Sunday, May 14, 2006

சுஜாதா - தங்க வேட்டை - சுபமூகா

சுஜாதா 'சன்' தொலைக் காட்சியின் பிரசித்தி பெற்ற தங்க வேட்டை நிகழ்ச்சியில் தோன்றப் போகிறார்.

அந்த நிகழ்ச்சியில் இடம் பெறும் இன்னொரு நபர் சுபமூகா!

இப்படியெல்லாம் வீண் கற்பனை வேண்டாம். உங்களை உள்ளே இழுத்து வர இது! ;-)

சுஜாதா - கணேஷ் - வசந்த் கூட்டணி திரும்ப விகடனில்!

சுஜாதா எழுதிய கதையைப் படிக்க யாருக்கு தான் கசக்கும்?! அதுவும் கணேஷ் வசந்த் இருந்தால் கேட்கவே வேண்டாம். முதல் பகுதியில் தங்க வேட்டை பற்றி போகிற போக்கில் புன்னகை புரிய வைக்கிற கருத்தைக் கொடுத்திருக்கிறார். (இதைப் பற்றி நான் எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்தது!)

இந்த வார விகடனைப் படித்தாரா? இல்லை என் பதிவைப் பார்த்தாரா தெரியவில்லை, ரம்யா இந்த வாரம் 'மின்னாடி' உபயோகப் படுத்தவில்லை. [ரொம்பத் தான் ஓவர் எதிர்பார்ப்பு!]

ஆனால் மின்னாடி என்கிற வார்த்தையில் என்னை அறியாமலேயே ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்து விட்டது! 'கண்ணாடி மின்னாடி' என்றெல்லாம் வார்த்தைகள் உபயோகித்து புதுக் கவிதை எழுதத் தோன்றுகிறது!

இந்த வாரம் தங்க வேட்டையில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் HIV+ கொண்டவர்கள். அந்த சின்னக் குழந்தைகளைப் பார்த்தபோது மனது கனத்தது.

அப்புறம்..
திரும்ப சுஜாதா..

இந்த வாரம், கதையின் கடைசி ஒரு பத்திக்காக முழுப் பகுதியையும் படிக்க வைத்திருக்கிறார்.

அது தான் சுஜாதா!!

2 பின்னூட்டங்கள்:

said...

ஆஹா நம்ம அபிமான எழுத்தாளர் சுஜாதா! அவசர அவசரமா ஓடிவந்தா..

உங்கள் எண்ணம் நிறைவேறிவிட்டது சுபமூகா :))

மீனா.

said...

palivangitengaley