Friday, February 23, 2007

டோண்டு ராகவன் கேள்விக்கு பதில்!

ஏமாற்றிய டோண்டு ராகவன்!
ஏலேலோ ஐலசா - படகு மூழ்கி விட்டதா? இல்லையா?
தூக்கம் வராத ஒரு இரவு

இணைப்பு தலைப்புகள் : சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

"ஏலேலோ ஐலசா இரண்டாம் பகுதி உண்டா?" என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் இன்று அதிகாலை 12:06 மணிக்கு என் செல்பேசியில் கூப்பிட்டு கேட்டார்கள். 'Judgement Reserved' என்று சொல்லி விட்டேன்!

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா இப்படி செய்வார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையாதலால் தூக்கம் வரவேயில்லை! டோண்டு ராகவன் மொழி மாற்றம் செய்வார் என்று தெரியும். மனம் கூட மாற்றுவார் என்று தெரிந்திருக்கவில்லை!

ஏலேலோ ஐலசா பகுதிக்கு டோண்டு ராகவன் அவர்கள் அனுப்பியிருக்கும் கேள்வியைப் பாருங்கள்:

நீங்கள் திரும்பி செல்லும்போது அங்கு நீங்கள் எதிர்பார்க்கும் யாரையுமே காணும்.

அங்கிருந்த டீக்கடைக்காரர் அந்தப் பக்கம் தன் காரில் (!) வந்த டோண்டு ராகவன் என்னும் அறுபது வயது இளைஞன் அந்த நால்வரையும் தன்னுடன் காரில் தள்ளிக் கொண்டு போய்விட்டான் என்று கெக்கெக்கே என சிரித்து கொண்டும், பொறாமை பெருமூச்சுடனும் கூறுகிறார்.

அப்போது உங்கள் மனநிலை:
1. டோண்டு ராகவனைப் பற்றி
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி என்னவாக இருக்கும்?

இந்த சிச்சுவேஷனுக்கு:
அ. கண்ணதாசன் மற்றும்
ஆ. வாலி என்ன பாட்டு எழுதுவார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று மூளையைக் கசக்கிக் கொண்டதில் காலை ஐந்து மணி சீக்கிரம் வந்துவிட்டது.

டோண்டு ராகவன் இந்த விஷயத்தில் என்னை ஏமாற்றி விட்டதால் நான் இதற்கு பதில் சொல்லப் போவதில்லை.

நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கற்பனைக் குதிரை மேல் சாட்டையை சொடுக்கும் சத்தம் கேட்கிறது. டோண்டு ராகவன் அவர்களுக்கு உங்கள் பதில் என்ன? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

1 பின்னூட்டங்கள்:

said...

உங்களுக்கும் டோண்டுவுக்கும் ஜாதியைத் தவிர்த்து வேறு ஏதும் சம்பந்தம் உள்ளதா?