Thursday, February 28, 2008

சுஜாதா!

என்னைப் போல் நிறைய எழுத்தாளர்களுக்கு
அவர் மானசீக குரு.

கல்லூரி முடித்து பெங்களூர் வந்த புதிதில்
அவர் தொலைபேசி எண்ணை நண்பர் மூலம் பெற்று தொடர்பு கொண்டு, அவர் குரலைக் கேட்டவுடன் என்ன பேசுவது என்று புரிபடாமல் விழித்தது, இப்போது தான் நடந்த மாதிரி இருக்கிறது!

அவரை எப்படியாவது ஒரு முறை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்று மனதில் ஆசை வைத்துக் கொண்டு, இந்த இயந்திர உலக வாழ்க்கையில் அது நடக்காமலேயே போனது எனது துரதிர்ஷ்டம் தான்!

சுஜாதா எங்கும் போகமாட்டார்.
எண்ணிலடங்கா எழுத்தாளர்களின்
எழுத்துகளில் எங்காவது ஓரிடத்தில்
அவ்வப்போது நிச்சயம் தெரிவார்!

அவரைப் பிரிந்து துடிக்கும்
தமிழுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த வருத்தத்துடன்,
சுபமூகா

5 பின்னூட்டங்கள்:

said...

kanamal pona avarai nam ezhuthukalil kandu pidikalam

said...

அவரைப் பிரிந்து துடிக்கும்
தமிழுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

how true !

said...

'Tamilthai' had lost another lovely Son.Sujatha was(is) the most mordern son She ever had. His writings will live until She lives.
- TamilIndian.

said...

அருமையான அஞ்சலி

said...

அஞ்சலிகள்