Showing posts with label வருமோ சிரிப்பு வருமோ?. Show all posts
Showing posts with label வருமோ சிரிப்பு வருமோ?. Show all posts

Friday, April 20, 2007

பயக்க வயக்கங்கல்

ன்ரு காலை ரொம்ப போரடித்ததால் தொலைக்காட்சி பார்க்கலாம் என்ரு உட்கார்ந்தேன்.

நிரம்ப நாட்களுக்கப்புறம் நான் தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலைகள் நிறைய இருப்பதால் முன் மாதிரி எல்லாம் நேரம் கிடைப்பதில்லை.

எந்த சானலைத் தேர்ந்தெடுத்தாலும் விவேக்கும் வடிவேலுவும் தான் அதிகம் தெரிந்தார்கள். தப்பித் தவறி இவர்கள் இல்லையென்றால் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. விளம்பரங்கள் என்றால் அப்போதெல்லாம் மூன்று நான்கு வரும். இப்போது முப்பது நாப்பது வருகிறது. அது எப்படித்தான் நம்மவர்கள் கொஞ்சம் கூட அலுக்காமல் உட்கார்ந்து இந்த விளம்பரங்களைப் பார்க்கிறார்களோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒருவேளை இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விடவும் இந்த விளம்பரங்கள் மிக அருமையாக இருக்கிறதோ என்னவோ!



இந்த காமெடி நிகழ்ச்சிகளில் இருக்கிற முக்கியமான காமெடி என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரி இருப்பது தான். தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளைப் பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். பத்திரிக்கையுடைய அட்டையை எடுத்து விட்டால் எந்தப் பத்திரிக்கை என்று தெரியாது என்று! பத்திரிக்கை ஆசிரியர்கள் புத்திசாலிகள்! பத்திரிக்கையுடைய பெயர், வெளியான தேதி இவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் கொடுத்து இதை சரி செய்து விட்டார்கள். இப்போது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் அதே மாதிரி ஆகி விட்டது.


இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் ஒரு கடற்கரையில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, காலார நடந்து கொண்டோ, இல்லை, பின்னாலேயே நடந்து கொண்டோ ஒரு விளக்கம் சொல்வார்கள். சில சமயம் அந்த விளக்கத்துக்கும் ஒளிபரப்பாகிற நகைச்சுவைக் காட்சிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருக்காது. ஒவ்வொருத்தரும் ஒரே மாதிரி தங்கள் ஆலாபனையை முடிப்பார்கள் -
'இப்ப இவரு என்ன பண்றாருன்னு பாருங்க!'


நம்ம மக்களும் போட்ட ஒரே நகைச்சுவைக் காட்சியை அலுக்காமல் 54324வது தடவையாக எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரிபடாத விஷயமாக இருக்கிறது.


அப்போதெல்லாம் டிவி கிடையாது. வானொலியில் ஒலிச்சித்திரம் என்று மாதம் ஒரு தடவை ஒலிபரப்புவார்கள். 'வானொலி' பத்திரிக்கையை இதற்கென்று வாங்கி, எந்தத் தேதியில் என்ன ஒலிச்சித்திரம் என்று பார்த்து வைத்துக் கொண்டு காத்திருந்து கேட்போம். சில சமயம் டேப் வந்திருக்காதோ என்னவோ பழைய ஒலிச்சித்திரத்தை மறு ஒலிபரப்பு செய்வார்கள். கேட்க மாட்டோமே! 'அட, இது வந்தது தானே?' என்று சொல்லி வானொலியை 'அணைத்து' விடுவோம். இந்த காலத்து மக்கள் மாறி விட்டார்கள்.


ந்தக் கட்டுரையை மெனக்கெட்டு எழுதுகிற காரணத்தை மறந்து விட்டு எங்கேயோ போய்விட்டேன். முன் மாதிரி எல்லாம் பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இல்லை என்றால் அரைமணிக்கு ஒரு முறை இந்த அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் தலையை நுழைப்பதில்லை.


வானொலி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து 'அடுத்த நிகழ்ச்சி இன்னும் சில விநாடிகளில் தொடரும்' என்று சொல்லி விட்டு, யாரையாவது வயலின் வாசிக்க வைத்து விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பை சொல்வார்கள்.


ஒவ்வொருவரும் அழகாக அறிவிப்பை செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருந்தது. அழுத்தம் திருத்தமாக அவர்கள் அறிவிப்புகளை வழங்கும் விதம் அருமையாக இருந்தது. நான் கூட சில அறிவிப்பாளர்களை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களுக்கு அந்த மாதிரி அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு இருக்கிறதா என்றால் அது ஒரு பெரிய மைனஸ்! தப்பித் தவறி ஒழுங்காகப் பேசி விட்டால் அவர்களைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்களோ என்று கூடத் தோன்றுகிறது.


காமெடி காட்சிகளை விடவும் அதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பேசுகிற தமிழில் இருக்கிற காமெடி இன்னும் தூள். வாயில் என்னவோ சுடு தண்ணீரை வைத்துக் கொண்டு பேசுகிற மாதிரி அவர்கள் அடிக்கிற கூத்து - ஆகா! இப்போது போட்டிக்கு நேயர்களோடு கலந்து உரையாடி அவர்கள் கேட்கிற பாடலை வழங்க சின்னச் சின்ன பெண்கள் வந்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து நாம் மெய் மறக்கிறோமோ என்னவோ, தமிழை மாத்திரம் மறந்தே ஆக வேண்டும்.


ழ, ல, ள, ந,ன, ண எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. 'அட, எதை எங்கே யூஸ் பண்ணினாத்தான் என்ன?' என்று மாற்றி மாற்றி உபயோகித்து அட்ஜஸ்ட் செய்கிறார்கள்.


அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கூட ஒழுங்காக இந்த உச்சரிப்புகளை செய்தார்களா என்பது சந்தேகமே. முழு தமிழகமும் இதைப் பற்றி கவலைப் படாமல், 'அடப் போங்கப்பா, இது பயக்க வயக்கம்!' என்று சொல்லிவிட்டுத் தப்பித்து விடுகிறது.


மொழி என்பது நாமே உருவாக்கியது தானே? கைகளை ஆட்டி விதவிதமான குறியீடுகளை உருவகித்து வாயில் சப்தங்களை ஏற்படுத்தி பேசிக் கொண்டிருந்த கற்காலத்தில் இந்தத் தொந்தரவு எல்லாம் இருந்ததா என்ன?


தமிழ் மொழியை உருவாக்கின சமயத்தில் சும்மா இருக்காமல் ஒரே உச்சரிப்புக்கு இரண்டு மூன்று எழுத்துகளை உருவாக்கி வைத்தவர்களைத் தான் இப்போது நாம் குறை சொல்ல வேண்டியிருக்கிறது!


எதற்கு இந்த 'ழ'வும் 'ள'வும்?! தமிழுக்குப் பெருமை சேர்க்கிறதாமே இந்த 'ழ'? தமிழிலேயே உட்கார்ந்து கொண்டு 'காலாட்டிக்' கொண்டிருக்கிற இந்த 'ழ' எத்தனை பேர் நாக்குகளில் உட்கார மறுக்கிறது!


'வாழைப்பழத்தின் மீதேறி வழுக்கி விழுந்தான்' என்றெல்லாம் பேச வைத்து வழுக்கி விழ வைக்கிறார்கள்.


அதே மாதிரி தான் இந்த ர, ற அப்புறம் 'ன', 'ண', 'ந'! கொடுமைடா சாமி!


அரம், அறம், கனவு, கணக்கு, நன்மை - இந்தச் சொற்களுக்குள் எந்த இடத்தில் எந்த எழுத்தை உபயோகிப்பது என்பது குழப்பத்தை உருவாக்கக் கூடிய ஒன்று.


அந்த மொழி வல்லுநர்கள் கொஞ்சம் யோசித்து ஒரே எழுத்தை உருவாக்கியிருந்தால் தமிழ்மக்கள் எல்லோரும் தமிழ் தேர்வில் 100க்கு 96 நிச்சயம் வாங்கியிருப்பார்களே!


இப்போது நம் மக்கள் பேசும் வார்த்தைகளை வைத்தே அவர்கள் சொல்ல வருகிற கருத்தை நாம் யூகிக்கிறோம் தானே? அவர்கள் எந்த மாதிரி உச்சரிப்பை செய்தாலும் கருத்து சரியாக நம் தலையில் ஏறுகிறது தானே?


அப்புறம் எதற்கு இந்த மாதிரி வேறு வேறு எழுத்துகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும்? அதாவது, அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக் கொல்ல வேன்டும்?!


இருநூத்தி சொச்சம் எழுத்துகளில் எத்தனை எழுத்துகளை இதன் மூலம் குரைக்க முடியும் - சாரி - குறைக்க முடியும்?! சற்றே நினைத்துப் பாருங்கள்.


அடுத்த உலகத் தமில் மாநாட்டில் இது குரித்து ஒரு சிரப்பு கட்டுரை தயாரித்து வலங்கி தமில் கூரும் நல்லுலகம் உய்ய வலி வகுக்குமாரு தமில் அரிஞர்கலைக் கேட்டுக் கொல்கிரேன்!


[நன்றி: http://tamil.sify.com]

Monday, January 15, 2007

பயக்க வயக்கங்கல்




அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக்
கொல்ல வேன்டும்?!



மேலும்..

Friday, January 12, 2007

F1

புல்லில் பனித்துளி
துளி: 11



பிறருக்கு F1 செய்வது, அதாவது உதவி செய்வது மிக முக்கியம். ஆனால் சரியாக உதவி செய்கிறோமா என்று கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

அது என்ன சரியாக?

நான் மிகப் பிரபலமான அந்தத் தொழிலகத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களாகியிருந்த சமயம். Telephone-cum-Telex Operator!

இதற்கு முன் ஒரு டிராவல் ஏஜென்சியில் மூன்று வருடங்கள் General Clerk ஆக இருந்தேன். General Clerk என்றால் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று பொருள்.

'ஒரு லெட்டர்' என்பார் பாஸ். ஷார்ட் ஹேண்ட் பேட் சகிதம் போய் அவர் முன் உட்காருவேன். ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரியாது. லாங் ஹேண்ட் தான். ஒரு பந்தாவுக்கு ஷார்ட் ஹேண்ட் பேட்.

கவுண்ட்டரில் இருந்த பெண் சாப்பிட வெளியே போய் விட்டாள். ஒரு டிக்கெட் உடனடியாக வேண்டும். 'கணேஷ், ஏர் புக்கிங்' என்பார்கள். கவுண்ட்டரில் உட்கார்ந்து டிக்கெட் தயார் செய்வேன்.

'கணேஷ், ஒரு பன்னிரண்டு ரூபாய் எங்கேயோ இடிக்குது' என்பார் அக்கவுண்டண்ட். 'இதோ, இங்கே' என்று கண்டுபிடித்து சரி செய்வேன்.

திடீரென்று முப்பது பெட்டிகள் கார்கோ வந்திறங்கும். 'கொஞ்சம் கை கொடுப்பா' என்பார்கள். எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற்றி இறக்க உதவுவேன். தபால் எடுத்து செல்பவர் விடுப்பு எடுத்தால் frank ஆன ஒரே ஆள் என்று என்னை franking செய்யச் சொல்வார்கள்.

ஒரு நாள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை. யாருக்கு சொல்வது என்பதில் குழப்பம். எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். கோரஸாக ஒரே குரலில் 'கணேஷ்' என்றார்கள்!

அது தான் General Clerk!


அப்படித்தான் நான் டெலக்ஸ் எப்படி அனுப்புவது என்று கற்றுக் கொண்டேன். டெலக்ஸில் யாரையும் உட்கார விட மாட்டார்கள். முரளி என்று ஒரு ஸ்டெனோகிராபர் இருந்தார். அதி பயங்கர வேகத்தில் டெலக்ஸ் அனுப்புவார். அவர் பின்னால் நின்று கொண்டு அவரது விரல்கள் ஆடும் நாட்டியத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.


அப்போதெல்லாம் மெக்கானிக்கல் டெலக்ஸ் தான். எண்கள் மற்றும் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் வேறு வேறு விதமாக பட்டன்களை உபயோகிக்க வேண்டியிருந்தது. வார்த்தைகள் எல்லாவற்றையும் தந்தி போல் சுருக்கி டைப் செய்ய வேண்டியிருந்தது.

வேலை அவ்வளவாக இல்லாத போது நான் கொஞ்சம் கொஞ்சமாக டெலக்ஸ் அனுப்புவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். வந்தது வம்பு. முரளிக்கு அருமையான வேலை கிடைத்து ராஜினாமா செய்து விட, அந்தப் பணியும் என்னிடம் வந்தது.

அப்படி கற்றுக் கொண்ட அந்தப் பணி தான் பின்னாளில் எனக்கு அந்தப் பெருமைக்குரிய தொழிலகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தது. 'வருகிற எந்த வாய்ப்பையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்று நான் பார்க்கிற எல்லோருக்கும் இந்த ஒரு நிகழ்ச்சியையே உதாரணமாகக் காட்டி சொல்வேன்.

மெக்கானிக்கல் டெலக்ஸ் போய் எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!
எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸும் போய் கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!!

ஒரு நாளுக்கு நூறிலிருந்து நூற்றி ஐம்பது டெலக்ஸ் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்த சமயம். அப்போது தான் எங்களது பிரிவில் வேலை செய்ய இன்னொரு ஆள் தேவை என்று விளம்பரம் செய்தார்கள்.

முக்கிய தகுதி - கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிகிறவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். ஆகையால் அந்தப் பணி தெரிந்தவர்கள் யார் வந்தாலும் சுலபமாகத் தேர்வாகி விடுவார்கள் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். 'அப்படி யாரும் வரவில்லை என்றால் நல்ல Telephone Operatorஐத் தேர்வு செய்து விட்டு அவரை டெலக்ஸில் பணிபுரியத் தயார் படுத்தி விட வேண்டியது தான்!' என்று எங்கள் மேலாளர் சொன்னதைப் பக்கத்துப் பிரிவில் இருந்த ஒருவர் கேட்டு விட்டார்.

மதிய உணவு வேளையில் என் முன் வந்து உட்கார்ந்தார். "கணேஷ், நீ எப்படியாவது உதவி பண்ணனும்!" என்று ஆரம்பித்தார்.

அவரது தூரத்து உறவினரான ஒரு பெண்மணிக்கு நான் உதவ வேண்டும் என்றார். "என்ன உதவி?" என்றேன் சற்று தயங்கி.

"அந்தப் பொண்ணு Telephone Operatorஆ வேலை செஞ்சுகிட்டிருக்கா. ரொம்ப கம்மியா உதவித் தொகை மாதிரி என்னமோ கொடுத்துகிட்டிருக்கான். அவளுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைக்கிற மாதிரி பண்ணப்பா. கோடி புண்ணியமாப் போகும். அவங்க குடும்பம் ரொம்பக் கஷ்டப் படற குடும்பம்" என்றார்.

"கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரியுமா?" என்று முதல் அஸ்திரத்தை உபயோகித்தேன்.

"டெலக்ஸ் தெரியும்"

"கம்ப்யூட்டர் டெலக்ஸ்?"

"என்னப்பா, எல்லாம் ஒண்ணு தானே? என்ன பெரிய மாற்றம் இருக்கப் போகுது?" என்றார் ரொம்ப பவ்யமாக.

"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அது வேற, இது வேற" என்று சொல்லிக் கொண்டே என் அறைக்குள் நுழைய, அவரும் பின் தொடர்ந்தார்.


"உள்ளே அனுமதியில்லை சார்" என்றேன். "யாராவது பார்த்தால் என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்" என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாதிரி அவர் அந்த கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் போய் நின்று அதையே உற்றுப் பார்த்தார்.

"டைப் ரைட்டர் மாதிரி தான் இருக்கு! என்ன பெரிய கம்ப்யூட்டர் டெலக்ஸ்?" என்றார் சிரித்து.

இந்த ஆளை என்ன பண்ணுவது என்கிற பாவத்தில் பாவமாக அவரைப் பார்த்தேன்.



"கணேஷ், சின்ன உதவி பண்ணப்பா. எந்த எந்த பட்டனைத் தட்டினா என்னென்ன ஆகும்னு மாத்திரம் சொல்லிக் கொடப்பா. மத்ததை நான் பார்த்துக்கறேன். ப்ளீஸ்!" என்றார்.

"சார், அது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை சார். மெஸேஜ் எடிட் பண்றதுக்கு ஒரு கீ, சேவ் பண்றதுக்கு ஒரு கீ, அனுப்புறதுக்கு ஒரு கீ, வேணாம்னா டெலீட் செய்ய ஒரு கீ, ஷெட்யூல் பண்ண ஒரு கீ, பிரிண்ட் எடுக்க ஒரு கீ. இப்படி எக்கச்சக்க கீ!" என்று பச்சைக் கிளி மாதிரி சொல்லிப் பார்த்தேன்.

"பாரு, நீயே சொல்லிட்டே. அந்த கீ, இந்த கீ.. அப்படீன்னு. அதையெல்லாம் ஒவ்வொண்ணா சொல்லு. நான் எழுதிக்கிறேன். அவளை மனப்பாடம் பண்ணிக்க சொல்லிட்டா ஆச்சு. ஜமாய்ச்சுடலாம்" என்றவர் பக்கத்திலிருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து வைத்துக் கொண்டு தயாராகி விட்டார்.

நான் அவரையே பார்க்க, "சொல்லுடா கண்ணா!" என்றார் கொஞ்சி.

ஒரு நிமிடம் யோசித்தேன். உதவி செய்வதில் என்ன தவறு? அதுவும் ஒரு பெண்ணுக்கு!! கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்த புதிதில் நானும் தலைகீழாக நின்று தானே கற்றுக் கொண்டேன்! பாவம், உதவி செய்து விடுவோம்.

"எழுதிக்குங்க சார்" என்றேன் உற்சாகத்தோடு.

"F2: Edit, F3: Save, F6: Schedule, F7: Print, F10: Exit" என்றேன்.

ரொம்பப் பொறுமையாக அழகாக எழுதினார்.

"திவ்யா செலக்டட்" என்றார் குஷியாக!

'திவ்யா, பெயர் நல்லாத் தான் இருக்கு!' என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவர் நகர்ந்ததும், 'எப்படி இருப்பாள் திவ்யா?!!'

சரி, முதல் வரிக்கான சம்பவத்துக்கு வந்து விடுகிறேன்.
இண்டர்வியூ தினம் வந்தது.
திவ்யாவின் முறையும் வந்தது.

அழகான தேவதை போல் அவள் அறைக்குள் நுழைந்தாள்.

எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். நான் என் பெயரைச் சொன்னதும் அவளது கண்கள் மூன்று நான்கு விநாடிகள் என் முகத்தில் நீந்தி விட்டுக் கடந்தன. நண்பர் என் பெயரை சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

எங்கள் மேலாளர் கணீர் குரலில் ஆரம்பித்தார்.

"கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறதா?"

"ஓ!" என்றாள் திவ்யா கண்களை அகல விரித்து. என் பக்கம் வேறு ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.

அவளை கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்காரச் சொன்னார். திவ்யா பரத நாட்டிய அபிநயங்களோடு நடந்து சென்று கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்கார்ந்து கொண்டாள்.

ஒரு முறை 'டைப்ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்து விட்டு மனதுக்குள் சமாதானப் பட்டது போல் எனக்குத் தெரிந்தது.

"எவ்வளவு வருடங்களாக கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணி புரிந்திருக்கிறீர்கள்?" என்றார் மேலாளர்.

"மூன்று வருடங்கள்" என்றாள் திவ்யா பளிச்சென்று.

"மூன்று வருடங்கள்?" என்றார் மேலாளர் கேள்விக்குறியைச் சேர்த்து.

"பெங்களூருக்கு கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அது எப்படி மூன்று வருடங்கள்?" என்றார் ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாக உச்சரித்து.

"கம்ப்யூட்டர் டெலக்ஸ்? அது ஒரு வருடம் தான். நான் சொன்னது ஆர்டினரி டெலக்ஸ்!" என்றாள்.

"ஆர்டினரி டெலக்ஸ்? யூ மீன் மெக்கானிக்கல்?" என்றார் திருத்தி.

"எஸ், எஸ்.." என்றாள் அவசரமாக!

'அடி பாவி, அப்படியென்றால் உனக்கு மெக்கானிக்கல் டெலக்ஸ் கூடத் தெரியாதா?!'

நினைத்தவன் ஏதோ நானே இண்டர்வியூ செய்யப் படுவது போல் நடுங்க ஆரம்பித்தேன்.

"சரி, ஒரு டெலக்ஸ் மெஸேஜ் அனுப்பிக் காட்ட முடியுமா?" என்று தயாராக இருந்த ஒரு செய்தியை எடுத்துக் கொடுத்தார்.

திவ்யா உடனே விமானம் ஓட்ட ஆரம்பித்தாள்.

"F2 for Edit, F3 for Save, F5 இல்லை, இல்லை, சாரி, F6 for Schedule, F7 for .."

"ஓகே, ஓகே" என்று இடை மறித்தார் மேலாளர். "எங்கே, எடிட் செய்து காட்டுங்கள்" என்றார்.

திவ்யா பதவிசாக உட்கார்ந்து கொண்டாள். திரும்ப ஒரு முறை அந்த 'டைப் ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாள்.

தேடிக் கண்டுபிடித்து 'F' என்ற பட்டனைத் தட்டிவிட்டு, தேடிக் கண்டுபிடித்து '2' என்ற பட்டனையும் தட்டிவிட்டு "F2 for Edit" என்று கூறிப் புன்னகைத்தாள்!



[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, January 03, 2007

இரண்டு மணி நேரத் திட்டங்கள்

புல்லில் பனித்துளி
துளி: 10


ன்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்றே முடித்து விட வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கடைபிடிக்க மறுக்கும் விஷயம்.

'என்ன, ஒரு அஞ்சு நிமிட வேலை. நாளை காலையில் செய்தால் ஒன்றும் தலை முழுகிப் போகாது' என்று ரொம்ப தைரியமாக இருப்பவர்கள் நம்மில் மிக அதிகம். மேலாளர் விடாமல், 'அஞ்சு நிமிடம் தானே ஆகும்? முடிச்சுட்டு அஞ்சு நிமிடம் கழித்து போ!' என்று சொல்வார். 'சார், காலையில் 8-55க்கு எல்லாம் வந்து முடிச்சுடுறேன்' என்று அந்த வலையிலிருந்தும் தப்பி நழுவும் மீன்கள் நிறைய!

நான் வேலை பார்த்த பழைய அலுவலக மேலாளர் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை உணர்வு கொண்டவர். அவருக்கு இன்று முடிக்க வேண்டிய வேலை முடிந்திருக்கிறதா என்று பார்ப்பதை விடவும், நாளை காலை முதல் இரண்டு மணி நேரத்துக்கான வேலைகள் முடிந்திருக்கிறதா என்று கவனிக்க மிகவும் விருப்பம்.

நாளை இரண்டு மணி நேர வேலைகளா என்று நீங்கள் அதிசயிப்பது தெரிகிறது. ஆமாம். காலை 9 மணி முதல் 11 மணி வரை என்னென்ன வேலைகள் முடிய வேண்டும் என்று முன் யோசனை செய்து பட்டியலிட்டு, அதை எல்லாவற்றையும் இன்றே முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும். ஏனெனில், அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்துடன் எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. ஒருவேளை, பணியாளர் வரவில்லை எனினும் பாதகமில்லை என்கிற கருத்து உடையவர்.

இப்போதே நாளைய வேலையையும் முடித்து விட்டால் காலை 9 மணிக்கு வந்து என்ன செய்வதாம் என்று நீங்கள் அங்கலாய்க்க வேண்டாம். 11 மணி முதல் 1 மணி வரை என்ன வேலை இருக்குமோ அதை செய்யலாம்!

எந்த நேரத்திலும் எந்த விதமான குறையுமின்றி நடக்க வேண்டிய எல்லா வேலைகளும் முடிந்திருக்கும். அடுத்த நாளுக்கான இரண்டு மணி நேர வேலையும் முடிந்து விட்டதெனில், இந்த வேலைகளை இன்னும் எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்று திட்டமிட்டு புதிய ஆலோசனைகளை வழங்கச் சொல்வார். காரியம் முடிந்து விட்டது என்று ஆறு மணிக்கு முன் அலுவலகத்தை விட்டு வெளியேற விடமாட்டார்.

இரவு எட்டு மணி வரை அலுவலகத்திலேயே பழியாகக் கிடப்பார். ஒரு வேளை அடுத்த நாள் மாலை ஐந்து மணி வரைக்கான வேலைகளை முடித்து விட்டு கிளம்புவார் போல என்று நான் நினைப்பதுண்டு.

"இந்த மனுஷனுக்கு பெண்டாட்டி இல்லையா? இங்கேயே கிடந்து மாஞ்சுகிட்டிருக்காரே?" என்றேன் நண்பனிடம் ஒருநாள். "பெண்டாட்டி இருக்காங்க. அதான் விஷயம்!" என்றான் கண்ணடித்து.


மும்பை அலுவலகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை ஃபாக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு, உடனே தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்வார்.

"நந்தினி எப்படி இருக்கீங்க? ஒரு ஃபாக்ஸ் அனுப்பினேன். வந்ததா?" என்று ஆரம்பித்து, முழு ஃபாக்ஸ் செய்தியையும் படித்து விடுவார்.

"சொல்ல முடியாது. ஃபேக்ஸ் சரியா போனதா இல்லையா, யாருக்கு தெரியும்? அதான் டபுள் செக் செய்துடணும்" என்பார்.

வர் ஒருமுறை அலுவலக வேலையாக டெல்லிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. டெல்லி வரை விமானத்தில். அங்கிருந்து புகை வண்டியில் நான்கு மணி நேரப் பயணம்.

நான்கு நாட்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அழகாக திட்டமிட்டு விட்டுக் கிளம்பினார். அந்த நான்கு நாட்கள் திட்டத்துக்கு எங்கள் முழுக் குழுவும் பெரும் அல்லோலகல்லோலத்துக்கு உள்ளானோம் என்பதை சொல்லத் தேவையில்லை.

அவர் கிளம்பிய நாள் கேக் வெட்டிக் கொண்டாடாத குறை. 'அப்பாடி, அந்த சனியன் அவஸ்தையிலிருந்து இன்னும் ஐந்து நாட்கள் விடுதலை!' என்று எல்லோரும் குதிகுதி என்று குதித்தோம்.

நான் உரக்க, "பாலா, நாளை காலை 11 மணி வரை செய்ய வேண்டியதையெல்லாம் முடிச்சாச்சா?" என்றேன்.

"இன்னும் அஞ்சு நாளுக்கு பண்ண வேண்டிய காரியம் எல்லாம் முடிச்சாச்சு சார்!" என்றான் பாலா பவ்யமாக.

அன்றைக்கு சீக்கிரம் கிளம்பலாமா என்று திட்டம் போட்டோம். சொல்ல முடியாது, திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டால் மாட்டுவோம் என்று அந்த நினைப்புக்கு நாங்களே தடை போட்டுக் கொண்டு விட்டோம்.

ங்கள் மேலாளரின் திட்டங்கள் சரியாக நடந்தேறி ஐந்தாம் நாள் ஊருக்குக் கிளம்பினார். டெல்லியில் இரவு எட்டு மணிக்கு விமானம். புகைவண்டி நான்கு மணிக்கெல்லாம் டெல்லி வந்தடையும். ஒரு வேளை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தாமதம் ஆனாலும் எந்தவித இடையூறுமின்றி விமானத்தைப் பிடித்து விடலாம் என்று அதிஅற்புத திட்டத்தைப் போட்டிருந்தார்.

டெல்லியை அடைய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் போது, அவர் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தேறியது. ஒரு சிறிய ஸ்டேஷனில் புகைவண்டி நின்றிருந்தது. எக்ஸ்பிரஸ் வண்டி எதற்காக இங்கு நிற்க வேண்டும் என்று குழம்பிப் போனார் எங்கள் மேலாளர். பதினைந்து நிமிடங்களாகியும் வண்டி கிளம்பாததால் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தார். எதிரே வந்து கொண்டிருந்த புகைவண்டியின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விட்ட செய்தி கிடைத்தது.

எங்கள் மேலாளருக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் இருந்த எஸ்-2 பெட்டியிலிருந்து இறங்கி முழு பிளாட்பாரத்துக்கும் அலைந்தார். குட்டி போட்ட பூனை இவரை பார்த்திருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போயிருக்கும்.

எதிரே வந்த ரயில்வே பணியாளர் ஒருவரைக் கூட விடாமல் கேள்வி கேட்டு உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

முக்கிய கேள்வி - ஒரு பெட்டியை தண்டவாளத்தில் மேலேற்ற எவ்வளவு நிமிடங்கள் பிடிக்கும்?

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன் நெற்றிக் கண்ணைத் திறக்கலாமா என்று யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

"என்ன சார்? உங்க கையிலிருக்கிற பெட்டி மாதிரி கேட்கிறீங்களே? இது ரயில் பெட்டி சார்!" என்று சொல்லி விட்டு நடையைக் கட்டி விட்டார்.

எஸ்-2 பெட்டியில் ஏறி, பக்கத்து பயணியைப் பார்த்து விட்டு, தன் கடிகாரத்தையும் பார்த்து விட்டு, 'எட்டு மணிக்கு ஃப்ளைட்!" என்றிருக்கிறார்.

"நீங்க போன மாதிரி தான்!" என்று அந்த பக்கத்து சீட்டு வழுக்கைத் தலை ஆசாமி சொல்லி விட, மீசையை முறுக்கிக் கொண்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார்.

'இப்போது மணி இரண்டு நாற்பத்தைந்து. ஸ்டேஷனுக்கு வெளியே செல்ல, அப்புறம் பஸ் பிடிக்க, மூன்று மணி. அதிக பட்சம் மூன்று மணி பதினைந்து நிமிடங்கள்!' என்று கணக்கு போட்டுக் கொண்டே வெளியே வந்து விட்டார்.

ஆனால், அந்த கிராமத்தில் பஸ் வசதி கிடையாது. அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் போனால் ஒரு சிறு நகரம். அங்கு பஸ் இருக்கிறது என்று ஒரு குதிரை வண்டிக் காரர் சொல்ல, வண்டியில் ஏறி விட்டார். பேசியதற்கு மேல் பத்து ரூபாய் கூடப் போட்டுக் கொடுத்தார். குதிரை குஷியில் கனைத்தது.

'டெல்லி போக பஸ் எங்கே நிற்கும்?' என்று அவர் கேட்டதும் அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்காத குறை.

"இங்கேயிருந்து டெல்லிக்கு எல்லாம் பஸ் கிடையாது. நீங்க இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் அங்கிருந்து பஸ் கிடைக்கும்!" என்று சொல்ல, 'நல்ல வேளை' என்று மகிழ்ந்தார். "ஆனா அந்த பஸ் இப்ப தான் போனது" என்றான் அந்த ஆள்! அடுத்த பஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் தேமே என்று காத்திருக்க ஆரம்பித்தார். அப்போதும் கணக்கு போட்டுப் பார்த்து விமானத்தைப் பிடித்து விடலாம் என்று உறுதியாக இருந்தார்.

பக்கத்துக் கடையில் கிடைத்த டிபனை சாப்பிட்டு வைத்தார். டெல்லியில் எதுவும் சாப்பிடாமல் அப்படியே விமான நிலையத்துக்குப் போக வசதியாக இருக்கும் என்பது திட்டம்.

பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த அந்த லொடலொட பஸ்ஸில் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் அடுத்த ஊருக்கு வந்தாயிற்று.

இங்கிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்துக்குள் டெல்லி போய்விட்டால் போதும். விமானத்தைப் பிடித்து விடலாம்!

அங்கு நின்றிருந்த டெல்லி போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து பெருமூச்சு விட்டார். கண்டக்டரிடம் "எப்போது கிளம்பும்?" என்று சந்தேகமாகக் கேட்க, "டிரைவர் வந்தவுடன் கிளம்ப வேண்டியது தான்!" என்று சொல்லி பால் வார்த்தார் கண்டக்டர்.

"நான் ஆறரை மணிக்குள்ளே டெல்லியில் இருக்கணும். விமானத்தைப் பிடிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பணத்தை நீட்டியிருக்கிறார்.

"ஆறரை மணிக்கு போகாது சார். ஒரு ஏழு ஏழரை ஆயிடும்!" என்று கண்டக்டர் குண்டைப் போட்டார்.

'ஏழு மணிக்கு இல்லையென்றாலும் ஏழரைக்கு செக்-இன் செய்தாக வேண்டுமே! எப்படி?' என்று தன் திட்டங்கள் தோல்வியைத் தழுவப் போகிறதே என்கிற வேதனையில் அவர் உழல ஆரம்பித்த போது, பக்கத்தில் நின்றிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் இவருக்கு கடவுளாக வந்து உதவி செய்தார்.

"இப்ப ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லிக்கு இருக்கு சார். இங்கேயிருந்து ஒரே மணி நேரத்தில் போயிடும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருது. என்ன, நின்னுகிட்டு போக வேண்டியிருக்கும்" என்று சொல்ல, அவரைத் தள்ளாத குறையாக, ஸ்டேஷனை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

டிக்கெட் வாங்கி, முதலாம் பிளாட்பாரம் நோக்கி ஓடி, தூர வந்து கொண்டிருந்த புகைவண்டியைப் பார்த்ததும் தான் மூச்சு விட ஆரம்பித்தார்.

புகைவண்டி வந்து நிற்க, எங்கிருந்து தான் வந்தார்களோ, மக்கள் திமுதிமுவென்று படையெடுக்கின்றனர். எங்காவது இடம் கிடைக்கிறதா என்று தேடித் தேடி, இதோ இந்தப் பெட்டியில் இடம் இருக்கும் போலிருக்கிறதே என்று குதூகலத்துடன் ஏறினார்.

அது எஸ்-2 பெட்டி. உள்ளே உட்கார்ந்திருந்த வழுக்கைத் தலை ஆசாமி இவரைக் கண்டவுடன் நெற்றி சுருக்கி, "அட, நீங்களா?" என்று சொன்னார்!



[நன்றி: http://tamil.sify.com]

Monday, September 18, 2006

தலை மேல் பலன்

புல்லில் பனித்துளி
துளி: 5

ரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்.

இடி விழுந்திருந்தால் கூட அவ்வளவாக குழம்பிப் போய் இருக்க மாட்டேன்.

விழுந்தது பல்லி!

எங்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் பல்லிகள் இருந்தாலும் கூட, கழிப்பிடத்தில் எக்கச்சக்கமாக குவிந்திருக்கும். எப்போதும் உள்ளே நுழையும் போதே, இடது பக்க, வலது பக்க சுவர்களில் பலமாக தட்டி விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. எதற்கு வம்பு? அது எங்காவது விழுந்து வைக்கும். அப்புறம் பஞ்சாங்கத்தை எடுத்து அதற்கு பலன் பார்க்க வேண்டியிருக்கும்.

பலன் பார்க்கிற வரைக்கும் அம்மா விட மாட்டார்கள். அது நல்ல பலனாக இருந்து விட்டால் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் அதற்கு தலை மீது கை வைத்து உட்கார்ந்து விடுவார்கள். கோபிச்செட்டிப் பாளையம் பக்கம் இருக்கும் ஒரு கோவிலுக்கு நேர்ந்து கொண்டு ஒரு இருபத்தைந்து காசு மஞ்சள் துணியில் கட்டி வைத்து விடுவார்கள்.

காலில் விழுந்தது என்றால் நோண்டி நோண்டி கேள்வி கேட்பார்கள். வலது காலா இடது காலா என்று அடுத்த கேள்வி. வலது கால் என்றால் முழங்காலுக்கு மேலா இல்லை கீழா என்பார்கள். 'போமா நீ' என்று அலுத்துக் கொண்டால், பலன் சரியானதாக இருக்க வேண்டும் இல்லையா என்று கடிந்து கொள்வார்கள்.

இந்த குழப்பங்களே வேண்டாம் என்று நான் அந்த முடிவுக்கு வந்தேன். கழிப்பறைக்குள் நுழையும் முன்னர் ஏதாவது பல்லி கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். ஏதாவது இளைப்பாறிக் கொண்டிருந்தால் அதன் பக்கத்தில் தட்டி விரட்டப் பார்ப்பேன். சில பல்லிகள் உடனே போய் விடும். சில 'அட போடா' என்கிற மாதிரி கொஞ்ச தூரம் நகர்ந்து விட்டு அங்கேயே 'அக்கடா' என்று இருக்கும். அதை விரட்டத் தட்டித் தட்டி, பல்லி போய் விடும். ஆனால் 'வந்து கொண்டிருந்தது'
நின்று போய் விடும்!

ஒரு நாள் வீறு கொண்டு எழுந்தேன். இருக்கிற ஒவ்வொரு பல்லியாகத் தேடி விளக்குமாற்றால் தள்ளித் தள்ளி வெளியேற்றினேன். அம்மா வீட்டில் இல்லை. ஒரு பல்லி கீழே விழும் போது, அதன் வால் துண்டிக்கப் பட்டு விட, அந்த வால் மட்டும் தனியே துடித்துத் துடித்து அடங்கிப் போனது. அதைப் பார்க்க கொஞ்சம் மனசு என்னவோ செய்தது. அடுத்த பிறப்பில் தப்பித் தவறி கூட பல்லியாகப் பிறந்து விடக்கூடாது என்று கடவுளிடம் சிறப்பு வேண்டுதல் செய்து கொண்டேன். ஏனெனில், இந்த பல்லி நிச்சயம் மனிதனாகப் பிறந்து பழி தீர்க்க வாய்ப்பிருக்கிறது.

மாலை அம்மா கண்டு பிடித்து விட்டார்கள். ஒரு பல்லி கூட இல்லையே என்று துருவித் துருவிக் கேட்க ஒப்புக் கொண்டு விட்டேன். அம்மா கூட அம்மம்மாவும் [பாட்டி!] அய்யய்யய்யய்யோ... என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். 'பல்லியை யாராவது வீட்டை விட்டு தள்ளுவார்களோ, அதுவும் விளக்குமாற்றால்?' என்று கடுங் கோபத்தில் திட்டினார்கள். உடனே அவசர அவசரமாக குளித்து விட்டு வந்து, நனைந்த உடையுடனேயே பூஜையறைக்குள் நுழைந்து, மஞ்சள் துணி எடுத்து இரண்டு இருபத்தைந்து காசுகளை முடிந்து வைத்தார்கள். என்னை மன்னித்து விடும் படி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். கழிப்பறையில் திரும்ப பல்லிகள் அதிகரித்து விட்டன. நான் வெளியே அனுப்பிய பல்லிகள் தான் திரும்ப வந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அங்கிருந்த ஒரு பல்லிக்கு வால் இல்லை! அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பக் பக் என்றது.

என் நண்பன் ஒருவன் மயிலிறகு இருந்தால் பல்லி பக்கம் கூட வராது என்றான். எல்லோரும் நோட்டு புத்தகத்தில் மயிலிறகு வைத்து குட்டி போடுகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, நான் மயிலிறகை கழிப்பறையில் ஒரு இருட்டு சந்தில் மறைத்து வைத்திருந்தேன். பல்லி ஒன்று கூட குறையவில்லை. மாறாக ஒரு பல்லி அந்த மயிலிறகு மேலேயே படுத்திருந்ததைக் காண முடிந்தது.

வருடங்கள் உருண்டோடி விட்டன. ஊர் விட்டு ஊர் வந்து திருமணம் முடித்து புதிய வீட்டுக்கு வந்தாயிற்று. வீட்டில் அங்கே இங்கே என சில பல்லிகள் இருந்தன. பல்லிகள் குறைவாக இருக்கும் போதே விரட்டி விட்டால் நல்லது என்று தோன்றியது. மனைவியிடம் கேட்டேன். 'பாவங்க, அது பாட்டுக்கும் இருந்துட்டுப் போகட்டும்!' என்றாள்.

நான் கழிப்பறைக்குள் நுழையாமல் உள்ளே ஏதாவது பல்லிகள் தெரிகிறதா என்று உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'என்ன சரியா தண்ணி ஊத்தலையா?' என்று பின்னால் இருந்து மனைவியின் குரல். 'இல்லை, எனக்கு பல்லி என்றால் ஒருவித அலர்ஜி!' என்றேன். இடது பக்க, வலது பக்க சுவர்களில் தட்டி விட்டு உள்ளே நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

ஒரு முறை என் மனைவியும் அவளது நண்பியும் பேசிக் கொண்டிருந்தது காதில் லேசாக விழுந்தது.

'என்னது, அப்படி சத்தம்? டொப் டொப்னு யாரோ சுவத்துலே அடிக்கிற மாதிரி?'
'என்னோட கணவர் தான். டாய்லெட்லே இருக்கார். அவருக்கு அந்த மாதிரி தட்டினா தான் வரும்!'

சிலருக்கு சிகரெட், சிலருக்கு பீடி, எனக்கு இப்படி என்று அந்தத் தோழி நினைத்திருக்கக் கூடும். அன்று அவர் வீட்டை விட்டுப் போகும் வரை நான் கழிப்பறையை விட்டு வெளியே வரவில்லை!

நான் எதை நினைத்து பயந்திருந்தேனோ அது நடந்தே விட்டது. பல்லி ஒன்று சரியாக என் தலையில் விழுந்தே விட்டது. வேறு எந்த பாகமும் அதன் கண்களில் விழவில்லையா? சரியாக தலையிலா விழ வேண்டும்?

ஏற்கனவே நான் பஞ்சாங்கத்தில் எக்கச்சக்க தடவை பார்த்திருந்ததால் அது மனப்பாடமாகவே ஆகி விட்டிருந்தது. அதுவும் தலையில் விழுந்தால் மரணம் என்பது நன்றாக ஞாபகம் இருந்தது.

இருந்தாலும் மனது கேட்கவில்லை. 'அப்படியே' கழிவறையிலிருந்து வெளியேறி, வேகவேகமாக அறைக்கு வந்து, பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து, பல்லி விழுந்தால் பலன்கள் பக்கத்தைப் புரட்டினேன். ஆமாம், மரணம் தான்! கை கால்கள் செயலிழந்தது போல் தோன்ற, சட்டென்று மூச்சு விடவே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

'என்னங்க..'

சட்டென்று பஞ்சாங்கத்தை பரண் மீது எறிந்தேன். கணவனின் மரணத்தை எந்தப் பெண் தான் சகித்துக் கொள்வாள்? அவளுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருப்பதே நல்லது என்று முடிவெடுத்தேன். அறைக்குள் நுழைந்த அவளைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தேன்.

'டாய்லெட்டுக்கு போனா தண்ணி கூட ஊத்தாம வர்றீங்க. ஏங்க இப்படி பண்றீங்க?' என்றாள்.

தண்ணி கூட ஊத்தாம என்றவுடன் தான் அது ஞாபகத்துக்கு வந்தது. 'ஃபோன் அடிச்சதுன்னு வந்தேன். அவசரத்துலே கவனிக்கலை, சாரிம்மா!' என்று சொல்லி விட்டு காலை அகலப் போட்டு நடந்தேன்.

'இதென்ன ஸ்டைல்?' என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

டாய்லெட்டுக்குள் நுழைந்ததும் திரும்ப மரணபயம் மனதில் வந்தமர்ந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அந்த பல்லி கண்ணில் படுகிறதா என்று தேடிப் பார்த்தேன். வலது பக்க சுவரின் மீது தான் இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. 'இன்னைக்கு நீ செத்தே!' என்று சொல்கிற மாதிரி தோன்றியது.

இறந்தவுடன் என்ன ஆகும்? சட்டென்று ஒரு இருட்டு குகைக்குள் அதள பாதாளத்தில் விழுகிற மாதிரி தோன்றுமோ? பிடித்துக் கொள்வதற்குக் கையில் எதுவும் கிடைக்காமல் கீழே.. கீழே என்று கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்க.. எப்போது சித்ரகுப்தன் எதிரே வருவார்? நான் செய்த குற்றங்கள் எல்லாம் அவருடைய கம்ப்யூட்டரில் இருக்கும். 'கணக்கிடு' பொத்தானைத் தட்ட எல்லா குற்றங்களுக்கும் நான் செய்த சில நல்ல காரியங்களுக்கும் மதிப்பீடு செய்து சொர்க்கமா இல்லை நரகமா என்று தேர்ந்தெடுத்து அங்கிருக்கும் ப்ரிண்ட்டரில் ப்ரிண்ட் செய்து கொடுத்து விடும். குற்றங்கள் பகுதியில் 'ஒரு பல்லியின் வாலைத் துண்டித்து விட்டான்' என்று நிச்சயம் இருக்கும்!

'என்னங்க? இன்னும் வரலையா? ரெண்டாவது ஆட்டமா?' என்று வெளியே மனைவி 'க்ளுக்' என சிரிக்க, 'சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

*** *** ***

அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக மேனேஜர் என்னைத் தேடி வந்தார்.

'அந்த மன்த்லி ரிப்போர்ட்..' என்று இழுத்தார்.

'எஸ் சார், மதியத்துக்குள்ளே ரெடி பண்ணித் தந்திடுறேன்!' என்றேன். 'மதியம் வரைக்கும் நீ இருந்தா' என்று மனது சொன்ன மாதிரி இருந்தது.

'அடுத்த மாசத்தில் இருந்து கரெக்டா நான்காம் தேதிக்குள்ளே இந்த ரிப்போர்ட் ரெடியா இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. ஓகே?' என்றார்.

'அடுத்த மாசம் நான் இருந்தாத் தானே?' என்றேன். நான் கொஞ்சம் உரக்க சொல்லி விட்டேனோ?
'வாட்?' என்றார். 'உள்ளே வாங்க' என்று சொல்லி அறையில் புகுந்து கொண்டார்.

நான் உள்ளே நுழையக் காத்திருந்தவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்து, 'உங்க ஆதங்கம் புரியுது. நான் உங்களுக்காக கிட்டத்தட்ட சண்டையே போட்டிருக்கிறேன். உங்களை ப்ரொமோட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு மதியம் உங்களுக்கு லெட்டர் கிடைக்கும். ஆர் யூ ஹாப்பி?' என்று சொல்லி கையைப் பிடித்து குலுக்கினார். 'அணைந்து போகும் மெழுகுத் திரி தான் நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது.


*** *** ***

மதியம் மூர்த்தி என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்தமர்ந்து கொண்டான்.

'எனி ப்ராப்ளம்? வீட்டிலே ஏதாவது சண்டையா? காலையில் இருந்து ஒரு மாதிரியே இருக்கியே?' என்றான்.

'சரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்................... சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்' வரைக்கும் சொல்லி முடித்தேன். 'அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக..... நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது' மாத்திரம் சொல்லவில்லை!

'இதையெல்லாம் நீ நம்புறியா என்ன?' என்றான் மூர்த்தி. மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
'எனி ஹவ், உன் தலையில் பல்லி விழுந்திருக்கு. பார்க்கலாம், உனக்கு ஏதாவது ஆகுதா இல்லையான்னு. இப்ப தெரிஞ்சு போயிடும். பல்லி விழுந்தால் பலன்கள் உண்மையா இல்லையான்னு!' என்று சொல்லி விட்டுப் போனான்.
அடப் பாவி!

*** *** ***


மாலை நான் கொடுத்த பதவி உயர்வு கடிதத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் நடனமே ஆடி விட்டாள் மனைவி. பட்ஜெட்டில் விழுந்த துண்டுகள் இனி இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னாள். 'இன்னைக்கு படத்துக்குப் போறோம். படம் முடிச்சுட்டு அப்படியே ஹோட்டலுக்கு போறோம்! ஓகே?' என்றாள் உரத்த குரலில்.

'நீ பார்க்கிற கடைசிப் படம்!' என்று மனசுக்குள் இருந்து பல்லி சொன்னது.

படம் எனக்கு ரொம்ப போரடித்தது. ஹோட்டலில் எதைப் பார்த்தாலும் வாந்தி வருகிற மாதிரி தோன்றியது. 'சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்!' என்றேன். 'ஏங்க, உடம்பு சரியில்லையா? வரும் போதே ஒரு மாதிரி இருந்தீங்க. ரொம்ப வேலையா? சொல்லியிருந்தா இன்னொரு நாள் படத்துக்கு வந்திருக்கலாம்!' என்றாள். இந்த அழகான அன்பான மனைவியை விட்டு இன்று நான் பிரியப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டேன்.

படுக்கையில் விழுந்ததும் உறங்கிப் போனேன். தலை மேல் மிருதுவான கரம் அமிர்தாஞ்சன் தடவியது. சொர்க்கம் என்று தோன்றியது. அப்படி என்றால் நான் நரகத்துக்கு வரவில்லை என்று சொல்லிக் கொண்டேன்.

திரைப் படம் ஓடிக் கொண்டிருக்க 'எனக்கு படம் பிடிக்கவில்லை' என்று எழுந்து நடக்க, சில்க் ஸ்மிதா நடனமாடிக் கொண்டு எதிர்க்க வர, 'ஓ, நீங்களும் சொர்க்கமா?' என்று நான் சொல்ல, படம் முடிந்து லைட் போட்டு விட்டார்கள். கண்கள் கூச எழுந்தேன். சூரிய வெளிச்சம் அறை முழுக்க ஜம்மென்று பரவியிருந்தது.

'இன்னைக்கு வேணா ஆபீசுக்கு லீவ் போட்டுடுங்க.' மனைவி சொல்ல மறுத்து விட்டு எழுந்தேன்.

கழிப்பறையில் நுழையும் முன் இடது பக்க, வலது பக்க சுவரை நான் இன்று ஏனோ தட்டவில்லை.

நன்றி: http://tamil.sify.com

Tuesday, September 05, 2006

கண்ட [கண்ட] கனவுகள்

புல்லில் பனித்துளி
துளி: 3


பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாண்டமான ஒரு கட்டிடம். தலையை உய்ர்த்தி பார்த்துவிட்டு. பேண்ட்
பாக்கெட்டில் இருந்து அமிர்தாஞ்சன் பாட்டிலை எடுத்து விரல் பதித்து கழுத்தில் தடவிக்
கொள்கிறேன். கொஞ்சம் தலை சுற்றுகிற மாதிரி தோன்றுகிறது.

உள்ளே அழகான ஒரு ரிசப்ஷனிஸ்ட் நுனி நாக்கில் ஆங்கிலத்தை நடனமாட வைத்துக்
கொண்டிருக்க அவளை நெருங்கி ஏதோ கேட்கிறேன். அவள் கம்ப்யூட்டரைக் கேட்டு விட்டு,
'105ஆவது மாடி' என்கிறாள். லிஃப்ட் நோக்கி விரல் காட்டுகிறாள்.

என்னுடன் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் லிஃப்டுக்குள் புகுந்து கொள்கிறார்கள். நான் '105' என்று
பதிவு செய்ய, மற்றவர்களும் பதிவு செய்கிறார்கள். '25', '38', '62', '178' .....

லிஃப்ட் புறப்படவே ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகிவிட எல்லோரும் 'ச்' 'ச்' 'ச்' என்று வெறுப்பைப்
பறிமாறிக் கொள்கிறார்கள். விர்ரென்று புறப்படுகிற லிஃப்ட் பத்து பத்து மாடிகளையும்
அநாயாச வேகத்தில் சிற்சில விநாடிகளில் கடக்கிறது. தலைக்குள் பத்து புறாக்கள் பறக்கிற
மாதிரி தோன்றுகிறது.

105ஆவது மாடியில் இறங்கும் போதே அங்கு நிலவிய கூச்சல் குழப்பங்களைப் பார்த்து நெற்றியை
சுருக்கினேன். 'சீக்கிரம்.. சீக்கிரம்..' என்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நான்
வரவேற்பில் பார்த்த அதே ரிசப்ஷனிஸ்ட் எதிரில் ஓடி வருகிறாள். அவளது முகத்தில்
முழுக்க பயம் நிரம்பியிருந்தாலும், அவள் ஓடி வரும் போது லயத்துடன் நடனமாடும் முன்
அழகுகளைத் தான் நான் பார்த்தேன்!

'மிஸ்டர் கணேஷ், உங்களைத் தான் தேடி வந்தேன். ஒரு விமானம் இந்த கட்டிடத்தைத்
தகர்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் தப்பி ஓடுங்கள்' என்று சொல்லி விட்டு
என் பதிலைக் கூட எதிர்பாராமல் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள்.

அந்த வெண்மையான கரம்.. அதன் மென்மை என்னைக் கிரங்கடிக்கிறது. கண் மண் தெரியாமல்
ஓடுகிறேன். எங்கே படிகள் என்று தேடுகிறோம். 'படிகளுக்கு செல்லும் வழி' என்கிற பலகை
கண்களில் படுகிறது. ஆனால் அது கீழே விழுந்து கிடக்கிறது! 'ஐயோ!' என்று கத்தி விட்டு
நாங்களே ஒவ்வொரு பக்கமும் ஓடித் தேடுகிறோம். 'ஆ, அதோ, படிகள்..' என்று குதூகலித்து
படிகளில் இறங்க ஆரம்பிக்கிறோம்.

சட்டென்று எல்லா விளக்குகளும் அணைந்து விட, இருட்டு! முன்னே என்ன இருக்கிறது என்றே
தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. முழுக்க மௌனம்.. 'எங்கே போனார்கள் இங்கு
இருந்தவர்கள்?' என்று நான் கேட்க, 'எல்லோரும் இறந்து விட்டார்கள். நாம் இருவர் தான்
இங்கிருந்து தப்பி இருக்கிறோம்' என்று உரக்கக் கூவுகிறாள்.

படிகள் முடியாமல் போய்க் கொண்டேயிருக்கின்றன. 104, 103, 102, 101, 100.. என
அறிவிப்புப் பலகைகளைப் பார்த்த போது ஆயாசமாக இருந்தது. இன்னும் 99 மாடிகள்
இறங்க வேண்டுமா?

மேலே பார்த்த போது உறைந்து போனேன். இடிந்து போன கட்டிடம் ஒரு பெரிய சிமெண்ட்
குவியலாக என்னைக் குறிபார்த்து வந்து கொண்டிருக்க, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
அந்த ரிசப்ஷனிஸ்ட் திடீரென்று வீல் என்று கத்த, 'என்ன? என்ன?' என்றேன். என் கையிலிருந்து
அவளது கை வேகமாக விலகி போனது. நான் அடுத்த அடி எடுத்து வைக்க காலை எடுக்கும்
போது தான் கவனித்தேன். அடுத்த படியே இல்லை. ஆனால் நான் மிக தாமதமாகத் தான்
அதை கவனித்தேன். என் கால் அடுத்த படி எங்கே என்று தேடி நகர..கீழே.. கீழே.. என்று
இலக்கேயில்லாமல் என் உடல் பறக்க ஆரம்பிக்க..

திடுக்கிட்டு கண் விழிக்கிறேன்.

இது அடிக்கடி நான் காண்கிற கனவு! அமெரிக்காவில் நடந்த அந்தத் தாக்குதலுக்கு முன்னரே
எனக்கு இந்த கனவு வந்திருக்கிறது என்று சொன்னால் 'ஓவர் அலட்டல்!' என்று நீங்கள் சொல்ல
வாய்ப்பிருக்கிறது. மாதம் ஒருமுறையோ இல்லை இரு முறையோ ஒரு பத்திரிகை மாதிரி இந்தக்
கனவு எனக்கு வரும். ரிசப்ஷனிஸ்ட் முகம் மற்றும் 'அங்க' அடையாளங்கள் சிறிது மாறியிருக்கும்.
அவ்வளவே! மற்றபடி அதே 98வது மாடியில் தான் படி இல்லாமல் கீழே விழ ஆரம்பிப்பேன்.

'சும்மா படுக்க மாட்டீங்களே, காலாலே படுக்கையை உதை உதைன்னு உதைச்சு என்
தூக்கத்தையும் கெடுத்துகிட்டு, சே!' என்று அதே ரிசப்ஷனிஸ்ட் குரல் கேட்கும். எழுந்து
உட்கார்ந்தால் மனைவி! 'நீயா? சாரி!' என்று சொல்லிவிட்டு ஒரு முறை படுத்து விட அடுத்த
நாள் வீடு இரண்டு பட்டது!

தேர்வறை! விடைத் தாளில் பெயர் மற்றும் பதிவு எண் எழுதி விட்டுக் காத்திருக்க, கேள்வித்
தாள் கொடுக்கப் படுகிறது. முதல் கேள்வியைப் படிக்க திக்! ஐயோ! இரண்டாவது கேள்வியைப்
படிக்க ஐயையோ! மூன்றாவது கேள்விக்கும் பதில் தெரியவில்லை. கடவுளே,
உனக்கே இது நியாயமாக இருக்கிறதா? என்று மேல் நோக்கி கை நீட்ட, கண்காணிப்பாளர்
கிட்டே வந்து 'என்ன? அதுக்குள்ளே அடிஷனல் ஷீட் வேணுமா?' என்று கேட்பார்.
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து விழிப்பேன். கல்லூரி முடித்து இத்தனை வருடங்கள்
ஆனாலும் இந்தக் கனவு மட்டும் என்றும் மார்க்கண்டேயனாக வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கனவு தந்த பயத்தால் தான் நான் மேல் படிப்புக்கே போகவில்லை!

அதிகாலைப் பொழுதில் வரக்கூடிய பிரசித்தமான கனவு - இயற்கை அழைப்பை உடனடியாக
ஏற்க முடியாமல் அங்கு இங்கு என்று இடம் தேடி அலையும் கனவு. நான் சிறு வயதில்
தஞ்சை மாவட்டத்தின் இண்டு இடுக்கு கிராமங்களில் இருந்த போது காலைக் கடன்களை
முடிக்க ஆற்றங்கரைகளை நாட வேண்டியிருந்தது. ஆற்றின் இருபுறமும் பெரிய பெரிய செடிகள்
நிழல்களுடன் காத்திருக்கும். குளுகுளு வசதி செய்யப்பட்ட இயற்கையான கழிவிடங்கள்!
அதுவும் இலவசமாக! ஒரே ஒரு குறை.. அடிக்கடி பெண்கள் வந்து விடுவார்கள். அப்போது
மாத்திரம் எழுந்து நின்று பக்கத்து செடியில் இருக்கும் இலையைப் பறித்து மிஸ்டர் பீன் மாதிரி
அதை ஆராய வேண்டியிருக்கும். அந்த பசுமை நினைவுகள் விலகாமல் இன்னும் என் மனதில்
இருப்பதால் தான் அந்த கனவு அடிக்கடி வருகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

சில சமயம் இந்த கனவு நீடிக்கப் பட்டு விடும். அந்த சமயம் எல்லாம் நான் ஒரு மணி நேரம்
தாமதமாக எழ வேண்டியிருக்கும். இடம் தேடி அலையும் கனவு நிரம்ப சுவாரசியமாக
இரண்டாம் பாகத்துக்கு முன்னேறும். தேடித் தேடி இடம் கிடைக்காமல் பெரிய ஒரு
காட்டுக்கு நான் வந்து விடுவேன். அடர்ந்த காடு. எக்கச்சக்க மரங்கள் கூடி நின்று
சூரிய வெளிச்சமே உள்ளே வரவிடாதபடி இருள வைத்திருக்கும். கடனே என்று கடனை
முடித்து விட்டு எழும் போது, எதிர்க்க இரண்டு கண்கள். பளிச்சென்று மின்னலடிக்கும்
கண்கள். அந்த கண்கள் உறுமும் போது தான் அது புலி என்று தெரிந்து தலை தெறிக்க
ஓட ஆரம்பிப்பேன். நேராக ஓடினால் பிடித்து விடும் என்று கோணல் மாணலாக எல்லாம்
ஓடுவேன். திரும்பிப் பார்த்தால் சிங்கம் வந்து கொண்டிருக்கும். இன்னும் விரைவாக
ஓடுவேன். பூமி அதிர்கிற மாதிரி தெரிய திரும்பிப் பார்த்தால் யானை வந்து கொண்டிருக்கும்.
அதற்குள் சிங்கார சென்னைக்குள் வந்து விட்டிருப்பேன். இப்போது திரும்பிப் பார்த்தால்
ஒரு எருமை துரத்திக் கொண்டு வரும். இதோ எங்கள் தெரு வந்து விட்டது. திரும்பிப்
பார்த்தால் ஒரு நாய் துரத்திக் கொண்டிருக்கும். ஆனால் அது வெற்றி பெற்று விடும். என்
கிட்டே வந்து விட்ட அந்த நாய் என் மீது பாய்ந்து என் கழுத்தைக் குறி வைத்துக் கடிக்க ..

திடுக்கிட்டு எழுந்து கழுத்தில் இருந்து அந்த நாயைத் தள்ளி விட, ஒரு எறும்பு வீல் வீல்
என்று கத்திக் கொண்டு கழுத்திலிருந்து விழும்!

கிழக்கே போகும் ரயில் படம் திரையிட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. பெரிய க்யூ! இன்று
எப்படியும் படம் பார்த்தே விட வேண்டும் என்று இருக்கிற கடவுள்களை எல்லாம்
வேண்டியபடி காத்திருந்தோம். க்யூவில் எத்தனை பேர் நம் முன் இருக்கிறார்கள் என்று
கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்து டிக்கெட் கிடைக்குமா இல்லையா என்று விவாதித்துக்
கொண்டிருந்தோம். க்யூ நகர்ந்தது. எங்களுக்கு பின்னால் ஒரு நூறு பேராவது இருப்பார்கள்.
அதில் ஒரு விபரீத திருப்தி!

கவுண்ட்டரை நெருங்க நெருங்க மாரடைப்பே வந்து விடுமோ என்கிற மாதிரி டென்ஷன்!
இதோ இன்னும் ஐந்தே பேர் தான்! நான்கு தான். மூன்று, அட, இரண்டு, ஆ, ஒன்று. நான்
டிக்கெட்டுக்காக பணத்தை நீட்ட கவுண்ட்டர் மூடப்பட்டது! எப்படி இருக்கும்?! கண்களில்
கண்ணீர் திரண்டு விட்டது. நண்பர்கள் தான் சமாதானப் படுத்தி கூட்டி வந்தார்கள்.

'நான் படம் பார்த்தே ஆக வேண்டும்' என்று நிரம்பப் பிடிவாதம் பிடித்தேன். அது தான் அந்த நாளின்
கடைசி காட்சி. இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டும் - சனி, ஞாயிறு வர! மற்ற நாட்களில்
கல்லூரிக்கு மட்டம் தட்டி எல்லாம் படம் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை! ப்ளாக்கில்
வாங்கலாம் என்று நண்பர்கள் திட்டம் தீட்டினார்கள். யானை விலை குதிரை விலை
சொன்னதால் நண்பர்கள் தயங்கினார்கள். ஓரிரு விநாடிகள் தயக்கத்துக்கு பின் பர்ஸை
எடுத்து விட்டார்கள். 'இன்னும் ஒருவாரம் காத்திருக்க முடியாதுடா' என்று சமாதானம்
சொன்னார்கள். அவன் நீட்டிய அந்த டிக்கெட்டைப் பார்த்தேன். நட்ட நடுவில் அப்பாவின்
முகம் கறுப்பு வெள்ளையில் தெரிந்தது! மறுத்து விட்டு நடந்தேன். பின்னால் வந்த நண்பர்கள்
திட்டிக் கொண்டே வந்தார்கள்.

இரவு படுக்கப் போகும் போது திரும்ப கிழக்கே போகும் ரயில் 'கூ..' என்றது. வருத்தத்துடன்
போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.

ஐந்து நிமிடங்கள் சென்றது. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.... என்று மணியடித்தது. வெண்திரையில்
கோடுகள் அங்கும் இங்கும் தோன்றி மறைய.. தூரத்து மலையில் சூரியன் உதித்துக்
கொண்டிருந்தது. அப்படியே காட்சி நகர.. இருப்புப் பாதை ஓட ஆரம்பித்தது. வேகம்
மெல்ல குறைந்து, அங்கே எதிர்க்க ஒரு ரயிலைக் காண முடிந்தது.

இஞ்சினில் தொடங்கி ஒவ்வொரு பெட்டியாக காண முடிகிறது. கட்டித் தொங்க விடப்பட்ட
தண்டவாளத் துண்டு.. டங் டங் டங் என்று அதில் அடிக்கவும்.. 'கூ..' என்று கூவிப் புறப்படுகிறது
ரயில். கிழக்கு நோக்கி புறப்படுகிறது ரயில்! சட்டென்று காட்சி உறைந்து போக..
'கிழக்கே போகும் ரயில்' என்று டைட்டில் கார்டு போடப் படுகிறது. நான் என்னை மறந்து
கை தட்டுகிறேன்.

ஒவ்வொரு பேராக போடப் பட்டு கடைசியில் பாரதிராஜா பெயர் வரும் போது விசில் அடிக்கிறேன்.
ஒவ்வொரு காட்சியாக படம் அழகாக நகர்கிறது. சிரிப்பு காட்சிகளில் விழுந்து விழுந்து
சிரிக்கிறேன். நாயகன் நாயகி பிரிகிற காட்சிகளில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல்
தடுமாறுகிறேன்.

படத்தில் இடைவேளை கார்டு வந்த போது, எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து திரும்பப்
படுத்துக் கொண்டேன். படம் தொடர்ந்தது! கடைசி காட்சியில் படம் முடிகிற போது கொடுக்கும்
அதே இசை ஒலிக்க 'வணக்கம்' கார்டும் பார்க்கிறேன்.

காலை எழுந்ததும் மனது முழுக்க ரம்மியமாக இருந்தது. ஒரு காசு செலவில்லாமல் முழுப்
படமும் பார்த்து விட்டேன். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று துடித்தேன்.

இளவழகன் பல் துலக்கிக் கொண்டிருந்தவன் வாயைக் கொப்பளித்து விட்டு 'என்னடா, ராத்திரி
முழுக்க சிரிச்சுகிட்டே இருந்தே? ஏதாவது கனவா?' என்றான். ஆகா!

ஆத்மராம் 'என்ன உன் முகத்திலே கறை? அழுதியா என்ன?' என்றான். ஆகா, ஆகா!

கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் அழகாக அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
நண்பர்களுக்கு அதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, நான் பார்த்த காட்சிகளை
திரும்ப நினைத்துப் பார்த்தேன். அநியாயத்துக்கு ஒரு காட்சி கூட ஞாபகத்துக்கு வரவில்லை!

ஆனாலும் ஒரு அருமையான திரைக் கதையுடன் கூடிய ஒரு படத்தைப் பார்த்த திருப்தி
கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு குறை - கதை, திரைக்கதை, வசனம்,
இசை, இயக்கம் - சுபமூகா என்று ஒரு கூடுதல் கார்ட் போட்டிருக்கலாம்!

நன்றி: http://tamil.sify.com

Thursday, February 23, 2006

கோழி பற.. பற..

Tuesday, January 17, 2006

என்னை நோகடிக்க வருவாளோ?

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக தேவாவின் நேர்காணலை சன் டிவி வழங்கியது. தேவா சொன்ன இந்த நிகழ்வு என்னை சிரிக்க வைத்ததோடல்லாமல் நிரம்ப சிந்திக்க வைத்து விட்டது.

சென்னையில் நடந்த ஒரு பெரிய விழாவில் தேவா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இருந்த போது, ஒரு விஐபி பேச்சாளர் பேச ஆரம்பித்தார். எல்லோருக்கும் நல்வரவு சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெருந்தகை தேவாவைப் பற்றி பேச்சை ஆரம்பித்தபோது -

'தேவாவைப் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர் இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் அரிய ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். அவர் பாடல்களை எல்லாம் கேட்கும் போது எப்படி தான் இவர் இந்த மாதிரி பாடல்கள் அமைக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன். ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் அடக்கமாக இருப்பவர். உதாரணத்திற்கு ஒரு பாடலை சொல்ல வேண்டும்.

'என்னைத் தாலாட்ட வருவாளோ!' என்றாராம்.

தேவா உடனே வேகவேகமாக கையசைத்து 'ஐயோ, அது நான் இசையமைத்ததில்லை! இளையராஜா!' என்று அபிநயத்தாலே சொல்லிப் பார்த்தாராம். 'தேவா, நீங்கள் என்றைக்கும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்!' என்று சொல்லி விட்டு, 'அப்புறம்.. இந்தப் பாடலைப் பாருங்கள் -

இன்னிசை பாடிவரும்... ' என்றாராம்!!!

'அடடா, அது எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தது!' என்று கொஞ்சம் உரக்கவே 'எஸ்..' என்று ஆரம்பிக்க 'எஸ் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்!' என்று அடுத்த பாடலுக்கு தாவி விட்டாராம்.

'அன்றைக்கு அவர் சொன்ன பாடல்களில் ஒன்று கூட என்னுடையதில்லை என்று வருந்தினேன்!' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தேவா.

உடனே சமயோசிதமாக 'கவலைப் படாதே சகோதரா!' இசைத் துணுக்கை ஒளிபரப்பினார்கள்.

லட்சோப லட்சம் பேரை சென்றடையும் ஒரு பேட்டியில் மனதார ஒரு கருத்தை இப்படி சொல்ல எல்லோராலும் முடியாது என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது.

தமிழ் எங்கே? இங்கே!

பொங்கல் திருநாள். மதுரை மாநகரில் பொங்கல் திருநாள் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம் என்று சென்றிருந்தேன்.

வீதியெங்கும் வீதியை மறைத்து வைத்ததைப் போல், வண்ணக் கோலங்கள்! ஒவ்வொரு கோலத்திற்கும் பக்கத்தில்..

WELCOME TO HAPPY PONGAL !


[இங்கேயே முடித்து விட்டால் இது ஒரு அருமையான புதுக் கவிதைக்குக் கருவாக அமையும்!]

ஒரு வீட்டின் கதவைத் தட்டினேன். ஒரு பெண் கதவைத் திறந்தாள்.

'யாராவது அமெரிக்காவிலிருந்து வருகிறார்களா?' என்றேன்.

'இல்லை! எனது அப்பா தான் ஆட்டையாம்பட்டியிலிருந்து வருகிறார்!' என்றது அந்தப் பெண்!

'எனக்கு ஒரு சந்தேகம். தமிழர் திருநாளில் எங்கு பார்த்தாலும் HAPPY PONGAL என்று ஆங்கிலம் ஏன்?' என்று கேட்டே விட்டேன்.

'நீங்கள் வீட்டின் முகப்பைப் பார்க்கவில்லை போலிருக்கிறது!' என்றாள் அவள்.

வீட்டின் முகப்பைப் பார்க்க அங்கு -
'இனிய பொங்கல் திருநாளுக்கு நல்வரவு!'
என்று எழுதியிருந்தது.

'தமிழை வீட்டின் முகப்பில் ஏற்றி விட்டோம். ஆங்கிலத்தை வீதியில் வீசி எறிந்து விட்டோம்!' என்றாள் அவள் பெருமிதத்தோடு!

ரசித்து கைதட்ட வைத்து விட்டார் பேராசிரியர் அப்துல் காதர். சென்னையில் 29வது புத்தகக் கண்காட்சியில் மனதைக் கவர்ந்த கவியரங்கத்தில்!

Tuesday, January 10, 2006

1234உம் ஒரு துப்பட்டாவும்

1234உம் ஒரு துப்பட்டாவும் [அல்லது]
92 + 64 = 1234 [அல்லது]
1234 - 1 [அல்லது]
அவன் பார்க்கிறான்.. பார்க்கிறான் [அல்லது]
பார்வைகள்



துப்பட்டாவை சரி செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த 1234 சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

'சே, என்ன மடத் தனம்?' என்று மனசுக்குள் தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி மானசீகமாக தலையில் நங்கென்று ஒரு குட்டும் வைத்தாள்.

காலையில் தான் அம்மா படித்துப் படித்து சொன்னாள். அவள் சொல்கிற மாதிரியே தான் நானும் ஏதாவது செய்து விடுகிறேன்!

92 எப்போதும் அப்படித் தான். காலையில் எழுந்ததும் பல் விளக்க மறந்தாலும், தன் மகளின் அருமையான ஒளி மயமான எதிர் காலத்துக்கு அறிவுரைகள் சொல்ல மட்டும் மறக்க மாட்டாள். எங்கே தான் மறைத்து வைத்திருப்பாளோ அத்தனை அறிவுரைகளையும்? ஒவ்வொன்றாக எடுத்து விடுவாள்.

ஆனால் 64 அப்படியெல்லாம் இல்லை. மகள் எப்போதும் அப்பா செல்லம் தான். 'சின்ன பொண்ணு! அப்படித் தான் இருப்பா. உன் மாதிரி அவ என்ன எருமை மாடா? இப்ப தான் கன்னுக் குட்டி!' என்று சொல்லி பகபகவென்று சிரிப்பார்.

'நீங்க தான் உங்க பொண்ணை மெச்சிக்கணும்!' என்று 92 கழுத்தை நொடித்துவிட்டு போவாள்.

அம்மா அப்படி எடுத்து எடுத்து சொன்னாலும் நான் ஏன் இப்படி மறந்து போகிறேன்? வயதாகி விட்டதோ எனக்கு? நினைத்து விட்டு க்ளுக்கென்று சிரித்தாள் 1234.

92இன் அடுத்த அறிவுரை ஞாபகத்துக்கு வந்தது. 'கண்ட கண்ட இடத்திலே நின்னுகிட்டு உனக்கு நீயே சிரிச்சுக்கறது - இதென்ன கெட்ட பழக்கம்?'

ஓ, அம்மா, நான் நின்னுகிட்டு சிரிக்கலை, நடந்துகிட்டே சிரிக்கிறேன்! நினைத்தவள் ஓவென்று வாய்விட்டே சிரித்து விட்டாளோ? பக்கத்து பஸ் ஸ்டாப்பில் நான்கு இளைஞர்கள் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.

அவர்கள் கண்களைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது 1234க்கு.
வேண்டாம்! இப்படியே காலேஜ் போனால் வகுப்பிலிருக்கும் 1180 உம், 1028 உம், அதாவது பரவாயில்லை.. அந்த லெக்சரர் 996உம் 'ஈ..' என்று இளித்து நொள்ளைப் பார்வை பார்ப்பார்கள். பேசாமல் வீட்டுக்கு திரும்பிப் போய் விடலாம். போய் துப்பட்டா அணிந்து கொண்டு திரும்ப வரலாம் என்று நினைத்தபடி பஸ்ஸைப் பிடிக்கக் கிளம்பினாள் 1234.

[இதென்ன 2100 ஆம் வருடத்துக்கான விஞ்ஞானக் கதையா என்றெல்லாம் கேட்க வேண்டாம். வேலியில் ஓடுகிற 121 ஐ எதற்கு வேட்டியில் விட்டுக் கொள்ள வேண்டும்? யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத வகையில் கதை எழுத நினைப்பவர்கள் இந்த உத்தியைக் கடைபிடிக்கலாம். இதிலும் ஏதாவது தவறு கண்டுபிடிக்கிறவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன் - அதற்கு காரணம், இந்தக் கதையை எழுத எனக்கு உதவிய எனது 'பேய்' எழுத்தாளர்கள் தான்!]

Monday, March 07, 2005

எப்படி இருக்கு இந்த மாசம்?

எந்த மாசத்துக்கு வேண்டுமானாலும் பொருந்துகிற மாதிரி
ஒரு ராசி பலனை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.
எனக்கு பொருந்துகிறது. உங்களுக்கு எப்படி
என்பதை சொன்னால் மற்றவர்களுக்கு
பரிந்துரைக்க வசதியாயிருக்கும்!

[கணித்தவர்: கும்பகோணம் பிள்ளையார் கோவில் தெரு
ஜோதிட பூஷணம் திரு மூர்த்தி கணேஷ் அவர்கள்]


மேஷம்:
கிரக சஞ்சாரம் பிரமாதமா இருக்கு! உங்களுக்கு நல்ல திருப்பம்
இருக்கு. திருப்பம்னா சாதாரண திருப்பம் இல்லை -
உங்க தலை அப்படியே ஒரு திரும்பு திரும்பி,
முதுகுக்கு நேரா வந்துடும்! உங்க பின்னாலே இருக்கிற
எதிரிகளை நீங்க கண்டு பிடிச்சு தப்பிச்சுடுவீங்க!
உங்களுக்கு ராசியான கல்: பாறாங்கல்! ராசியான எண்: 0.

ரிஷபம்:
ÅçÅñÊ À¡ì¸¢ò ¦¾¡¨¸ ²¾¡ÅÐ þÕ측?
±øÄ¡õ þó¾ Á¡ºõ Àò¾¡õ §¾¾¢ìÌû ÅóÐ §ºÕõ.
À¾¢¦É¡ýÉ¡õ §¾¾¢ «¨¾ Å¢¼ þÃñÎ Á¼íÌ
¸¼ý ¦¸¡ÎòÐÎÅ£í¸! ¸øÂ¡½Á¡¸¡¾Åí¸ÙìÌ «ðÄ£Šð
´Õ ¸øÂ¡½Á¡ÅÐ ¿¼ìÌõ.
¸øÂ¡½õ ¬ÉÅí¸, '²ñ¼¡ Àñ½¢¸¢ð§¼¡õ'Û
¸Å¨Äô ÀÎÅ£í¸!
¯í¸ÙìÌ Ã¡º¢Â¡É ±ñ: 15687643267892.
±ó¾ì ¸¡Ã¢Âò¨¾ò ¦¾¡¼í¸¢É¡Öõ, þó¾ ±ñ¨½
»¡À¸ô ÀÎò¾¢ô À¡÷òÐÅ¢ðÎ ¬ÃõÀ¢ò¾¡ø, ¿¢îºÂõ ¿¼ìÌõ.

மிதுனம்:
«ÖÅĸô À½¢Â¢ø þÕ츢ÈÅí¸ÙìÌ
Üξø ¦À¡ÚôÒ ÅóÐ §ºÕõ.
¿£í¸ ÁðÎõ 'Ч¼ §Àì' ¦ºöÐ
§Å¨Ä Àñ½¢¸¢ðÊÕì¸, ÁüÈÅ÷¸û ±ø§Ä¡Õõ
ºÃ¢Â¡ ³óÐ Á½¢ìÌ '¨Ãð' ¦º¡øÄ¢Å¢ðÎ
§À¡öì ¦¸¡ñÊÕôÀ¡÷¸û.
º¢ÄÕìÌ þ¼ Á¡üÈõ ²üÀ¼×õ Å¡öôÀ¢ÕìÌ.
㽡ÅÐ Á¡Ê¢ĢÕóÐ ³ó¾¡ÅÐ Á¡ÊìÌ
Á¡ò¾ô À¼Ä¡õ.
¯í¸ÙìÌ Ã¡º¢Â¡É ±ñ:
õõ.. ¿£í¸§Ç ´Õ ¿õÀ¨Ãô §À¡ðÎìÌí¸!


கடகம்:
¦ÅÇ¢¿¡ðÎò ¦¾¡¼÷Ò¨¼ÂÅ÷¸ÙìÌ
«Õ¨ÁÂ¡É Á¡¾õ þÐ.
¬÷¼÷¸û ÅóÐ ÌÅ¢Ôõ.
¬É¡, ¿£í¸
¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ ¬÷¼÷ Å¡íÌžüÌû
þó¾ Á¡¾õ ÓÊ狀 §À¡Â¢Îõ.
«ôÒÈõ «¾É¡§Ä ¿‰¼õ ¾¡ý.


சிம்மம்:
§Å¨Ä þøÄ¡¾Åí¸ÙìÌ «Ãº¡í¸ §Å¨Ä ¸¢¨¼ìÌõ.
«í§¸ §À¡É À¢ÈÌõ, §Å¨Ä þøÄ¡Á ¯ð¸¡÷ó¾¢ÕôÀ£í¸!
'Å¢.¬÷.±Š'ìÌ «ô¨Ç Àñ½ ¿¢¨ÉÕ츢ÈÅí¸
¦¸¡ïºõ §Â¡º¨É Àñ½¢ðÎ ¦ºö §ÅñÊÂÐ
«Åº¢Âõ. Å£ð椀 Á¨ÉÅ¢ ¸¢ð§¼ Á⡨¾
̨ÈïÍ §À¡¸ì ÜÊ šöôÒ¸û «¾¢¸õ.
'±ôÀ×õ «ôÀÊò ¾¡ý!' «ôÀËí¸¢ÈÅí¸
¨¾Ã¢ÂÁ¡ þÈí¸¢Îí¸!


கன்னி:
[¸øÂ¡½Á¡¸¡¾ ¦À¡ñÏí¸ ÁðÎõ
þ¨¾ô ÀÊì¸Ïõ. ²ýÉ¡, þÐ ¸ýÉ¢ Ả!]


À¼Ì Á¨ÈÅ¢§Ä Íñ¼ø ¾¢ýÛ ¸¡¾Ä¢îºÅí¸ÙìÌ
þÐ «Õ¨ÁÂ¡É Á¡¾õ. ¸øÂ¡½õ ¿¢îºÂÁ¡Ìõ.
¬É¡, ¯í¸ ¸¡¾Ä÷ ܼ þø¨Ä!
ÒÐô ¨ÀÂý Àò¾¢ ¸Å¨Äô À¼ §Å½¡õ –
«ÅÕõ Íñ¼ø Å¡í¸¢ì ¦¸¡ÎôÀ¡÷!


துலாம்:
¾Ã¡Í ¨Åî͸¢ðÎ ±ø§Ä¡¨ÃÔõ ÐøÄ¢ÂÁ¡ ±¨¼ §À¡ðÎô
ÀÆ¸È ¬û ¿£í¸! ¬É¡ø, ¾Ã¡Í ¾¡ý
ºÃ¢Â¡ þø¨Ä- ¦Ã¡õÀô ÀÆÍ! Á¡ò¾¢Îí¸.
À¡Õí¸ - ´Õ ¸¢§Ä¡ ±¨¼ ¸ø - 500 ¸¢Ã¡¨Áì ܼ
¾¡ñÎÈ Á¡¾¢Ã¢ ¦¾Ã¢Â¨Ä!
¯í¸ÙìÌ Ã¡º¢Â¢øÄ¡¾ ¸ø: ±¨¼ ¸ø!

விருச்சிகம்:
Ò¾¢Â ÓÂüº¢¸û ±øÄ¡õ ¦ÅüÈ¢ ¦ÀÚõ.
À¨ÆÂÐ ¿£í¸ ±ýÉ ¾¡ý
¾¨Ä¸£Æ¡ ¿¢ýÉ¡Öõ ¦ÅüÈ¢ ¦ÀÈ¡Ð.
±¾¢Ã¢¸û ±ø§Ä¡Õõ µÊô §À¡Â¢ÎÅ¡í¸.
«Ð측¸ ¸Å¨Äô À¼¡¾£í¸ -
¯í¸ ¿ñÀ÷¸û ±ø§Ä¡Õõ
±¾¢Ã¢¸û ¬Â¢ÎÅ¡í¸!


தனுசு:
ÍÂÁ¡ ¦¾¡Æ¢ø ¦¾¡¼íÌÈÅí¸ÙìÌ
µ§†¡ Á¡¾õ þÐ. Ó츢ÂÁ¡,
âº÷ù À¡íì ¬ÃõÀ¢îº£í¸ýÉ¡ -
À½õ ¦¸¡ð§¼¡ ¦¸¡ðÎýÛ ¦¸¡ðÎõ.
À½ Å¢„Âò¾¢§Ä ¦Ã¡õÀ ¯„¡Ã¡ þÕí¸.
¦ºì [Cheque] ²¾¡ÅÐ ¦¸¡Îì¸ §¿÷ó¾¡,
¨¸¦ÂØòÐ §À¡¼¡Á ¦¸¡Îí¸!


மகரம்:
þÐŨà Áɨº ¬ðÊô À¨¼î͸¢ðÊÕó¾
ÌÆôÀõ ±øÄ¡õ ¿£í¸¢,
'²ý þùÅÇ× ¿¡û ÌÆõÀ¢§É¡õ?'Û
¦¾Ã¢Â¡Á ÌÆõÀ¢ì¸¢ðÊÕôÀ£í¸!
ÁÕóÐ Á¡ò¾¢¨Ã ±ÎòÐìÌõ §À¡Ð
¦¸¡ïºõ ƒ¡ì¸¢Ã¨¾Â¡ þÕí¸.
Á¡ò¾¢¨Ã §À¡ðθ¢ÈÐìÌ Óý§É,
š¢§Ä ¾ñ½¢ °ò¾¢¸¢ðÎ «ôÒÈõ
Á¡ò¾¢¨Ã¨Â Å¡öìÌû§Ç §À¡Îí¸!
«Êì¸Ê Å¢ì¸ø ÅÕõ. «ôÀ ¾ñ½¢ ÌÊí¸!


கும்பம்:
¦Àñ¸û ¯¼ø ¿ÄÉ¢ø ¦¸¡ïºõ
¸ÅÉõ ¨ÅôÀÐ ¿øÄÐ. ¬ñ¸û ¯¼ø ¿¢¨Ä¨Â
¸Åɢ측Á «ôÀʧ ŢðÎÎí¸! ±ó¾ º¢ì¸Ä¡É ¸¡Ã¢Âõ
±ýÈ¡Öõ, º¡Á÷ò¾¢ÂÁ¡ þý¦É¡Õò¾÷ ¾¨Ä¢§Ä
¸ðÊ ÓÊîÍÎÅ£í¸.
«¾É¡§Ä, ¬À£…¢ø ¯í¸ÙìÌ
DGM «øÄÐ AGM À¾Å¢ ¸¢¨¼ìÌõ.
þôÀ§Å AGM ¬¸ þÕ츢ÈÅí¸,
GM ¬Å¡í¸!


மீனம்:
ÁÉ꤀ ¯üº¡¸õ ÜÎõ.
«¾É¡§Ä ±ôÀ À¡÷ò¾¡Öõ º¢Ã¢î͸¢ð§¼ þÕôÀ£í¸.
¯í¸ ¿ñÀ÷¸û ±øÄ¡õ §º÷óÐ ¯í¸¨Ç
¨Àò¾¢Â측à ¬ŠÀò¾¢Ã¢Â¢§Ä §º÷òÐÎÅ¡í¸.
±¾¢÷ôÒ¸û Á¡ÂÁ¡Ìõ. ±í§¸Â¢ÕóÐ
±¾¢÷ôÒ ÅÕÐýÛ ¦¾Ã¢Â¡¾ Á¡¾¢Ã¢, Á¡ÂÁ¡Â¢Îõ!
«ïº¡Ú ÅÕ„Á¡ À¾Å¢ ¯Â÷§Å
þø¨ÄýÛ ¸Å¨Äô ÀÎÈÅí¸ -
þÉ¢§Á «ó¾ Á¡¾¢Ã¢ ¸Å¨Äô
À¼ §Åñʾ¢ø¨Ä.
«Îò¾ ÅÕ„õ, '¬§ÈØ ÅÕ„Á¡
À¾Å¢ ¯Â÷× þø¨Ä' «ôÀËýÛ
ÒÐ Á¡¾¢Ã¢ ¸Å¨Äô À¼Ä¡õ!

Wednesday, February 23, 2005

தங்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு தந்தமைக்கு..

வணக்கம். இது தானியங்கி மருத்துவ உதவி அழைப்பு எண். தங்கள் காத்திருப்பு
எண்: 325. தங்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம். தங்கள் பிறப்பு எண்ணைத் தெரிவிக்கவும்: பீப்..

ஓ ஷிட்!

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. தங்கள் பிறப்பு எண்ணைத் தெரிவிக்கவும்: பீப்..


549023178.. ஓ ஷிட்!

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. தங்கள் பிறப்பு எண்ணைத் தெரிவிக்கவும்: பீப்..

5490231728921321

தாங்கள் சொன்ன பிறப்பு எண்
5 4 9 0 2 3 1 7 2 8 9 2 1 3 2 1
சரியாக இருந்தால் சரி என்று சொல்லவும், இல்லை எனில் தவறு என்று சொல்லவும்.

சரி சரி..

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. தாங்கள் சொன்ன பிறப்பு எண்
5 4 9 0 2 3 1 7 2 8 9 2 1 3 2 1
சரியாக இருந்தால் சரி என்று சொல்லவும், இல்லை எனில்
தவறு என்று சொல்லவும்.

சரி


வணக்கம் திரு ராஜசுகுமாரமூர்த்தி. நீங்கள் பெங்களூர் நகரில் பனசங்கரி பகுதியில்
ராகவேந்திரா சாலையில் எண் 123இல் வசிக்கிறீர்கள். தங்கள் பகுதியில் இருக்கும்
212 மருத்துவர்களில் 208 மருத்துவர்கள் தற்சமயம் மற்ற நோயாளிகளை கவனித்துக்
கொண்டிருக்கிறார்கள். 4 மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தங்களுக்கு உடனடியான கவனிப்பு தேவையெனில் அவசரம் என்று கூறவும்.
இல்லை எனில் காத்திருக்கிறேன் என்று கூறவும்.

ம்ம்ம்ம்.. அவசரம், அவசரம்.

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. தங்களுக்கு உடனடியான
கவனிப்பு தேவையெனில் அவசரம் என்று கூறவும். இல்லை எனில் காத்திருக்கிறேன்
என்று கூறவும்.

அ..வசரம்

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. தங்களுக்கு உடனடியான
கவனிப்பு தேவையெனில் அவசரம் என்று கூறவும். இல்லை எனில் காத்திருக்கிறேன்
என்று கூறவும்.

அவசரம்

உங்களை காக்க வைப்பதற்கு மன்னிக்கவும். மருத்துவர் தேர்ந்தெடுப்புக்கு
சில கேள்விகளுக்கு விடை தேவை. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உபாதை
வயிற்றுக்கு மேலா? அல்லது கீழா? மேல் பகுதி எனில் மேல் என்று கூறவும். கீழ்
பகுதி எனில் கீழ் அல்லது கீல் அல்லது கீள் என்று கூறவும்.

ஹ்ம்.. மேல்ல்ல்ல்ல்

மன்னிக்கவும். புரிந்து கொள்ள ..

மேல்

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. வயிற்றுக்கு மேலா?
அல்லது கீழா? மேல் பகுதி எனில் மேல் என்று கூறவும். கீழ் பகுதி எனில் கீழ்
அல்லது கீல் அல்லது கீள் என்று கூறவும்.

மேல்


மாரடைப்பு சம்பந்தமானது எனில் மிக வேகமான சிகிச்சை தேவை. மாரடைப்பு
எனில் ஆமாம் அல்லது ஆமா அல்லது ஆம் என்று சொல்லவும். இல்லை எனில்
இல்லை என்று சொல்லவும்.

அப்பாடி.. ஆம்

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை.

அட எழவே!

மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. மாரடைப்பு எனில் ஆமாம்
அல்லது ஆமா அல்லது ஆம் என்று சொல்லவும். இல்லை எனில் இல்லை
என்று சொல்லவும்.



நீங்கள் சொல்ல வந்தது ஆம் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆமாம் எனில்
ஆமாம் அல்லது ஆமா அல்லது ஆம் என்று சொல்லவும். இல்லை எனில்
இல்லை என்று சொல்லவும்.

ஆம்

இந்த மாரடைப்பு இதற்கு முன் வந்திருக்கிறதா? ஆமாம் எனில்
ஆமாம் அல்லது ஆமா அல்லது ஆம் என்று சொல்லவும். இல்லை எனில்
இல்லை என்று சொல்லவும்.

ஆம்.

இது எத்தனையாவது முறை? மூன்றாவது முறை எனில் மூன்று அல்லது மூணு,
இரண்டாவது முறை எனில் இரண்டு அல்லது ரெண்டு என்று கூறவும்.

மூணூஉ


மன்னிக்கவும். புரிந்து கொள்ள இயலவில்லை. மூன்றாவது
முறை எனில் மூன்று அல்லது மூணு, இரண்டாவது முறை எனில் இரண்டு
அல்லது ரெண்டு என்று கூறவும்.

மூன்று

தங்களுக்கு இன்னும் வியர்த்துக் கொண்டிருக்கிறதா என்று தெரியப்
படுத்தவும். ஆமாம் எனில் ஆமாம் அல்லது ஆமா அல்லது ஆம்
என்று சொல்லவும். இல்லை எனில் இல்லை என்று சொல்லவும்.

ஆம்

மருத்துவர் எண்: 9823162 உங்களுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவர்
பத்து நிமிடங்கள் 23 விநாடிகளில் தங்கள் இல்லம் வந்து சேருவார். தங்களுக்கு
அதற்குள் வேறு உதவி தேவையெனில் 001100111111111 என்ற எண்ணை சுழற்றி
காத்திருப்பு எண்: 325 என்று கூறி உதவி பெறலாம். இந்த அழைப்பை இத்துடன்
முடிக்க சரி என்று சொல்லவும். வேறு உதவிகளுக்கு வேறு என்று சொல்லவும்.

...

தாங்கள் எதுவும் கூறவில்லை. இந்த அழைப்பை இத்துடன் முடிக்க சரி என்று
சொல்லவும். வேறு உதவிகளுக்கு வேறு என்று சொல்லவும்.

...

தாங்கள் எதுவும் கூறவில்லை. இந்த அழைப்பை இத்துடன் முடிக்க சரி என்று
சொல்லவும். வேறு உதவிகளுக்கு வேறு என்று சொல்லவும்.

...

தாங்கள் இறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை எனில் இல்லை
என்று உடனடியாகக் கூறவும்.

...

மருத்துவர் எண்: 9823162 அழைப்பு தற்காலிகமாக நீக்கப் பட்டிருக்கிறது.
தங்களுக்கு மருத்துவ உதவி தேவையெனில் 001100111111222 என்ற எண்ணை சுழற்றி
காத்திருப்பு எண்: 325 என்று கூறி உதவி பெறலாம். இந்த அழைப்பை இத்துடன்
முடிக்க சரி என்று சொல்லவும். வேறு உதவிகளுக்கு வேறு என்று சொல்லவும்.

...

Friday, September 24, 2004

ந.தொ.பே

ந்தக் காலத்தில், ஒரு தெரு முனையில் ஒருவன் இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி பேசி, அப்போதைக்கப்போது சிரித்தும் கொண்டிருந்தால் நாங்கள் கொஞ்சம் தூர ஒதுங்கிப் போவோம். சிறிது தூரம் சென்று, நின்று, திரும்பிப் பார்ப்போம். 'பாவம், யார் பெத்த பிள்ளையோ?!' என்று கூட கரிசனப்பட்டதுண்டு. அடுத்த முறை இதே தெருவில் 'அது' இருக்காது, எங்காவது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மோட்டுவளையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கலாம் என்று கூட மனக்கணக்கு போட்டிருக்கலாம்!

இப்போது அப்படியெல்லாம் இல்லை! ஒரு பைத்தியமே தெரு முனையில் நின்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தால் கூட, யாரோ 'நடமாடும் தொலை பேசியில்' [அதாங்க, மொபைல் ஃபோன்] உரையாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்து, முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் விலகி விடுகிறோம்!

இந்த நடமாடும் தொ[ல்]லை பேசி எந்த அளவுக்கு நம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத அளவுக்கு ஒட்டிப் போய்விட்டது!
யாரிடமாவது 'இன்னைக்கு என்ன தேதி?' என்று கேட்டுப் பாருங்கள். படக்கென்று, பேண்ட் பெல்ட்டில் இருந்து ந.தொ.பேயை எடுத்துப் பார்த்துதான் சொல்கிறார்கள்! ஒருவரிடம் நேரம் கேட்ட போது கூட, கடிகாரத்தைப் பார்க்காமல், இதைத் தான் பார்த்தார்! நேரம்!!

சின்னஞ்சிறு குழந்தைகள் பஸ், லாரி, கார் பொம்மை வைத்திருப்பது போல், பெரியவர்களுக்கு இப்போது ந.தொ.பே! அதில் இருக்கிற பித்தான்களை வைத்து, அப்பப்போ இராமாயணம், மகாபாரதம் கணக்காக என்னவோ எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்! அது என்ன தான் எழுதுகிறார்களோ?!
சிலர் இருக்கிற இசைத் துணுக்குகளைத் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். நமக்கு அந்த இசைத் துணுக்குகள் மேல் முழு எரிச்சல் வரும் வரை விடமாட்டார்கள். இதில் வேறு, காதலி எண் ஒன்று கூப்பிட்டால் இந்த இசை, காதலி எண் இரண்டு கூப்பிட்டால் அந்த இசை, மானேஜர் கூப்பிட்டால் 'லொள், லொள்' இப்படியெல்லாம் வகைப் படுத்தல் வேறு வைத்துக் கொண்டு, படுத்துகிறார்கள்.

அவர்களுக்கு ந.தொ.பே அழைப்பு வரும்போது நீங்கள் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதல் இசை வரும். அவர் கவனிக்கவே மாட்டார். இரண்டாம் அழைப்புக்கு, டக்கென்று ந.தொ.பேயைக் கையில் எடுப்பார். மூன்றாம் அழைப்பு ஓஓஓவென்று பெரும் குரலில் கூக்குரலிடும்! அப்போது தான் அவர் உன்னிப்பாக அழைத்தவர் யார் என்று நெற்றி சுருக்கி யோசித்துக் கொண்டிருப்பார். ஒரு வழியாக அந்த ஒலியை நிறுத்தி அவர் 'ஹலோ' சொல்வதற்குள், நமக்கு இரத்தக் கொதிப்பு எகிறியிருக்கும்!

ங்கள் அலுவலகத்துக்கு வரும் வெளியாட்கள் பலரையும் கவனித்துப் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு புரிபடவில்லை. அவர் அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது, அது எப்படி சொல்லி வைத்தாற்போல் சரியாக அழைப்பு வருகிறது? 'ஹய் [அய்??], நான் ஈ ஓட்டீஸ் அண்ட் கம்பெனியில் இருக்கேன்பா, டிஸ்கஷன்!' என்று சொல்லி அணைத்து விடுவார்கள். சிலருக்கு விடாமல் டக்கென்று இன்னொரு அழைப்பு கூட உடனடியாக வந்து பார்த்திருக்கிறேன்! 'எருமை சாணி!' என்று சொல்லி விட்டு, அதற்கும் பதில் சொல்வார். சிலர் ந.தொ.பேயை தற்காலிகமாக சாகடித்தும் பார்த்திருக்கிறேன்! இவர்கள் எல்லாம் தங்கள் நண்பர்களிடம் முன்னமேயே சொல்லி வைத்து, அழைக்க வைக்கிறார்களோ என்று கூட சில சமயங்களில் யோசித்ததுண்டு!

'லோ, சொல்லு!'
'எங்கேயிருக்கே?'
'ஹ்ம்? பல்லவி தியேட்டர்ல? என்ன விஷயம்?'

பக்கத்து சீட் ஆளின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் வில்லன் ஹீரோவைக் குறி வைத்து நெருங்கிக் கொண்டிருக்கிற காட்சியாக இருந்தால்?! நற.. நற.. நற..

பெரிய பெரிய கட்டிடங்களுக்குள் இந்த ந.தொ.பே. அழைப்பு வந்து விட்டால், அவர்கள் பாடு பார்ப்பதற்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பக்கம் திரும்பி விட்டு, முடியாமல், வட மேற்கு, தென் கிழக்கு பக்கம் கொஞ்சம் முயன்று, அப்போதும் முடியாமல் 'ஒரு நிமிஷம்' சொல்லி, அவசரமாக 'இயற்கை அழைப்பு'க்கு பதில் சொல்ல ஓடுகிற மாதிரி, அவர்கள் திறந்த வெளி நோக்கி ஓடும் அழகே அழகு!

'லோ முண்டம்'
'சொல்லுப்பா!'
'என்ன சொல்லுப்பா? நான் நேத்திக்கு என்ன சொன்னேன்?'
'என்ன சொன்னே? சரியா எட்டு மணிக்கு வரச் சொன்னே..'
'அதெல்லாம் வக்கணையா சொல்லு. இப்ப மணி என்ன?'
'எட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு! நீ எங்கே இருக்கே?'
'ரொம்ப ஒழுங்கு. நான் சொன்ன நேரத்துக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னேயே இங்கே இருக்கேன்'
'எங்கே இருக்கே?'
'நான் சொன்ன இடத்திலேயே! ஜனதா பஜார் எதிர்க்க.. பஸ் ஸ்டாப்லே!'
'ஓ, நானும் அங்க தான் இருக்கேன். திரும்பிப் பாருடா முட்டாள், உனக்கு அடுத்து நாலாவது ஆளா நான் தான் நின்னுகிட்டிருக்கேன்!'
'ஓ, வந்துட்டியா? இப்ப 12A வரும். அதுல போயிடலாமா?'
'இல்லை, ஆட்டோல போயிடலாம்.'
'ஓகே. பை!'

இரண்டு பேரும் ந.தொ.பே.களை அணைக்கிறார்கள்! இதற்குப் பெயர்தான் விஞ்ஞான முன்னேற்றம்!

என் நண்பன் ஒருவன் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை தன் நண்பிக்கு SMS அனுப்புவான். அப்படி என்ன தான் அனுப்புவார்களோ என்று நான் ரொம்பத்தான் கவலைபட்டுக் கொண்டதுண்டு. ஒவ்வொரு நிமிடமும் அவன் முகத்தில் குறும்பு நர்த்தனமாடிக் கொண்டிருக்கும்!

இன்னும் சில பல வருடங்களில் காதல் என்பது தன் முக்கியத்துவத்தை, தனித்துவத்தை இழந்து விடுமோ என்று தோன்றுகிறது! அப்போதெல்லாம் ஒரு கடுதாசி எழுதி நம் மனம் கவர்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவள் என்ன பதில் எழுதுவாளோ என்று பரிதவித்துக் காத்திருந்து, அந்த மடல் வரும் போது, மனம் அடையும் அந்த குதூகலம் இப்போது இருக்கிறதா?!

'இன்னாமே! நான் உன்னை விரும்புறேன்! நீ என்னை விரும்புறியா?' கீய்ய்ய்ய்ய்ய்க்.. அனுப்பப் பட்டது! ஐந்து விநாடிகளுக்குப் பிறகு. கீய்ய்ய்ய்ய்ய்க்.. 'இல்லை! நான் அப்படியெல்லாம் பழகவில்லை!'

இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு, இந்த ந.தொ.பேயை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
'அம்பது பைசா குடு சார். காஷ்மீரோட பேசிக்க!'
'ராத்திரி பேசு நைனா, காசே குடுக்காதே!'
'எத்தினி வாட்டி வேணா sms அனுப்பிக்க! free!!'
'உன் ஊட்டுக்கு மாத்திரம் பேசு. பேசு. பேசு. பேசிக்கிட்டே இரு!'

இப்படியெல்லாம் ஆட்களை இழுத்துப் போட எக்கச்சக்க தந்திரங்கள்!
ஒரு காலத்தில், தூர்தர்ஷன் வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் என்று ஒரு நிகழ்ச்சி வழங்கியது. ஏழரை மணிக்கே எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கைகளில் ஈரத்தை ஒற்றி எடுத்தபடி, ஒரு கும்பல் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமரும்! நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், எல்லோர் முகங்களிலும் ஒரு ஆர்வம் வந்து அமர்ந்திருக்கும்.

இப்போது நிமிடத்துக்கு நிமிடம், சேனலுக்கு சேனல், ஒளியும் ஒலியும் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. அடுப்படியில் இருந்து அப்போதைக்கப்போது எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும் ஆர்வமின்மையும் வந்தாயிற்று.

'ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!'

இந்த மாதிரி கவித்துவமாக நினைத்து அவசரமாகத் தொலைபேசியை எடுத்து ஆரவாரமாகப் பேசும் நிலை போய்.... இன்னும் சில நாட்களில்..

'ம் ம் ம் ம் ம்.. சொல்லுப்பா, எதுக்கு போன் பண்ணே?'