Thursday, September 07, 2006

ஜி போஸ்ட் செய்த மாயம்!

ஜி போஸ்ட் கௌதம் ஒரு பதிவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் 124 பின்னூட்டங்களைப் பெற்று அசத்தியிருக்கிறார். வாழ்த்துகள்!

இந்த மாதிரி போட்டி கீட்டி என்று சொன்னால் தான் நம் மக்கள் பின்னூட்டப் பெட்டி பக்கம் எட்டிப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது ;-)

உண்மையாகவே எல்லோரும் அசத்தியிருந்தார்கள்.

நாவல் எழுதுவது எளிது. ஒரு சிறுகதை எழுதுவது கொஞ்சம் கடினம். நான்கு வரிகளுக்குள் ஒரு சிரிப்புத் துணுக்கு எழுதுவது மிக மிகக் கடினம். அப்படியானால் ஒரு வரிக்குள் ஒரு கதை/கவிதை சொல்வது என்பது எவ்வளவு கடினம் என்பதை சொல்லத் தேவையில்லை.

என்னைக் கவர்ந்த சில வரிகள்..


நிலவு நண்பன்
எந்த திருவள்ளுவனின் படைப்பு நீ?

மதுமிதா
கேமராவுக்கே போதையா?

luckylook
பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்.....


துளசி கோபால்
ஐய்யோ ரெண்டு


Vignesh
பார்வை ஒன்றே போதுமே !!!!

luckylook
ஐ ஐ லவ் லவ் யூ யூ

விழியன்
"பெண் என்றாலே தலைவலி தானோ?"

ஜெஸிலா
தலைவலி மருந்தே தலைவலியானால்?

- - - - - - - - - - - - - - -

இது கூட நன்றாக இருந்தது.

>>
மின்னுது மின்னல்
Error 404!
>>

ஆனால் 'Too many rows' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
404: The page cannot be found!
- - - - - - - - - - - - - - -


புன்னகைக்க வைத்த இன்னொரு வரி:


Dev
வேணாம் தலைவலிக்குது அழுதுருவேன்...அவ்வ்வ்வ்வ்வ்

- - - - - - - - - - - - - - -

வெற்றி வாய்ப்பை தவற விட்டாரா? தெரியவில்லை.. இதுவும் நன்று..

Dubukku
"நல்லவேளை மூக்குத்தி ஒன்னு வாங்கினா போதும்..."
- - - - - - - - - - - - - - -

முத்தாய்ப்பாக ..

ஜி கௌதம்
ஆஆஆஆட்டம் முடிஞ்சது!!!!!!

ஓ, இது போட்டிக்கு அனுப்பப் பட்டதில்லையா? போட்டி முடிந்தது என்று கொடுக்கப் பட்ட அறிவிப்பா? :-))

நிரம்ப ரசிக்க வைத்த போட்டி. அனைவருக்கும் பாராட்டுகள்.

3 பின்னூட்டங்கள்:

said...

சும்மாஅவா.. பரிசு ஜோ சூர்யா பட டிக்கட் ஆச்சே..

எனக்கும் எழுத ஆசதான் ஆனா அந்தப் படத்த கொஞ்ச நேரத்துக்கு மேல பாக்க முடியல..

:)

said...

இது கூட நன்றாக இருந்தது.

>>
மின்னுது மின்னல்
Error 404!
/./

ஹி ஹி நன்றி

said...

வருகைக்கு நன்றி சிறில் மற்றும் மின்னல்.