Thursday, February 22, 2007

நறுக்குன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி..

டோண்டு, வீ மிஸ் யூ ;-)
இன்று இரவு 11:59:59
முதல் பகுதியே இறுதிப் பகுதி ஆகும் கொடூரம்!



றுக்குன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க தெரிஞ்ச மக்கள் வலைப் பதிவு உலகில் இருக்காங்கங்கிறதை அங்க இங்க பார்த்து தெரிஞ்சுகிட்டபிறகு தான், நாங்க அந்த ஐடியாவைக் கொடுத்தோம். நெறைய கேள்விகள் வந்து குவியப் போகுது, திண்டாடப் போறோம்னெல்லாம் கனவெல்லாம் வேற கண்டுட்டோம்.

சுபமூகா சார் ரொம்ப கோபமா இருக்கார். 'நான் சொன்னேனே, இதெல்லாம் இங்க சரிவராது' அப்படீன்னு வருத்தப் பட்டாரு. 'இருபது கேள்வி வந்ததா சொன்னீங்களே?' அப்படீன்னு சமாதானப் படுத்திப் பார்த்தோம்.

அப்படி ஒண்ணும் சுவாரசியமான கேள்விகள் - அதாவது - சுவாரசியமான பதிலை வரவழைக்கிற கேள்விகள் இல்லைன்னு சொன்னார்.

டோண்டு அப்படின்னு ஒரு வார்த்தை இருந்ததுக்கு வந்து குவிஞ்ச கூட்டம் எங்க போச்சுன்னு கூடுதல் வருத்தம் வேற :-(

இன்று இரவு 11:59:59 இந்திய நேரம் வரைக்கும் பார்க்கப் போறோம்.
கேள்விகள் குவிஞ்சா, ஏலேலோ ஐலசா தொடரும். இல்லை என்றால், ஏலேலோ ஐலசா பகுதி ஒன்று - இறுதிப் பகுதி என்பதை அறிந்து கொள்க!

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு
(கூடுதல் தலைப்புகள் மாத்திரம் அல்ல, பதிவும்!)