Wednesday, December 01, 2004

ஈ-மையல் பற்றி..

அமுதசுரபி இதழில் வெளியான எனது கதையைப் பற்றி
['நான் அனுப்புவது ஈமெயில் அல்ல, மையல்']
கருத்துகள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

'நன்றாக இருந்தது', 'சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு' போன்ற

கருத்துகளுடன் சில மாறுபட்ட கருத்துகளையும் பார்க்க முடிந்தது.

நம்ம மரவண்டு, கதையை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கணும்னு

சொன்னார். வாங்கிற தர்ம அடி இன்னும் கொஞ்சம்
ஜாஸ்தி ஆகணும்னு சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.
கதையை இப்போது படிக்கும் போது, சில இடங்களில்
கொஞ்சம் இழுவையாக எனக்கே தோன்றுகிறது!

எழுத்தாளர் சித்ரன் என்னோட இன்னொரு கதையை

இது ஞாபகப் படுத்தியதாக சொன்னார். அரைச்ச மாவையே
அரைச்சிருக்கே என்று நேரடியாக சொல்லாமல்,
வாழைப் பழ ஊசி போட்டிருக்கார்னு நினைக்கிறேன்.

அவர் மேற்கோள் காட்டிய அந்த கதை - 'தண்ணி எடுக்கவந்த மச்சான்'.
சாவி அவர்களின் பாராட்டைப் பெற்ற கதை. தண்ணீர் கஷ்டத்தில்

பரிதவிக்கும் சென்னை மாநகரில், தண்ணீர் பிடிக்க வரும் காதலன், காதலி
அவர்கள் நடுவில் மலரும் காதலை கடிதங்கள் வாயிலாக சொல்லும் கதை.

இந்த காதலன், காதலி, காதல், மறுக்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தல்

இதெல்லாம் எத்தனை தடவை எப்படி சொன்னாலும் அலுக்காத விஷயம்!!

நான் நகைச்சுவை என்று எழுத ஆரம்பித்தால், காதல் தான்

என் பேனா முனையில் வந்து அமர்கிறது! நான் என்ன செய்ய?! இன்னும்
மச்சான்களும் மையல்களும் தொடரத்தான் செய்யும்! :-))

த.எ.வ.ம கதை முடிவில், பயங்கரமாக மழை பெய்து தண்ணீர்

கஷ்டம் நீங்கி விடுவதாக முடித்திருந்தேன். அந்த இதழ் வெளியான வாரம்,
சென்னை மாநகரில் நிஜமாகவே பயங்கர மழை!
இசை மூலம் மழை பெய்ய வைக்கிற மாதிரி,
ஒரு நகைச்சுவை கதை மூலம் மழை பெய்ய வைக்கலாம்
என்பது அன்று புரிந்தது! [என் நகைச்சுவை கதையைப் படித்து,
அந்த கடவுளே கண்ணீர்விட்டிருக்கிறார் என்றும் கூறலாம்!]

எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் 'சிரிப்பே வரவழைக்காத சிரிப்புக் கதை'
என்று மரத்தடியில் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.
இரண்டாம் பரிசு பெற்ற இரண்டு கதைகளில் இந்தக் கதை
முதல் கதையை விட எவ்வளவோ தேவலாம் என்று
பின்குறிப்பு வேறு! இப்போது மூன்றாம் பரிசு பெறும்
மூன்று கதைகளுக்கு என்ன மாதிரி விமர்சனம் வரும்
என்று நினைக்கும் போது, வயிற்றை என்னவோ செய்கிறது..

- - - அந்த இரண்டாம் பரிசு பெற்ற மையல் கதையை விட
இது எவ்வளவோ மேல்!

:-)))

எழுத்தாளர் ஷைலஜா, கதை தூள் என்றிருக்கிறார்.

என் அறிமுகம் இன்னும் அருமை என்றிருக்கிறார்.
[நீ எழுதின கதையை விட உன் கதை அருமை???!!!]

அமுதசுரபி இதழில் என் புகைப்படம் வந்திருப்பதாக சொன்னார்கள்.
இன்னும் பார்க்கவில்லை. [தற்போது லண்டனில் இருப்பதால்]
நான் புகைப்படத்தில் பார்க்க ரொம்பப் பாவமாக இருப்பதாக
நண்பர் ஐயப்பன் சொன்னார்.
சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்?!

கருத்துகள் சொன்ன அனைவருக்கும், சொல்ல நினைத்து பிறகு
மறந்தோருக்கும், போனால் போகிறது என்று இனி சொல்லப்
போகிறவர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்,
'சுபமூகா'



7 பின்னூட்டங்கள்:

said...

போனால்ப் போகிறதென்று எழுதுகிறேன் :)
மரத்தடிக்குக் கதை பற்றிய அறிவிப்பு வந்த அன்றே
படித்து விட்டேன்,உஷா சொன்னது பாதி சரிதான்,
சில இடங்கள் சிரிக்கத்தான் செய்தேன்.

said...

மீனா -
கருத்துக்கு நன்றி.
மக்கள் கிட்டே கருத்து வாங்க
என்னென்ன மாதிரி எழுத வேண்டியிருக்கு பாருங்க!

'சுபமூகா'

said...

'மூகா'ண்ணே, கதைய படிக்கல இன்னும். ரிலாக்ஸ்ட படிச்சிட்டு பின்னூட்டமிடுறேன். அண்ணே கொஞ்சம் உங்க பக்கத்தோட எழுத்துரு அளவை மாத்துங்கண்ணே... சின்னதா இருக்கு... படிச்ச கண்ணு வலிக்குது... ஏற்கனவே சோடபுட்டி நானு....

said...

எழுத்துகள் எனக்கு குண்டு குண்டா அழகா [என் மாதிரியே!] தெரியுதே!

encoding text size medium இருந்தா கூட!

முரசு கூட இருந்தா மட்டும் எழுத்துகள்
சின்னதா ஆயிடுது! அது ஏன்னு இது
நாள் வரை புரியலை.

said...

'மூகா'ண்ணே, இன்னிக்கு ஆபிஸ்ல முரசு இல்லாம பார்த்தா எழுத்து ஒடஞ்சி ஒடஞ்சி தெரியுது வேற. டெம்ப்ளேட்ல எழுத்துருவை இது தான் பயன்படுத்தனும்னு சொல்லி வைக்கிறீங்களா என்ன? மத்த எல்லாருடைய பக்கங்களும் நல்ல தெரியுதே... டெம்ப்ளேட்டை மாத்தூங்க இல்லாட்டி....

said...

விஜய்,

Template இல் சில மாற்றங்கள் செய்தேன்.

இப்போது சரியாக இருக்கும் என்றே
நினைக்கிறேன்.

நன்றி.

said...

'மூகா'ண்ணே, இப்போ எழுத்து ஒடஞ்சி தெரியல. நல்ல தெரியுது. எழுத்து சைஸ் இதே ஒகே. ஆனால் எழுத்துருவை கொஞ்சம் பெரிசு பண்ணீங்கன்ன படிக்க சூப்பராய் இருக்கும்....