தை மறு ஒலிபரப்பு செய்வார்கள். கேட்க மாட்டோமே! 'அட, இது வந்தது தானே?' என்று சொல்லி வானொலியை 'அணைத்து' விடுவோம். இந்த காலத்து மக்கள் மாறி விட்டார்கள்.


ந்தக் கட்டுரையை மெனக்கெட்டு எழுதுகிற காரணத்தை மறந்து விட்டு எங்கேயோ போய்விட்டேன். முன் மாதிரி எல்லாம் பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இல்லை என்றால் அரைமணிக்கு ஒரு முறை இந்த அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் தலையை நுழைப்பதில்லை.


வானொலி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து 'அடுத்த நிகழ்ச்சி இன்னும் சில விநாடிகளில் தொடரும்' என்று சொல்லி விட்டு, யாரையாவது வயலின் வாசிக்க வைத்து விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பை சொல்வார்கள்.


ஒவ்வொருவரும் அழகாக அறிவிப்பை செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருந்தது. அழுத்தம் திருத்தமாக அவர்கள் அறிவிப்புகளை வழங்கும் விதம் அருமையாக இருந்தது. நான் கூட சில அறிவிப்பாளர்களை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களுக்கு அந்த மாதிரி அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு இருக்கிறதா என்றால் அது ஒரு பெரிய மைனஸ்! தப்பித் தவறி ஒழுங்காகப் பேசி விட்டால் அவர்களைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்களோ என்று கூடத் தோன்றுகிறது.


காமெடி காட்சிகளை விடவும் அதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பேசுகிற தமிழில் இருக்கிற காமெடி இன்னும் தூள். வாயில் என்னவோ சுடு தண்ணீரை வைத்துக் கொண்டு பேசுகிற மாதிரி அவர்கள் அடிக்கிற கூத்து - ஆகா! இப்போது போட்டிக்கு நேயர்களோடு கலந்து உரையாடி அவர்கள் கேட்கிற பாடலை வழங்க சின்னச் சின்ன பெண்கள் வந்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து நாம் மெய் மறக்கிறோமோ என்னவோ, தமிழை மாத்திரம் மறந்தே ஆக வேண்டும்.


ழ, ல, ள, ந,ன, ண எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. 'அட, எதை எங்கே யூஸ் பண்ணினாத்தான் என்ன?' என்று மாற்றி மாற்றி உபயோகித்து அட்ஜஸ்ட் செய்கிறார்கள்.


அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கூட ஒழுங்காக இந்த உச்சரிப்புகளை செய்தார்களா என்பது சந்தேகமே. முழு தமிழகமும் இதைப் பற்றி கவலைப் படாமல், 'அடப் போங்கப்பா, இது பயக்க வயக்கம்!' என்று சொல்லிவிட்டுத் தப்பித்து விடுகிறது.


மொழி என்பது நாமே உருவாக்கியது தானே? கைகளை ஆட்டி விதவிதமான குறியீடுகளை உருவகித்து வாயில் சப்தங்களை ஏற்படுத்தி பேசிக் கொண்டிருந்த கற்காலத்தில் இந்தத் தொந்தரவு எல்லாம் இருந்ததா என்ன?


தமிழ் மொழியை உருவாக்கின சமயத்தில் சும்மா இருக்காமல் ஒரே உச்சரிப்புக்கு இரண்டு மூன்று எழுத்துகளை உருவாக்கி வைத்தவர்களைத் தான் இப்போது நாம் குறை சொல்ல வேண்டியிருக்கிறது!


எதற்கு இந்த 'ழ'வும் 'ள'வும்?! தமிழுக்குப் பெருமை சேர்க்கிறதாமே இந்த 'ழ'? தமிழிலேயே உட்கார்ந்து கொண்டு 'காலாட்டிக்' கொண்டிருக்கிற இந்த 'ழ' எத்தனை பேர் நாக்குகளில் உட்கார மறுக்கிறது!


'வாழைப்பழத்தின் மீதேறி வழுக்கி விழுந்தான்' என்றெல்லாம் பேச வைத்து வழுக்கி விழ வைக்கிறார்கள்.


அதே மாதிரி தான் இந்த ர, ற அப்புறம் 'ன', 'ண', 'ந'! கொடுமைடா சாமி!


அரம், அறம், கனவு, கணக்கு, நன்மை - இந்தச் சொற்களுக்குள் எந்த இடத்தில் எந்த எழுத்தை உபயோகிப்பது என்பது குழப்பத்தை உருவாக்கக் கூடிய ஒன்று.


அந்த மொழி வல்லுநர்கள் கொஞ்சம் யோசித்து ஒரே எழுத்தை உருவாக்கியிருந்தால் தமிழ்மக்கள் எல்லோரும் தமிழ் தேர்வில் 100க்கு 96 நிச்சயம் வாங்கியிருப்பார்களே!


இப்போது நம் மக்கள் பேசும் வார்த்தைகளை வைத்தே அவர்கள் சொல்ல வருகிற கருத்தை நாம் யூகிக்கிறோம் தானே? அவர்கள் எந்த மாதிரி உச்சரிப்பை செய்தாலும் கருத்து சரியாக நம் தலையில் ஏறுகிறது தானே?


அப்புறம் எதற்கு இந்த மாதிரி வேறு வேறு எழுத்துகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும்? அதாவது, அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக் கொல்ல வேன்டும்?!


இருநூத்தி சொச்சம் எழுத்துகளில் எத்தனை எழுத்துகளை இதன் மூலம் குரைக்க முடியும் - சாரி - குறைக்க முடியும்?! சற்றே நினைத்துப் பாருங்கள்.


அடுத்த உலகத் தமில் மாநாட்டில் இது குரித்து ஒரு சிரப்பு கட்டுரை தயாரித்து வலங்கி தமில் கூரும் நல்லுலகம் உய்ய வலி வகுக்குமாரு தமில் அரிஞர்கலைக் கேட்டுக் கொல்கிரேன்!


[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, March 07, 2007

நீ தான் என்னவள்!



ஏனோ இன்று எனக்குத் தோன்றுகிறது -
நீ தானே என்னவள் என்று!




டந்த மூன்று வாரங்களாகப் போக நினைத்து முடியாமல் போய், இன்று அந்தப் படத்தைப் பார்த்தாகி விட்டது!



முங்காரு மளே - Mungaaru Malae - கன்னடத் திரைப் படம்!



தியேட்டரை விட்டு வெளியே வரும் போது எல்லோரும் துண்டால் தலையைத் துவட்டிவிட்டவாறே வருகிறார்கள். அவ்வளவு அழகாக படம் முழுக்க மழையும் நடித்திருக்கிறது.



படத்தின் உயிர் நாடி - ஒளிப்பதிவு. [க்ருஷ்ணா] தூள் கிளப்பியிருக்கிறது கேமிரா. அதுவும் மெர்க்கரா பகுதி காட்சிகள் மனதை அள்ளுகின்றன.



அடுத்து - திரைக்கதை! கதை என்று சொல்வதை விட கவிதை என்று சொல்ல வேண்டும்.



வசனங்கள் நிறைய என்றாலும் அலுக்காத வசனங்கள். வசனம் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல மிக இயல்பாக எல்லா நடிக/நடிகைகளும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.



மக்களை ஈர்த்த மிக முக்கியமான மற்றொன்று - அருமையான பாடல்கள்! அட்டகாசமான இசை! [மனோ மூர்த்தி - கலிபோர்னியா! யாரப்பா இவர்? இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? :-)]



சாதாரண ஒரு காதல் கதையை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார்கள். முழுக் குழுவுக்கும் ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். இயக்கியிருப்பவர்: யோகிராஜ் பட்.


நாயகன் கணேஷ். உதயா தொலைக்காட்சியில் வணக்கம்-வணக்கம்-வணக்கம் என்று சிட்டிபாபு ஸ்டைலில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவர். மிக மிக மிக அருமையாக அந்த நாயகன் பாத்திரத்துக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.



நாயகி சஞ்சனா. அழகாக சிரிக்கத் தெரிந்த தேவதை. இடைவேளைக்குப் பிறகு நன்றாகவும் நடித்திருக்கிறார். அட விடுங்க, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்ப் படத்தில் பார்க்கத் தானே போறீங்க!



பெண்ணின் தந்தையாக அனந்த் நாக்! பாந்தமான 'அட' என்று வியக்க வைக்கிற அவரை சார்ந்த காட்சிகளை அருமையாக உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.



பெங்களூர் மக்கள் மறக்காமல் படத்தைப் பார்த்து விடுங்கள்!

[முதல் இரண்டு வரிகள் -

முங்காரு மளே படத்தின் தாளம் போட
வைக்கும் பாடல் வரிகள்!]

Monday, March 05, 2007

வஸ்ரத்து


முன் பக்கம், பின் பக்கம் - ஜன்னல்!
தீய சக்திகளை விரட்ட எளிய வழி!
சுபமூகாவின் புதிய புனைப் பெயர் என்ன?

கூடுதல் தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு



புல்லில் பனித்துளி


துளி 14







லைப்பு புரிபடாமல் குழம்ப வேண்டாம். வாஸ்து என்கிற வார்த்தை தான் அது!



அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!



வாஸ்து சாஸ்திரத்தை போதிப்பவர்களையும் அதை கடைபிடிப்பவர்களையும் நையாண்டி செய்யும் நோக்கம் இந்தக் கட்டுரைக்கு இல்லை. இதை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்களுக்கும் வீணாய் தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கும், தங்கள் பெயர்களில் க்,ச்,ட்,த் என்று சேர்த்துக் கொண்டு புகழ் தேடப் பார்க்கும் புள்ளி ராஜாக்களுக்கும் தான்!



ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஏழாம் வீடு, எட்டாம் வீடு, ஒன்பதாம் வீடு, குரு, சனி, சுக்ரன், அவன் இவனைப் பார்க்கிறான், இவன் அவனைப் பார்க்காமல் இருக்கிறான், அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றெல்லாம் குழப்பப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த மகா ஜனங்கள் இப்போது காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாஸ்து சாஸ்திரத்தைத் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஒரு ஆலமரத்தை சுற்றியோ, கோவிலில் விளக்கேற்றியோ, புற்றுக்குப் பால் வார்த்தோ 'இனி நல்லது நடக்கும்' என்று மனதுக்குள் சமாதானப்பட்டுக் கொண்டவர்கள், வீட்டில் இருக்கிற வாசலை மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிய வாசலை உருவாக்குகிறார்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள், போகிற போக்கில் மேல் மாடிக்கு செல்ல படிகளே இருக்கக் கூடாது என்கிற விதத்தில் இது போய் முடிய வாய்ப்புகள் இருக்கின்றன.



வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான் அது. எப்போதும் இன்பம் இருந்தால் திகட்டிப் போகும் என்பதால் துன்பங்களும் சேர்ந்து அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது தெரிந்த விஷயம் தானே? மேடு இருக்கும் போது மீசை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, பள்ளம் வரும் போது தடுமாறிப் போகிறார்கள். இன்பம் வந்த சமயம் 'துன்ப வேளையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று முன்னேற்பாடாக திட்டங்கள் தீட்டி எந்நாளும் பொன்னாளாய் களியாட்டம் போடுவதை விடுத்து, இன்பத்தில் கண்கள் மூடி அனுபவித்து துன்பத்தில் கண்களையே மூட முடியாமல் உழல்கிறார்கள்.



துன்பம் வரும்போது தான் எல்லோருக்கும் இறைவன் இருக்கும் உண்மையே தெரிய வருகிறது. கோவில் வாசலில் ஒரு அவசர என்.சி.சி. ஸ்டைல் சல்யூட் அடித்து சென்று கொண்டிருக்கிறவர்கள், கோவில் உள்ளே போய் சரியாக எண்ணிப் பார்த்து ஒன்பது தடவை சுற்றுகிறார்கள். எட்டு தடவை அல்லது பத்து தடவை என்றால் கிரகங்கள் ஏமாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன என்று சரியாக 'எண்ணி' கர்மம் 'துணிகிறார்கள்'!



பத்து வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வாஸ்து சரியில்லை என்று காரணம் காட்டி வீட்டில் திருத்தங்கள் செய்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காலம் அதே வீட்டில் நீங்கள் வசித்த போது உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அருமையான பலன்களை ஒரு சில நிமிடங்களில் மறந்து விடுவது ஏன்? 'வருகிற பணம் எல்லாம் எங்கு போகிறது என்று தெரியாமல் போய்விடும். செலவு கையைக் கடிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள ஒரு அறை' என்று சொல்லப் படும் போது, அதற்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்கள். இருக்கிற செலவோடு இதுவும் சேர்ந்து அதிக செலவு என்று மனதிற்குத் தோன்றுவது கிடையாது. வருகிற பணம் எல்லாம் போய்விடுகிறது என்பதற்கு முதல் முக்கிய காரணம் சரியாகத் திட்டமிடவில்லை என்பது தானே? அப்படி ஏதாவது திருத்தம் செய்தால் தான் இந்த நிலை மாறும் என்றால் அதை செய்ய வேண்டியது வீட்டின் மேல் மாடியில் அல்ல, உங்கள் மேல் மாடியில் தான், அதாவது உங்கள் மூளையில்! வீட்டின் மூலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.



"நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உங்கள் பெயர் 'வ' அல்லது 'வா' அல்லது 'வி' என்கிற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் எழுத்து கொடுப்பது போல் சொல்வார்கள். 'பெயரை மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள், உங்கள் புகழ் ஓகோவென உயர்ந்து போகும்' என்பார்கள். நீங்கள் பிறந்து ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் ஒரு பெயருடன் வாழ்ந்த பிறகு, திடீரென்று ஒரு நாள் இந்த மாற்றம் தேவை தானா? பெயர் மாற்றத்தை விடவும் பெயருக்குள்ளேயே செய்யும் மாற்றங்கள்- ஆகா, பெயரில் இருக்கும் எழுத்துகளின் கூட்டுத் தொகையை அதிகமாக்க எழுத்துகளை அதிகமாக்குவார்கள். இதில் வேறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து அதைக் கூட்டும் போது உங்கள் பிறந்த தேதிக்குத் தோதாக அது இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.



எழுத்தாளர்கள் வைத்துக் கொள்ளும் புனைப் பெயர் போல் ஒவ்வொருவருடைய இயற்பெயரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. சில சமயம் நான் நினைப்பதுண்டு - இந்த புனைப் பெயர் என்கிற வார்த்தையில் முதல் எழுத்தை மாற்றி, 'பூனைப் பெயர்' என்று மாற்றினால் அந்த வார்த்தைக்கு இன்னும் மவுஸ் [எலி அல்ல!] அதிகரிக்குமோ என்று!



ந்திய வாஸ்து செய்து அலுத்து விட்டது என்று இப்போது சீனா, ஜப்பான் என்று மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை இறக்குமதியும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.



ஏதோ வாயில் நுழையாத ஒரு பெயரை சொல்லிவிட்டு அதன்படி மீன் தொட்டியை வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் ஓடிப் போகும் என்று ஒருவர் குறிப்பிட்டார். வீட்டில் உள்ள தீயசக்தி என்பதைத் தன் மாமியாருக்கு உருவகப் படுத்திக் கொண்டாரோ என்னவோ, அந்த்ப் பெண்மணி உடனே மீன் தொட்டி வாங்கும் காரியத்தில் இறங்கிவிட்டார். ஏற்கனவே துண்டு விழும் பட்ஜெட்டில் இன்னும் ஒரு பத்து பதினைந்து துண்டுகள் விழ வைத்து மீன் தொட்டி வாங்கிவிடத் திட்டம் போட்டார்.



மேல்மாடியில் படிக்கட்டுகள் முடிகிற இடத்தில் இடப் பக்கம் இது வைக்கப் பட வேண்டும் என்று இடம் குறிக்கப் பட்டது. "வரவேற்பறையில் வைக்கலாமே?" என்று அவர் சந்தேகம் கேட்க, நம் வெளிநாட்டு வாஸ்து வல்லுநர் மறுத்து விட்டார். "அது தான் சரியான இடம். உங்கள் மனதிற்கு இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த எல்லா கவலைகளும் பறந்தோடி விடும். தீய சக்திகள் எல்லாம் படிக்கட்டுகளில் இறங்கி வீட்டை விட்டு மறைந்து விடும்" என்றெல்லாம் சொல்லப் போக, ஒரு குறிப்பிட்ட நாளின் மாலை நேரம் மீன் தொட்டி வீட்டில் வந்து இறங்கியது. மன்னிக்கவும், மேல் ஏறியது.



"ஆகா, என்ன அழகாக இருக்கிறது! இதில் தண்ணீர் ஊற்றி மீன்களையும் விட்டு விட்டால் இன்னும்அழகு கூடிப் போகும்!" என்று திருஷ்டி கழித்தார்.



தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு நேரம் எல்லாம் பார்த்து ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்தார்கள். பார்ப்பதற்கு ஒரு சின்ன தொட்டி போல் தெரிந்த அதில் இவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியுமா என்று வியக்க ஆரம்பித்தது குடும்பம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து லிட்டர் தண்ணீர் ஊற்றப் பட்டதும், தொட்டி நிரம்பிப் போனது.



தீய சக்திகள் இன்றைக்கே போய்விடுமா? அல்லது மீன்கள் தொட்டிக்குள் வந்த பிறகு தான் போகுமா என்று புதிய குழப்பத்துடன் எல்லோரும் தூங்கப் போனார்கள்.



இரவு இரண்டு மணி இருக்கும். டம்மென்று ஒரு பெரும் சத்தம். சலசலவென்று குற்றால அருவிநீர் மேலிருந்து கீழ் விழுவது போல் ஒலி! குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த கோலாகலக் காட்சியைக் கண்டார்கள்.



மீன் தொட்டி விரிசல் கண்டு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் அதிபயங்கர வேகத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்!



விஷயத்தைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம். எல்லோரும் கண்களின் கீழே புதிதாகக் கரு வளையங்கள் மாட்டியிருந்தார்கள்!



"எழுபது லிட்டர் தண்ணீர் இல்லையா? எல்லாம் சுத்தம் செய்து முடிக்க காலை ஏழு மணி ஆகி விட்டது! தூக்கமே இல்லை!" என்று வருத்தப் பட்டுக் கொண்டார் அந்தப் பெண்மணி.



"சும்மாவா? தீய சக்திகள் வெளியேறும் போது இது மாதிரி எல்லாம் ஏதாவது செய்து விட்டுத்தான் வெளியேறும். நான் ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்!" என்று சமயம் தெரியாமல் நான் சொல்ல, என்னையே ஒரு தீயசக்தி போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி!
நன்றி: http://tamil.sify.com/

Wednesday, February 28, 2007

வெந்த புண்ணில் வேல்!

அவரவர்கள் பதிவு போட்டுப் போட்டு, போட்டுத் தாக்குகிறார்கள்.


இற்றைப் படுத்துகை உயரெல்லை 30 பற்றி!

[இந்த மாதிரி வார்த்தைகள் எங்கேயிருந்து கிடைக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கப்பா!]


நம் பதிவுகள் பக்கம் மக்கள் எட்டிப் பார்ப்பதே முதலில் கஷ்டம். டோண்டு என்று ஒவ்வொரு பதிவிலும் 'குறிச்சொல்' மாதிரி உபயோகிக்கவும் முடியாது!


தப்பித் தவறி எட்டிப் பார்த்தாங்கன்னா, ஒரு நாலு வரி நல்ல வார்த்தை சொல்வாங்களான்னா அதுவும் கிடையாது. வேறு வேறு பெயர்களில் பின்னூட்டங்களை நானே 'பின்னால்' ஊட்டிக் கொள்ளவும் தெரியாது!


அப்படியே பின்னூட்டம் வந்துட்டாலும், தமிழ் மணத்தில் தெரியவா போகுது? :-)))))))))

நானும் என்னென்னவோ செய்து பார்த்துட்டேன். உதவி கேட்டு மன்றத்திலும் முறையிட்டுப் பார்த்துட்டேன்.


இற்றைப் படுத்துகை [படுத்துதல்?] உயரெல்லை என் பதிவைப் பொறுத்த வரைக்கும் பூஜ்யம் [0] என்று நினைக்கிறேன்! ;-))

Friday, February 23, 2007

டோண்டு ராகவன் கேள்விக்கு பதில்!

ஏமாற்றிய டோண்டு ராகவன்!
ஏலேலோ ஐலசா - படகு மூழ்கி விட்டதா? இல்லையா?
தூக்கம் வராத ஒரு இரவு

இணைப்பு தலைப்புகள் : சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

"ஏலேலோ ஐலசா இரண்டாம் பகுதி உண்டா?" என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் இன்று அதிகாலை 12:06 மணிக்கு என் செல்பேசியில் கூப்பிட்டு கேட்டார்கள். 'Judgement Reserved' என்று சொல்லி விட்டேன்!

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா இப்படி செய்வார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையாதலால் தூக்கம் வரவேயில்லை! டோண்டு ராகவன் மொழி மாற்றம் செய்வார் என்று தெரியும். மனம் கூட மாற்றுவார் என்று தெரிந்திருக்கவில்லை!

ஏலேலோ ஐலசா பகுதிக்கு டோண்டு ராகவன் அவர்கள் அனுப்பியிருக்கும் கேள்வியைப் பாருங்கள்:

நீங்கள் திரும்பி செல்லும்போது அங்கு நீங்கள் எதிர்பார்க்கும் யாரையுமே காணும்.

அங்கிருந்த டீக்கடைக்காரர் அந்தப் பக்கம் தன் காரில் (!) வந்த டோண்டு ராகவன் என்னும் அறுபது வயது இளைஞன் அந்த நால்வரையும் தன்னுடன் காரில் தள்ளிக் கொண்டு போய்விட்டான் என்று கெக்கெக்கே என சிரித்து கொண்டும், பொறாமை பெருமூச்சுடனும் கூறுகிறார்.

அப்போது உங்கள் மனநிலை:
1. டோண்டு ராகவனைப் பற்றி
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி என்னவாக இருக்கும்?

இந்த சிச்சுவேஷனுக்கு:
அ. கண்ணதாசன் மற்றும்
ஆ. வாலி என்ன பாட்டு எழுதுவார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று மூளையைக் கசக்கிக் கொண்டதில் காலை ஐந்து மணி சீக்கிரம் வந்துவிட்டது.

டோண்டு ராகவன் இந்த விஷயத்தில் என்னை ஏமாற்றி விட்டதால் நான் இதற்கு பதில் சொல்லப் போவதில்லை.

நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கற்பனைக் குதிரை மேல் சாட்டையை சொடுக்கும் சத்தம் கேட்கிறது. டோண்டு ராகவன் அவர்களுக்கு உங்கள் பதில் என்ன? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

Thursday, February 22, 2007

நறுக்குன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி..

டோண்டு, வீ மிஸ் யூ ;-)
இன்று இரவு 11:59:59
முதல் பகுதியே இறுதிப் பகுதி ஆகும் கொடூரம்!



றுக்குன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க தெரிஞ்ச மக்கள் வலைப் பதிவு உலகில் இருக்காங்கங்கிறதை அங்க இங்க பார்த்து தெரிஞ்சுகிட்டபிறகு தான், நாங்க அந்த ஐடியாவைக் கொடுத்தோம். நெறைய கேள்விகள் வந்து குவியப் போகுது, திண்டாடப் போறோம்னெல்லாம் கனவெல்லாம் வேற கண்டுட்டோம்.

சுபமூகா சார் ரொம்ப கோபமா இருக்கார். 'நான் சொன்னேனே, இதெல்லாம் இங்க சரிவராது' அப்படீன்னு வருத்தப் பட்டாரு. 'இருபது கேள்வி வந்ததா சொன்னீங்களே?' அப்படீன்னு சமாதானப் படுத்திப் பார்த்தோம்.

அப்படி ஒண்ணும் சுவாரசியமான கேள்விகள் - அதாவது - சுவாரசியமான பதிலை வரவழைக்கிற கேள்விகள் இல்லைன்னு சொன்னார்.

டோண்டு அப்படின்னு ஒரு வார்த்தை இருந்ததுக்கு வந்து குவிஞ்ச கூட்டம் எங்க போச்சுன்னு கூடுதல் வருத்தம் வேற :-(

இன்று இரவு 11:59:59 இந்திய நேரம் வரைக்கும் பார்க்கப் போறோம்.
கேள்விகள் குவிஞ்சா, ஏலேலோ ஐலசா தொடரும். இல்லை என்றால், ஏலேலோ ஐலசா பகுதி ஒன்று - இறுதிப் பகுதி என்பதை அறிந்து கொள்க!

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு
(கூடுதல் தலைப்புகள் மாத்திரம் அல்ல, பதிவும்!)





Monday, February 19, 2007

ஏலேலோ ஐலசா [1]

என் கேள்விக்கென்ன பதில்?
நமீசின்ஷ்ரேத்ரிஷா!
முதல் காதல் தோல்வி

எக்ஸ்ட்ரா தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

பெங்களூரில் சுமார் இரண்டாண்டு காலம் நாங்கள் நடத்தி வந்த புதுப்புனல் இதழின் கேள்வி-பதில் பகுதி நிரம்ப வரவேற்பைப் பெற்றிருந்தது. வலைப்பதிவுகளில் இந்த மாதிரி கேள்வி-பதில் ஆரம்பித்தால் என்ன என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் ஒரு கேள்வியை [!] முன் வைத்தார்கள். எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்கிற ஐயத்தில் பதில் சொல்ல சில விநாடிகள் யோசித்தேன்.

உறுப்பினர்கள் யோசிக்காமல் உடனே கேள்விகளைத் துண்டு சீட்டில் கிறுக்கிக் கொடுத்தனர். அவற்றில் சில கேள்விகளுக்கு என் பதில்களுடன் ஆரம்பித்து விட்டேன் - ஏலேலோ ஐலசா!

வலைப் பதிவுகளில் உங்களை மிகக் கவர்ந்த வலைப் பதிவு எது? [ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும்!]

[பாவிகளா எவ்வளவு நாளா என்னை மாட்டி விடணும்னு காத்திருக்கிறீர்கள்?!]
வலைப் பதிவுகளில் கவர்ந்த வலைப் பதிவுகள் ஏராளம். குழந்தை மாதிரி ஒன்றோடு எல்லாம் நிறுத்திக் கொள்ள முடியாது!
என்னை மிக மிக மிகக் கவர்ந்த வலைப் பதிவு: சுபமூகா பக்கங்கள்!

நாய், எலி, கரப்பான் பூச்சி எதற்கு பயப் படுவீர்கள்?

தெருவில் நடக்கும் போது நாய். கழிப்பறையில் கரப்பான் பூச்சி. இரவு தூங்கும் போது எலி![காலையில் முதல் வேலையாக சிகை அலங்காரக் கடைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபடி படுத்துக் கொண்டேன். காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்க்க தூக்கி வாரிப் போட்டது. கடைக்கு செல்லாமலேயே என் சிகை அலங்காரம் 'முடி'ந்து விட்டிருந்தது! எங்கள் வீட்டு எலி முடியைக் கூட விட்டு வைக்காது!]

உங்கள் முதல் காதல் தோல்வியைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

பச்சைக் கிளி போல் பச்சை கலர் தாவணி போட்டு சிக்கென்று இருந்தாள் அவள். அவளைப் பார்த்ததுமே ஒரு கிக்! பார்த்த இடம்: மருத்துவ மனை! மனசுக்குள்ளேயே அவளுடன் ஒரு நடனம் ஆடி, கடலோரம் வாங்கிய காற்று என்று ஒரு பாட்டும் பாடி.. எம்.ஜி.ஆர் பாணியில் கிழிந்த தாவணியைக் கொண்டு வந்து தாவணி சுற்றாத அவள் மார்பின் மீது அதைப் போர்த்தி விடாதது ஒன்று தான் பாக்கி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, முடியாமல், அவளை நோக்கி ஒரு கண் சிமிட்டினேன்! அவ்வளவு தான். "ஐயோ, இந்தப் பையன் என்னைப் பார்த்து கண்ணடிக்குது!" என்று உரக்கக் கத்தினாளே பார்க்க வேண்டும். பறந்து விட்டேன்! என் பதினோரு வயது ஆட்டோகிராப் இது!

உங்கள் காரில் உங்களுடன் உங்கள் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். காரில் இடம் இல்லை. போகும் வழியில் த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா அனைவரும் ஒரு சேர நின்று லிப்ட் கேட்டால் யாரை இறக்கி விட்டு விட்டு யாருக்கு லிப்ட் கொடுப்பீர்கள்?

த்ரிஷாவை எனக்குப் பிடிக்கும் என்பதை விட என் மனைவி, மகளுக்குப் பிடிக்கும் என்பதால், வேண்டுமானால் என்னையே இறக்கிவிட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள்.
அசின் - அவருக்கு லிப்ட் கொடுக்கவில்லை என்றால் it is a sin!
ஷ்ரேயா - இவருக்குக் கொடுக்கவில்லை என்றால் பெய்யும் 'மழை'யும் நின்று விடாதா?
நமீதா - யார் தான் கொடுக்க மாட்டார்கள்?! நான் கொடுக்கவில்லை எனில், கடவுளின் சாபம் 'நம் மீதா' இல்லையா சொல்லுங்கள்.

அது சரி, என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? குடும்பத்தினரில் ஒருவரை இறக்கிவிட்டு, யாரையாவது ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு நான் இறங்கி விட மாட்டேன். குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்!
நீங்களும் சுவாரசியமான கேள்விகளை அனுப்பலாம். பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

Thursday, February 15, 2007

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!

எழுத்தாளர் ராஜேஷ் குமார் எப்படி வீடு கட்டினார்?
இன்று ஓடுங்கள் - நாளை புன்னகை புரியுங்கள்!
மாற்றான் தோட்டத்து மாங்கனிக்குத் தான் அதீத சுவை!

இணைப்பு தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

புல்லில் பனித் துளி

துளி: 13

கைக்கு எட்டுகிற தூரத்தில் மாங்கனி இருந்தால் பறித்துத் தின்னும் போது அவ்வளவு சுவை இருக்காது. அது மிக உயரத்தில் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், மாற்றான் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் இருக்க வேண்டும். குறி வைத்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும் பழத்துக்கு மிக அருகாமையில் சென்று விட்டு, பழத்தை வீழ்த்தாமல் திரும்ப வேண்டும். ஐந்தாறு முறை விடாமல் முயற்சித்து வெற்றியில் முடிய வேண்டும். அப்போது கைகளில் விழுகிற கனிக்கு இருக்கும் சுவையே அலாதி!

அப்படித்தான் வாழ்க்கையின் அதி அற்புத கனிகள் எல்லாம் கைக்குள் விழாமல் வேடிக்கை காட்டுகின்றன. விடாமுயற்சியும் அடிக்க தோதான கற்களும் இருந்தால் போதும். முக்கியமாக 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்கிற வாக்கியம் மனதிற்குள் புகாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்தத் துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணிச் சில பேர் தான் அதி அற்புத உயரத்துக்கு வருகிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் விரைந்து செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடித் தொற்றிக் கொள்ள இயலாமல் கைவிட்டு விடுகிறார்கள். இன்னும் சிலர் கைப்பிடி கிடைக்கும் உன்னதத் தருணத்தில் ஓடும் வேகம் குறைத்து கீழே விழுந்து காயப் படுகிறார்கள். காயம் படுவது மட்டுமல்ல, திரும்ப ஓடி வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களால் இயலாமல் போய்விடுகிறது.

பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் சிலர் மென்னகை புரிகிறார்கள். அவர்கள் இந்த மாதிரி அடித்துப்பிடித்துக் கொண்டு எல்லாம் ஓடி வந்து ஏறவில்லை. நிதானமாக நடந்து வந்து பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது ஏறி, தங்களுக்கென்று ஒரு இருக்கையையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு பொறாமை வேண்டாம். அவர்களது திட்டமிடும் திறமை தான் அந்த இருக்கையை அவர்களுக்கு அளித்திருக்கிறது.

பேருந்துக்குள் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதிக் கொண்டு, காற்று புகாத இடைவெளியோடு நின்று, பேருந்தின் ஆட்டங்களுக்கு ஈடு கொடுத்துத் தள்ளாடிக் கொண்டிருப்பவர்களையும் பாருங்கள். அவர்கள் எத்தகைய இன்னல்களுக்கு ஆளானாலும் கூட, சரியான நேரத்துக்கு போக வேண்டிய இடத்தை அடையக்கூடிய வாய்ப்பை இழப்பதில்லை.

இது சுழற்சி முறையில் நடக்கிற கூத்து! நாளை இதே பேருந்தில் உங்களுக்கு அருமையான ஒரு இருக்கை கிடைக்கக் கூடும். இன்று உட்கார்ந்து கொண்டு உங்களைப் பார்த்து நகைத்த கண்ணியவான் நாளை பேருந்தைத் தவற விடக் கூட வாய்ப்பு இருக்கிறது. அல்லது, சட்டைமுழுக்கக் கசங்கி இடிபாடுகளில் நின்றபடி உங்களைப் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்!

இதை சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை அமிர்தம் தான்!

அருமையாக திட்டமிட்டு பேருந்தில் ஏறி தனக்கென்று இருக்கையையும் சம்பாதித்துக் கொள்ளும் பெருந்தகை, நாளை பேருந்தைத் தவற விடுவதாவது என்று வியக்க வேண்டாம். அது மிக சாதாரணமாக நடந்தேறி வரும் நிகழ்வு தான்.

சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது, "இப்போதெல்லாம் உங்களது படைப்புகளைக் காண முடிவதில்லையே? எழுதுவதில்லையா?" என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கதைகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. மிக நேர்த்தியான வார்த்தைப் பிரயோகங்களால் மிக அருமையாக ஈர்த்து விடுகிற கதைகள்! பழைய கள் என்றாலும் புதிய மொந்தையில் அதை மறைத்துக் கொடுக்கிறவிதம் தெரிந்தவர்கள் தானே நல்ல எழுத்தாளன் ஆக முடியும்?! அப்படி தூள் கிளப்புகிற பல எழுத்தாளர்களும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விடுவது ஏன்?

"முன்னே மாதிரி எழுத முடியவில்லை. குடும்பம் குழந்தைகள் என்று புதிய வட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட பிறகு நேரம் கிடைப்பதில்லை" என்று வருத்தப் பட்டுக் கொண்டார்.

இது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்கிற மாதிரியான முடிவு இல்லை. 'பழம் இனிக்கும்' என்கிற உண்மை மறையாமல் மாறாமல் மனதிற்குள் இருந்தாலும், ஒரு வித இயலாமையை நாமே நமக்குள் உருவாக்கிக் கொண்டு உழல்கிறோம். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரத்தை அள்ளிக் கொடுத்திருந்தாலும் கூட, ஒரு மணி நேரத்தை அதிலிருந்து திருடிக் கொள்ள ஆசைப்படுவதில்லை!

"வானம் தொட்டு விடும் உயரம் தான்" என்கிற தலைப்பில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் ஒரு தொடரை எழுதியிருந்தார். ஒவ்வொரு எழுத்தாளனும் தவறாமல் படிக்க வேண்டிய தொடர் அது. ஒவ்வொரு நாளும் புகைவண்டிப் பயணம் செய்தாக வேண்டிய வேலையை அவர் செய்து கொண்டிருந்த தருணம். நானாக இருந்தால், களைப்பில் எப்போது ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் என்று துடித்திருப்பேன். அவர் புகை வண்டியில் ஏறி அமர்ந்தவுடன், பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு, வெள்ளைத் தாளை எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்து விடுவாராம்! சக பயணிகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்களாம். அப்படி அவர் விடா முயற்சி செய்ததால் தான் அவரால் நிறையஎழுத முடிந்தது. கதை எழுதி வந்த பணத்தை வைத்து தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள முடிந்தது.

அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.

நம்மால் முடியும் என்கிற சந்தேகமற்ற நம்பிக்கை - அது முக்கியம். அது இருந்தால் தான் கல் கிடைக்கும் போது இலக்கு பிசகாமல் உயர இருக்கிற மாங்கனியை வீழ்த்தி கைக்குள் கொண்டு வர முடியும்!

நன்றி: http://tamil.sify.com

Monday, February 12, 2007

தேன்கூட்டை உருவாக்கிய தேனி இன்று இல்லை!

கல்யாண் மரணச் செய்தி அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுக்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

வருத்தத்துடன்,
சுபமூகா

Tuesday, February 06, 2007

திரைப் பட வசனகர்த்தாக்கள் / எழுத்தாளர்கள் கவனிக்க




"ரயில்வே கேட் போட்டிருந்தா பஸ்ஸா இருந்தாலும் சரி, காரா இருந்தாலும் சரி, ரயில் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணித் தான் தீரணும். ஆனா, இந்த ரயில் இருக்கே, எந்த பஸ்ஸுக்காகவும் காருக்காகவும் வெயிட் பண்ண வேண்டியதில்லைம்மா.
வெயிட் பண்ண வேண்டியதில்லை!"


இப்படி எல்லாம் வசனம் எழுத வேண்டாம் என்று சொல்ல இந்தப் பதிவு!

[தலைப்பு உபயம் / படம் காட்ட ஐடியா : சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]

Tuesday, January 30, 2007

உண்மையில் அது போலி

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு - இன்னொரு கிளையின் அமோக ஆரம்பம்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
நான் அவனில்லை!
இந்து முஸ்லீம் கிறித்தவர்கள் - இவர்களுக்கும் எனக்கும் இருக்கும் தூரம்!

தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு


வணக்கம் நண்பரே! [நண்பியே! ;-) ]

நான் அதிகமாக யாருக்கும் பின்னூட்டம் இடுவது கிடையாது. 'அட!' என்று என் மனதைக் கவரும் பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் இடுவேன். [அதுவும் வருடத்துக்கு ஒன்று இரண்டு!]

இந்து முஸ்லீம் கிறித்தவர் என்று வார்த்தை கண்ணில் பட்டால் மேற்கொண்டு படிக்கக் கூட மாட்டேன்!

கெட்ட வார்த்தைகள் - 'அப்படீன்னா?' என்று கேட்கக் கூடிய அபூர்வப் பிறவி. அந்த வார்த்தைகளுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்.

சரி, சரி, எதுக்கு இவ்வளவு முன்னோட்டம்?

உங்கள் பதிவுகளில் இனி என் பெயரில் ஏதாகிலும் பின்னூட்டம் வந்தால் அதில் எக்கச்சக்கச்சக்க கெட்ட வார்த்தைகள் இருந்தால் தயவு செய்து வெளியிட வேண்டாம். அது நானில்லை, மண்டபத்தில் யாரோ வேலை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிக!

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவுக்கு போட்டியாக 'சுபமூகா' என்கிற பெயருக்கு விளம்பரம் கொடுக்கும் அந்தப் புண்ணியவான் நீடூழி வாழ்க! ;-)

Thursday, January 25, 2007

ரகசிய மெயில்

ரகசியமாய் ஒரு ஈமெயில் - அனுப்ப முடியுமா?


டோண்டு ராகவனுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி?


தேன்கூட்டில் தமிழ் மணத்தில் பதிவுகள் மாயம்!

[தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]

கசியமாய்.. ரகசியமாய்..

ஏதாவது செய்தி அனுப்ப வேண்டுமா? வந்து விட்டது புதிய ஈமெயில் வசதி!


நீங்கள் அனுப்ப வேண்டிய ரகசிய செய்தியை தட்டச்சி ஈமெயில் முகவரி கொடுத்து அனுப்பு என்று சொன்னால் போதும். பெறுநர் அந்த செய்தியைப் படித்து முடித்ததும் அந்த ஈமெயில் வந்த சுவடு தெரியாமல் அழிக்கப் பட்டு விடும். அங்கு மாத்திரம் அல்ல, அனுப்புநரிடம் கூட அந்த ஈமெயில் இருக்காது.


மக்கள் என்னென்ன மாதிரி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!!


நினைத்துப் பாருங்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் என்னென்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் வரக் கூடும்?!!

  1. அன்பு காதலன் தான் தேர்ந்தெடுத்த புதிய காதலிக்கு [ ;-) ] காதல் கடிதம் எழுதி தைரியமாக அவளிடம் கொடுக்கிறான். அவள் கோபமாக வாங்கி படிக்கிறாள். படித்து முடிக்கும் போது அவள் கையில் கடிதம் இருக்காது!
  2. அலுவலகத்தில் ஊதிய உயர்வு கடிதம் கைக்கு கிடைக்கிறது. தொகையைப் பார்த்து விட்டு, இப்போது வாங்கும் சம்பளத்தை விட இது எவ்வளவு அதிகம் என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொண்டே கண்களை மூடி ஒரு விநாடி சிந்தித்து விட்டு கண்களைத் திறப்பதற்குள் கடிதம் மாயம்!
  3. வங்கியில் காசோலை கொடுத்து டோக்கன் வாங்கி, டோக்கன் கொடுத்து பணம் வாங்கி எண்ணி முடிக்கும் போது, காசோலை காணலை [காணவில்லை]!
  4. தமிழ் மணமோ, தேன் கூடோ எங்கோ ஓரிடத்தில் இந்து மதம், இந்த மதம், அந்த மதம் என்று ஒரு பதிவைப் படித்து முடித்ததும் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்ய்க்க்க்க்.. பதிவு எங்கோ ஓடி ஒளி[ழி]ந்து விட்டது.
  5. டோண்டு ராகவன் பதிவுக்கு தைரியமாக பின்னூட்டம் இடலாம். வாசகர் பின்னூட்டத்தைப் படித்து முடித்ததும் அது மறைந்து விடும்!

Thursday, January 18, 2007

சால்ட் லேக் நகர் வலம்


ப்ரோவோவில் இருந்து சால்ட்லேக் [யூட்டா - அமெரிக்கா] சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு.

சிறு மீன் போதும்!

புல்லில் பனித் துளி

துளி: 12


தவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். கதவில் சிறு அசைவு தெரிந்தாலும் கவனியுங்கள்.


அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்பது புரிபடாத ஒரு நிகழ்வு. கதவைத் தட்டிய அடுத்தவிநாடியே அந்தப் பரிசை நிராகரிக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் படிகளைக் கடந்தவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது இந்த உண்மை புரிபடும்.


பெரிய மீன் வரட்டும் என்று ஒற்றைக்கால் கொக்காக இருக்காமல் கிடைத்த சிறிய மீனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, பட்டினியில் கீழே விழாமல் தற்காத்துக் கொள்ளுங்கள்.


கிடைக்கிற எந்த சிறிய வாய்ப்பையும் தவற விடாமல் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிற இந்த வித்தையை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது தூரத்து உறவினர் ஒருவர். சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் எனக்கு பரிச்சயமான அவர் முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விட்டார்.


நான் அப்போது தான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி விட்டு முடிவுக்காகக் காத்திருந்தேன். சென்னையில் பிரபல தொழிலகம் ஒன்றில் வேலை காலி இருப்பதாக அன்றைய செய்தித் தாளில் விளம்பரம் வெளியாகியிருந்தது. பட்டதாரிகளுக்கு முதலிடம். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப் படும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.


உடனே என்னை அந்த வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னார். நான் திருதிருவென்று விழித்தேன் என்றே சொல்ல வேண்டும். அந்த வேலைக்கான தகுதி ஒன்றுமே எனக்கு இல்லாத போது எப்படி அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தயங்கினேன்.


"இன்னும் ரிஸல்ட்டே வரலை மாமா!" என்று இழுத்தேன்.


"நல்லா எழுதியிருக்கே தானே?" என்றார்.


"ம்.." என்றேன்.


"பின்னே? நல்ல மார்க் வரப் போகுது. நீ வேலையில் சேரப் போறே!" என்றார் விடாப்பிடியாக.


இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை நடுவில் புகுந்தார்.


"உங்களுக்கு யாரையாவது அந்த ஃபேக்டரியில் தெரியுமா என்ன?" என்று தன் சந்தேகத்தை எடுத்து வைத்தார்.


"என்ன நீங்க? உங்க மகனுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். எந்த ரெக்கமெண்டேஷனும் தேவையில்லை!" என்று மேசையில் அடிக்காத குறையாக சொன்னார்.


"நம்பிக்கை வேணும். இந்தக் காலப் பசங்களுக்கு அது இல்லை. நம்பிக்கை இருந்தா கண்டிப்பா சாதிக்கலாம்!"


சொன்னவர் அப்படியே கழன்று கொள்ளவில்லை. தானே போய் எனக்காக விண்ணப்பத் தாளை தட்டச்சு செய்து கொண்டு வந்து, என்னிடம் ஒரே ஒரு கையொப்பம் மட்டும் வாங்கிக் கொண்டு, தானே தபால் தலை ஒட்டி, தானே போய் தபால் பெட்டியிலும் போட்டுவிட்டு வந்தார்.


"எழுதி வச்சுக்க. முதல் மாத சம்பளத்தில் எனக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்கணும். ஓகே?"


னக்கு நம்பிக்கையின் முதல் துளியை இரத்தத்தில் சேர்த்த நிகழ்ச்சி இது. சினிமாவில் நடக்கிற மாதிரி எல்லாம் உடனே வேலை எல்லாம் கிடைக்கவில்லை தான். ஆனால் அருமையான உற்சாக டானிக் குடிக்கக் கிடைத்து விட்டது.


அந்த நம்பிக்கை தான் எனக்கு முதல் வேலையை வாங்கிக் கொடுத்தது. அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.

அக்கவுண்ட்ஸுக்கும் பி.எஸ்.சி பட்டதாரியான எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று விட்டிருக்கலாம் தான்.


விண்ணப்பித்துப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன்.


நேர்முகத் தேர்வில் முக்கியமான தகுதியே இல்லை என்று உதடு பிதுக்கப் பட்ட போது, என் மதிப்பெண்கள் மற்றும் மற்ற தகுதிகளை எடுத்துச் சொல்லி அந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு விட்டேன். எனக்கே எனக்காக ஒரு புதிய வேலையையே உருவாக்கி விட்டார் அந்தப் புண்ணியவான்.


அப்படித்தான் எனக்கு அதிர்ஷ்டம் மோதிரம் போட்டுக் கொண்டிருந்த விரலால் கதவைத் தட்டியது.


அன்று கிடைத்த சின்ன மீன் என்னை மயங்க விடாமல் காப்பாற்றி பெரிய மீன் கிடைத்த போதுகெட்டியாக அதைப் பற்றிக் கொள்ளத் தெம்பையும் அளித்தது.


திருச்சி புனித வளனார் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டம். அதில் பங்கு பெற வாய்ப்பு கிடைப்பதே ஒரு பெரிய பாக்கியம். சல்லடை போட்டுத் தேடி ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அங்கிருந்த விடுதியில் மற்றும் என்.எஸ்.எஸ் முகாம்களில் நான் நாடகங்களில் நடித்திருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நாடகம். பெண் வேடம்!


மீசையை இழக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு வருத்தத்தைத் தவிர மற்றபடி குதிக்காத குறை தான்.


முதல் நாள் ஒத்திகைக்கு போன போது எனக்கு வருத்தமான செய்தி காத்திருந்தது. ஐந்தே ஐந்து நிமிடங்கள் வந்து போகிற மாதிரியான வேடம் அது என்று சொன்ன போது கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் 'சரி' என்று ஒப்புக் கொண்டேன்.


நாடகத்தில் இரண்டு பெண் வேடங்கள் இருந்தன. முக்கிய பெண் வேடம் அந்த நாடகத்துக்கே உயிரூட்டக் கூடிய வேடம். ஒவ்வொரு வசனமும் நகைச்சுவையில் ஊறி வெளிப்படும். அந்த அம்சமான வேடம் எனக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று மனதுக்குள் பொருமித் தீர்த்தேன்.


நாடகத்தை இயக்கிய தமிழாசிரியருக்கு என் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கு மிகவும் பிடித்தமான இன்னொரு மாணவருக்கு அந்த வேடத்தை அளித்து விட்டார்.


அந்த மாணவரும் அருமையான நடிகர் தான். அவர் அந்த வசனங்களை சொன்ன போது, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் தான். ஆனால் என்னவோ ஒரு செயற்கைத் தனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. வேடம் கிடைக்காத கோபத்தில் அப்படி தோன்றுவதாக எனக்கு நானே திட்டிக் கொண்டு, சமாதானப் பட்டுக் கொண்டேன்.


மற்றவர்கள் அவரவர் வேடத்துக்கான வசனங்களைப் பேசி முடித்து விட்டு கேண்ட்டீன் பக்கம் போய் விடுவார்கள். நான் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசி விட்டு எங்கும் போகாமல் முழு நாடக ஒத்திகையையும் பார்ப்பேன். சில சமயம் அந்தப் பெண் வேட நண்பன் வசனத்தை மறக்கும் போது உடனே என் ஞாபகத்திலிருந்து எடுத்துக் கொடுப்பேன். அவ்வளவு அழகாக வசனங்கள் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. அது மட்டுமில்லை, முற்றிலும் மாறுபட்ட நடிப்போடு என் மனசுக்குள் அந்தப் பெண் வேடம் புகுந்து விட்டிருந்தது.


நாளை நாடக அரங்கேற்றம். அந்த திடுக்கிடும் செய்தி வந்தது. பெண் வேடம் ஏற்ற அந்த நண்பனின் தாயார் இறந்த செய்தி தான் அது!


காலை அவசரக் கூட்டம் கூட்டப் பட்டது. கல்லூரி முதல்வரிடம் கலந்தாலோசித்து விட்டு வந்த நாடக இயக்குனர் இறுகிய முகத்தோடு சொன்னார்.


"நாடகம் ரத்து செய்யப் பட்டது. அதற்கு பதிலாக இன்னும் இரண்டு நடன நிகழ்ச்சிகளும் ஒரு மிமிக்ரி நிகழ்ச்சியும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்!"


நான் எழுந்தேன். "அந்த வேடத்தை நான் செய்யலாமா?" என்று அனுமதி கேட்டேன்.


இயக்குனர் என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்தார்.


"அவ்வளவு சுலபமான விஷயமில்லை அது. அவனே எவ்வளவு கஷ்டப் பட்டு கிட்டிருக்கான் தெரியும் தானே? நாடகத்தோட முக்கிய வேடம் அது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வசனங்கள் அந்த கேரக்டர் பேசக்கூடியவை! எப்ப ரிகர்சல் பண்ண முடியும்? சாயங்காலம் நாடகம்!" என்றார்.


"ஒரே ஒரு ரிகர்சல் பார்ப்போம். உங்களுக்கு பிடிக்கலைன்னா வேணாம்!" என்றேன் நான். நண்பர்கள் எல்லோரும் எனக்கு ஆதரவளித்தார்கள்.


"முக்கிய விஐபிகள் வர்றாங்க. எல்லா கல்லூரிகளிலிருந்தும் எக்கச்சக்க மாணவர்கள் வருவாங்க. அவங்க முன்னாலே ஒரு சின்ன தவறு நடந்தாலும் கூட அது கல்லூரிக்கே அவப் பெயரிலே வந்துமுடியும். சாரி!" என்று மறுத்து விட்டார்.


அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் குறுக்கிட்டார்.


"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்.


"சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.


இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.


ன்று மாலை நாடகம் இனிதே அரங்கேறியது. நான் என் மனதிலிருந்த அந்த நகைச்சுவைப் பெண்ணை மேடையில் ஏற்றி அழகு பார்த்தேன். ஒவ்வொரு வசனத்துக்கும் கைத்தட்டல் வானைப் பிளந்தது. ஒரு சில காட்சிகளில் அந்த ஓசை அடுத்த வசனத்தையே மறக்கடித்து வேடிக்கை காட்டியது!


நான் முன்பு செய்த அந்த ஐந்து நிமிட பெண் வேடத்துக்கு என் நண்பன் அறைக் கதவை அதிர்ஷ்டம் தட்டியதையும் இங்கு சொல்லியாக வேண்டும்!

நன்றி: http://tamil.sify.com

Monday, January 15, 2007

பயக்க வயக்கங்கல்




அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக்
கொல்ல வேன்டும்?!



மேலும்..

Friday, January 12, 2007

F1

புல்லில் பனித்துளி
துளி: 11



பிறருக்கு F1 செய்வது, அதாவது உதவி செய்வது மிக முக்கியம். ஆனால் சரியாக உதவி செய்கிறோமா என்று கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

அது என்ன சரியாக?

நான் மிகப் பிரபலமான அந்தத் தொழிலகத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களாகியிருந்த சமயம். Telephone-cum-Telex Operator!

இதற்கு முன் ஒரு டிராவல் ஏஜென்சியில் மூன்று வருடங்கள் General Clerk ஆக இருந்தேன். General Clerk என்றால் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று பொருள்.

'ஒரு லெட்டர்' என்பார் பாஸ். ஷார்ட் ஹேண்ட் பேட் சகிதம் போய் அவர் முன் உட்காருவேன். ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரியாது. லாங் ஹேண்ட் தான். ஒரு பந்தாவுக்கு ஷார்ட் ஹேண்ட் பேட்.

கவுண்ட்டரில் இருந்த பெண் சாப்பிட வெளியே போய் விட்டாள். ஒரு டிக்கெட் உடனடியாக வேண்டும். 'கணேஷ், ஏர் புக்கிங்' என்பார்கள். கவுண்ட்டரில் உட்கார்ந்து டிக்கெட் தயார் செய்வேன்.

'கணேஷ், ஒரு பன்னிரண்டு ரூபாய் எங்கேயோ இடிக்குது' என்பார் அக்கவுண்டண்ட். 'இதோ, இங்கே' என்று கண்டுபிடித்து சரி செய்வேன்.

திடீரென்று முப்பது பெட்டிகள் கார்கோ வந்திறங்கும். 'கொஞ்சம் கை கொடுப்பா' என்பார்கள். எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற்றி இறக்க உதவுவேன். தபால் எடுத்து செல்பவர் விடுப்பு எடுத்தால் frank ஆன ஒரே ஆள் என்று என்னை franking செய்யச் சொல்வார்கள்.

ஒரு நாள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை. யாருக்கு சொல்வது என்பதில் குழப்பம். எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். கோரஸாக ஒரே குரலில் 'கணேஷ்' என்றார்கள்!

அது தான் General Clerk!


அப்படித்தான் நான் டெலக்ஸ் எப்படி அனுப்புவது என்று கற்றுக் கொண்டேன். டெலக்ஸில் யாரையும் உட்கார விட மாட்டார்கள். முரளி என்று ஒரு ஸ்டெனோகிராபர் இருந்தார். அதி பயங்கர வேகத்தில் டெலக்ஸ் அனுப்புவார். அவர் பின்னால் நின்று கொண்டு அவரது விரல்கள் ஆடும் நாட்டியத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.


அப்போதெல்லாம் மெக்கானிக்கல் டெலக்ஸ் தான். எண்கள் மற்றும் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் வேறு வேறு விதமாக பட்டன்களை உபயோகிக்க வேண்டியிருந்தது. வார்த்தைகள் எல்லாவற்றையும் தந்தி போல் சுருக்கி டைப் செய்ய வேண்டியிருந்தது.

வேலை அவ்வளவாக இல்லாத போது நான் கொஞ்சம் கொஞ்சமாக டெலக்ஸ் அனுப்புவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். வந்தது வம்பு. முரளிக்கு அருமையான வேலை கிடைத்து ராஜினாமா செய்து விட, அந்தப் பணியும் என்னிடம் வந்தது.

அப்படி கற்றுக் கொண்ட அந்தப் பணி தான் பின்னாளில் எனக்கு அந்தப் பெருமைக்குரிய தொழிலகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தது. 'வருகிற எந்த வாய்ப்பையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்று நான் பார்க்கிற எல்லோருக்கும் இந்த ஒரு நிகழ்ச்சியையே உதாரணமாகக் காட்டி சொல்வேன்.

மெக்கானிக்கல் டெலக்ஸ் போய் எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!
எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸும் போய் கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!!

ஒரு நாளுக்கு நூறிலிருந்து நூற்றி ஐம்பது டெலக்ஸ் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்த சமயம். அப்போது தான் எங்களது பிரிவில் வேலை செய்ய இன்னொரு ஆள் தேவை என்று விளம்பரம் செய்தார்கள்.

முக்கிய தகுதி - கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிகிறவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். ஆகையால் அந்தப் பணி தெரிந்தவர்கள் யார் வந்தாலும் சுலபமாகத் தேர்வாகி விடுவார்கள் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். 'அப்படி யாரும் வரவில்லை என்றால் நல்ல Telephone Operatorஐத் தேர்வு செய்து விட்டு அவரை டெலக்ஸில் பணிபுரியத் தயார் படுத்தி விட வேண்டியது தான்!' என்று எங்கள் மேலாளர் சொன்னதைப் பக்கத்துப் பிரிவில் இருந்த ஒருவர் கேட்டு விட்டார்.

மதிய உணவு வேளையில் என் முன் வந்து உட்கார்ந்தார். "கணேஷ், நீ எப்படியாவது உதவி பண்ணனும்!" என்று ஆரம்பித்தார்.

அவரது தூரத்து உறவினரான ஒரு பெண்மணிக்கு நான் உதவ வேண்டும் என்றார். "என்ன உதவி?" என்றேன் சற்று தயங்கி.

"அந்தப் பொண்ணு Telephone Operatorஆ வேலை செஞ்சுகிட்டிருக்கா. ரொம்ப கம்மியா உதவித் தொகை மாதிரி என்னமோ கொடுத்துகிட்டிருக்கான். அவளுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைக்கிற மாதிரி பண்ணப்பா. கோடி புண்ணியமாப் போகும். அவங்க குடும்பம் ரொம்பக் கஷ்டப் படற குடும்பம்" என்றார்.

"கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரியுமா?" என்று முதல் அஸ்திரத்தை உபயோகித்தேன்.

"டெலக்ஸ் தெரியும்"

"கம்ப்யூட்டர் டெலக்ஸ்?"

"என்னப்பா, எல்லாம் ஒண்ணு தானே? என்ன பெரிய மாற்றம் இருக்கப் போகுது?" என்றார் ரொம்ப பவ்யமாக.

"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அது வேற, இது வேற" என்று சொல்லிக் கொண்டே என் அறைக்குள் நுழைய, அவரும் பின் தொடர்ந்தார்.


"உள்ளே அனுமதியில்லை சார்" என்றேன். "யாராவது பார்த்தால் என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்" என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாதிரி அவர் அந்த கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் போய் நின்று அதையே உற்றுப் பார்த்தார்.

"டைப் ரைட்டர் மாதிரி தான் இருக்கு! என்ன பெரிய கம்ப்யூட்டர் டெலக்ஸ்?" என்றார் சிரித்து.

இந்த ஆளை என்ன பண்ணுவது என்கிற பாவத்தில் பாவமாக அவரைப் பார்த்தேன்.



"கணேஷ், சின்ன உதவி பண்ணப்பா. எந்த எந்த பட்டனைத் தட்டினா என்னென்ன ஆகும்னு மாத்திரம் சொல்லிக் கொடப்பா. மத்ததை நான் பார்த்துக்கறேன். ப்ளீஸ்!" என்றார்.

"சார், அது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை சார். மெஸேஜ் எடிட் பண்றதுக்கு ஒரு கீ, சேவ் பண்றதுக்கு ஒரு கீ, அனுப்புறதுக்கு ஒரு கீ, வேணாம்னா டெலீட் செய்ய ஒரு கீ, ஷெட்யூல் பண்ண ஒரு கீ, பிரிண்ட் எடுக்க ஒரு கீ. இப்படி எக்கச்சக்க கீ!" என்று பச்சைக் கிளி மாதிரி சொல்லிப் பார்த்தேன்.

"பாரு, நீயே சொல்லிட்டே. அந்த கீ, இந்த கீ.. அப்படீன்னு. அதையெல்லாம் ஒவ்வொண்ணா சொல்லு. நான் எழுதிக்கிறேன். அவளை மனப்பாடம் பண்ணிக்க சொல்லிட்டா ஆச்சு. ஜமாய்ச்சுடலாம்" என்றவர் பக்கத்திலிருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து வைத்துக் கொண்டு தயாராகி விட்டார்.

நான் அவரையே பார்க்க, "சொல்லுடா கண்ணா!" என்றார் கொஞ்சி.

ஒரு நிமிடம் யோசித்தேன். உதவி செய்வதில் என்ன தவறு? அதுவும் ஒரு பெண்ணுக்கு!! கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்த புதிதில் நானும் தலைகீழாக நின்று தானே கற்றுக் கொண்டேன்! பாவம், உதவி செய்து விடுவோம்.

"எழுதிக்குங்க சார்" என்றேன் உற்சாகத்தோடு.

"F2: Edit, F3: Save, F6: Schedule, F7: Print, F10: Exit" என்றேன்.

ரொம்பப் பொறுமையாக அழகாக எழுதினார்.

"திவ்யா செலக்டட்" என்றார் குஷியாக!

'திவ்யா, பெயர் நல்லாத் தான் இருக்கு!' என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவர் நகர்ந்ததும், 'எப்படி இருப்பாள் திவ்யா?!!'

சரி, முதல் வரிக்கான சம்பவத்துக்கு வந்து விடுகிறேன்.
இண்டர்வியூ தினம் வந்தது.
திவ்யாவின் முறையும் வந்தது.

அழகான தேவதை போல் அவள் அறைக்குள் நுழைந்தாள்.

எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். நான் என் பெயரைச் சொன்னதும் அவளது கண்கள் மூன்று நான்கு விநாடிகள் என் முகத்தில் நீந்தி விட்டுக் கடந்தன. நண்பர் என் பெயரை சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

எங்கள் மேலாளர் கணீர் குரலில் ஆரம்பித்தார்.

"கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறதா?"

"ஓ!" என்றாள் திவ்யா கண்களை அகல விரித்து. என் பக்கம் வேறு ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.

அவளை கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்காரச் சொன்னார். திவ்யா பரத நாட்டிய அபிநயங்களோடு நடந்து சென்று கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்கார்ந்து கொண்டாள்.

ஒரு முறை 'டைப்ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்து விட்டு மனதுக்குள் சமாதானப் பட்டது போல் எனக்குத் தெரிந்தது.

"எவ்வளவு வருடங்களாக கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணி புரிந்திருக்கிறீர்கள்?" என்றார் மேலாளர்.

"மூன்று வருடங்கள்" என்றாள் திவ்யா பளிச்சென்று.

"மூன்று வருடங்கள்?" என்றார் மேலாளர் கேள்விக்குறியைச் சேர்த்து.

"பெங்களூருக்கு கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அது எப்படி மூன்று வருடங்கள்?" என்றார் ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாக உச்சரித்து.

"கம்ப்யூட்டர் டெலக்ஸ்? அது ஒரு வருடம் தான். நான் சொன்னது ஆர்டினரி டெலக்ஸ்!" என்றாள்.

"ஆர்டினரி டெலக்ஸ்? யூ மீன் மெக்கானிக்கல்?" என்றார் திருத்தி.

"எஸ், எஸ்.." என்றாள் அவசரமாக!

'அடி பாவி, அப்படியென்றால் உனக்கு மெக்கானிக்கல் டெலக்ஸ் கூடத் தெரியாதா?!'

நினைத்தவன் ஏதோ நானே இண்டர்வியூ செய்யப் படுவது போல் நடுங்க ஆரம்பித்தேன்.

"சரி, ஒரு டெலக்ஸ் மெஸேஜ் அனுப்பிக் காட்ட முடியுமா?" என்று தயாராக இருந்த ஒரு செய்தியை எடுத்துக் கொடுத்தார்.

திவ்யா உடனே விமானம் ஓட்ட ஆரம்பித்தாள்.

"F2 for Edit, F3 for Save, F5 இல்லை, இல்லை, சாரி, F6 for Schedule, F7 for .."

"ஓகே, ஓகே" என்று இடை மறித்தார் மேலாளர். "எங்கே, எடிட் செய்து காட்டுங்கள்" என்றார்.

திவ்யா பதவிசாக உட்கார்ந்து கொண்டாள். திரும்ப ஒரு முறை அந்த 'டைப் ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாள்.

தேடிக் கண்டுபிடித்து 'F' என்ற பட்டனைத் தட்டிவிட்டு, தேடிக் கண்டுபிடித்து '2' என்ற பட்டனையும் தட்டிவிட்டு "F2 for Edit" என்று கூறிப் புன்னகைத்தாள்!



[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, January 03, 2007

இரண்டு மணி நேரத் திட்டங்கள்

புல்லில் பனித்துளி
துளி: 10


ன்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்றே முடித்து விட வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கடைபிடிக்க மறுக்கும் விஷயம்.

'என்ன, ஒரு அஞ்சு நிமிட வேலை. நாளை காலையில் செய்தால் ஒன்றும் தலை முழுகிப் போகாது' என்று ரொம்ப தைரியமாக இருப்பவர்கள் நம்மில் மிக அதிகம். மேலாளர் விடாமல், 'அஞ்சு நிமிடம் தானே ஆகும்? முடிச்சுட்டு அஞ்சு நிமிடம் கழித்து போ!' என்று சொல்வார். 'சார், காலையில் 8-55க்கு எல்லாம் வந்து முடிச்சுடுறேன்' என்று அந்த வலையிலிருந்தும் தப்பி நழுவும் மீன்கள் நிறைய!

நான் வேலை பார்த்த பழைய அலுவலக மேலாளர் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை உணர்வு கொண்டவர். அவருக்கு இன்று முடிக்க வேண்டிய வேலை முடிந்திருக்கிறதா என்று பார்ப்பதை விடவும், நாளை காலை முதல் இரண்டு மணி நேரத்துக்கான வேலைகள் முடிந்திருக்கிறதா என்று கவனிக்க மிகவும் விருப்பம்.

நாளை இரண்டு மணி நேர வேலைகளா என்று நீங்கள் அதிசயிப்பது தெரிகிறது. ஆமாம். காலை 9 மணி முதல் 11 மணி வரை என்னென்ன வேலைகள் முடிய வேண்டும் என்று முன் யோசனை செய்து பட்டியலிட்டு, அதை எல்லாவற்றையும் இன்றே முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும். ஏனெனில், அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்துடன் எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. ஒருவேளை, பணியாளர் வரவில்லை எனினும் பாதகமில்லை என்கிற கருத்து உடையவர்.

இப்போதே நாளைய வேலையையும் முடித்து விட்டால் காலை 9 மணிக்கு வந்து என்ன செய்வதாம் என்று நீங்கள் அங்கலாய்க்க வேண்டாம். 11 மணி முதல் 1 மணி வரை என்ன வேலை இருக்குமோ அதை செய்யலாம்!

எந்த நேரத்திலும் எந்த விதமான குறையுமின்றி நடக்க வேண்டிய எல்லா வேலைகளும் முடிந்திருக்கும். அடுத்த நாளுக்கான இரண்டு மணி நேர வேலையும் முடிந்து விட்டதெனில், இந்த வேலைகளை இன்னும் எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்று திட்டமிட்டு புதிய ஆலோசனைகளை வழங்கச் சொல்வார். காரியம் முடிந்து விட்டது என்று ஆறு மணிக்கு முன் அலுவலகத்தை விட்டு வெளியேற விடமாட்டார்.

இரவு எட்டு மணி வரை அலுவலகத்திலேயே பழியாகக் கிடப்பார். ஒரு வேளை அடுத்த நாள் மாலை ஐந்து மணி வரைக்கான வேலைகளை முடித்து விட்டு கிளம்புவார் போல என்று நான் நினைப்பதுண்டு.

"இந்த மனுஷனுக்கு பெண்டாட்டி இல்லையா? இங்கேயே கிடந்து மாஞ்சுகிட்டிருக்காரே?" என்றேன் நண்பனிடம் ஒருநாள். "பெண்டாட்டி இருக்காங்க. அதான் விஷயம்!" என்றான் கண்ணடித்து.


மும்பை அலுவலகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை ஃபாக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு, உடனே தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்வார்.

"நந்தினி எப்படி இருக்கீங்க? ஒரு ஃபாக்ஸ் அனுப்பினேன். வந்ததா?" என்று ஆரம்பித்து, முழு ஃபாக்ஸ் செய்தியையும் படித்து விடுவார்.

"சொல்ல முடியாது. ஃபேக்ஸ் சரியா போனதா இல்லையா, யாருக்கு தெரியும்? அதான் டபுள் செக் செய்துடணும்" என்பார்.

வர் ஒருமுறை அலுவலக வேலையாக டெல்லிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. டெல்லி வரை விமானத்தில். அங்கிருந்து புகை வண்டியில் நான்கு மணி நேரப் பயணம்.

நான்கு நாட்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அழகாக திட்டமிட்டு விட்டுக் கிளம்பினார். அந்த நான்கு நாட்கள் திட்டத்துக்கு எங்கள் முழுக் குழுவும் பெரும் அல்லோலகல்லோலத்துக்கு உள்ளானோம் என்பதை சொல்லத் தேவையில்லை.

அவர் கிளம்பிய நாள் கேக் வெட்டிக் கொண்டாடாத குறை. 'அப்பாடி, அந்த சனியன் அவஸ்தையிலிருந்து இன்னும் ஐந்து நாட்கள் விடுதலை!' என்று எல்லோரும் குதிகுதி என்று குதித்தோம்.

நான் உரக்க, "பாலா, நாளை காலை 11 மணி வரை செய்ய வேண்டியதையெல்லாம் முடிச்சாச்சா?" என்றேன்.

"இன்னும் அஞ்சு நாளுக்கு பண்ண வேண்டிய காரியம் எல்லாம் முடிச்சாச்சு சார்!" என்றான் பாலா பவ்யமாக.

அன்றைக்கு சீக்கிரம் கிளம்பலாமா என்று திட்டம் போட்டோம். சொல்ல முடியாது, திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டால் மாட்டுவோம் என்று அந்த நினைப்புக்கு நாங்களே தடை போட்டுக் கொண்டு விட்டோம்.

ங்கள் மேலாளரின் திட்டங்கள் சரியாக நடந்தேறி ஐந்தாம் நாள் ஊருக்குக் கிளம்பினார். டெல்லியில் இரவு எட்டு மணிக்கு விமானம். புகைவண்டி நான்கு மணிக்கெல்லாம் டெல்லி வந்தடையும். ஒரு வேளை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தாமதம் ஆனாலும் எந்தவித இடையூறுமின்றி விமானத்தைப் பிடித்து விடலாம் என்று அதிஅற்புத திட்டத்தைப் போட்டிருந்தார்.

டெல்லியை அடைய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் போது, அவர் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தேறியது. ஒரு சிறிய ஸ்டேஷனில் புகைவண்டி நின்றிருந்தது. எக்ஸ்பிரஸ் வண்டி எதற்காக இங்கு நிற்க வேண்டும் என்று குழம்பிப் போனார் எங்கள் மேலாளர். பதினைந்து நிமிடங்களாகியும் வண்டி கிளம்பாததால் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தார். எதிரே வந்து கொண்டிருந்த புகைவண்டியின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விட்ட செய்தி கிடைத்தது.

எங்கள் மேலாளருக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் இருந்த எஸ்-2 பெட்டியிலிருந்து இறங்கி முழு பிளாட்பாரத்துக்கும் அலைந்தார். குட்டி போட்ட பூனை இவரை பார்த்திருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போயிருக்கும்.

எதிரே வந்த ரயில்வே பணியாளர் ஒருவரைக் கூட விடாமல் கேள்வி கேட்டு உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

முக்கிய கேள்வி - ஒரு பெட்டியை தண்டவாளத்தில் மேலேற்ற எவ்வளவு நிமிடங்கள் பிடிக்கும்?

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன் நெற்றிக் கண்ணைத் திறக்கலாமா என்று யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

"என்ன சார்? உங்க கையிலிருக்கிற பெட்டி மாதிரி கேட்கிறீங்களே? இது ரயில் பெட்டி சார்!" என்று சொல்லி விட்டு நடையைக் கட்டி விட்டார்.

எஸ்-2 பெட்டியில் ஏறி, பக்கத்து பயணியைப் பார்த்து விட்டு, தன் கடிகாரத்தையும் பார்த்து விட்டு, 'எட்டு மணிக்கு ஃப்ளைட்!" என்றிருக்கிறார்.

"நீங்க போன மாதிரி தான்!" என்று அந்த பக்கத்து சீட்டு வழுக்கைத் தலை ஆசாமி சொல்லி விட, மீசையை முறுக்கிக் கொண்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார்.

'இப்போது மணி இரண்டு நாற்பத்தைந்து. ஸ்டேஷனுக்கு வெளியே செல்ல, அப்புறம் பஸ் பிடிக்க, மூன்று மணி. அதிக பட்சம் மூன்று மணி பதினைந்து நிமிடங்கள்!' என்று கணக்கு போட்டுக் கொண்டே வெளியே வந்து விட்டார்.

ஆனால், அந்த கிராமத்தில் பஸ் வசதி கிடையாது. அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் போனால் ஒரு சிறு நகரம். அங்கு பஸ் இருக்கிறது என்று ஒரு குதிரை வண்டிக் காரர் சொல்ல, வண்டியில் ஏறி விட்டார். பேசியதற்கு மேல் பத்து ரூபாய் கூடப் போட்டுக் கொடுத்தார். குதிரை குஷியில் கனைத்தது.

'டெல்லி போக பஸ் எங்கே நிற்கும்?' என்று அவர் கேட்டதும் அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்காத குறை.

"இங்கேயிருந்து டெல்லிக்கு எல்லாம் பஸ் கிடையாது. நீங்க இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் அங்கிருந்து பஸ் கிடைக்கும்!" என்று சொல்ல, 'நல்ல வேளை' என்று மகிழ்ந்தார். "ஆனா அந்த பஸ் இப்ப தான் போனது" என்றான் அந்த ஆள்! அடுத்த பஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் தேமே என்று காத்திருக்க ஆரம்பித்தார். அப்போதும் கணக்கு போட்டுப் பார்த்து விமானத்தைப் பிடித்து விடலாம் என்று உறுதியாக இருந்தார்.

பக்கத்துக் கடையில் கிடைத்த டிபனை சாப்பிட்டு வைத்தார். டெல்லியில் எதுவும் சாப்பிடாமல் அப்படியே விமான நிலையத்துக்குப் போக வசதியாக இருக்கும் என்பது திட்டம்.

பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த அந்த லொடலொட பஸ்ஸில் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் அடுத்த ஊருக்கு வந்தாயிற்று.

இங்கிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்துக்குள் டெல்லி போய்விட்டால் போதும். விமானத்தைப் பிடித்து விடலாம்!

அங்கு நின்றிருந்த டெல்லி போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து பெருமூச்சு விட்டார். கண்டக்டரிடம் "எப்போது கிளம்பும்?" என்று சந்தேகமாகக் கேட்க, "டிரைவர் வந்தவுடன் கிளம்ப வேண்டியது தான்!" என்று சொல்லி பால் வார்த்தார் கண்டக்டர்.

"நான் ஆறரை மணிக்குள்ளே டெல்லியில் இருக்கணும். விமானத்தைப் பிடிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பணத்தை நீட்டியிருக்கிறார்.

"ஆறரை மணிக்கு போகாது சார். ஒரு ஏழு ஏழரை ஆயிடும்!" என்று கண்டக்டர் குண்டைப் போட்டார்.

'ஏழு மணிக்கு இல்லையென்றாலும் ஏழரைக்கு செக்-இன் செய்தாக வேண்டுமே! எப்படி?' என்று தன் திட்டங்கள் தோல்வியைத் தழுவப் போகிறதே என்கிற வேதனையில் அவர் உழல ஆரம்பித்த போது, பக்கத்தில் நின்றிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் இவருக்கு கடவுளாக வந்து உதவி செய்தார்.

"இப்ப ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லிக்கு இருக்கு சார். இங்கேயிருந்து ஒரே மணி நேரத்தில் போயிடும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருது. என்ன, நின்னுகிட்டு போக வேண்டியிருக்கும்" என்று சொல்ல, அவரைத் தள்ளாத குறையாக, ஸ்டேஷனை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

டிக்கெட் வாங்கி, முதலாம் பிளாட்பாரம் நோக்கி ஓடி, தூர வந்து கொண்டிருந்த புகைவண்டியைப் பார்த்ததும் தான் மூச்சு விட ஆரம்பித்தார்.

புகைவண்டி வந்து நிற்க, எங்கிருந்து தான் வந்தார்களோ, மக்கள் திமுதிமுவென்று படையெடுக்கின்றனர். எங்காவது இடம் கிடைக்கிறதா என்று தேடித் தேடி, இதோ இந்தப் பெட்டியில் இடம் இருக்கும் போலிருக்கிறதே என்று குதூகலத்துடன் ஏறினார்.

அது எஸ்-2 பெட்டி. உள்ளே உட்கார்ந்திருந்த வழுக்கைத் தலை ஆசாமி இவரைக் கண்டவுடன் நெற்றி சுருக்கி, "அட, நீங்களா?" என்று சொன்னார்!



[நன்றி: http://tamil.sify.com]