Friday, October 15, 2004

ராசா....

லண்டன்
காலை 6:45

ஒரு தடிமனான ஜெர்க்கினைப் போட்டுக் கொண்டு,
கையில் ஒரு குடை வைத்துக்கொண்டு
வாக்கிங் போவது ஒரு புதுமையான அனுபவம்.

குளிர் கொஞ்சம் படுத்துகிற,
இருள் விலக தயங்கிக் கொண்டிருந்த அதிகாலை!
சூரியன்இங்கு கொஞ்சம் சோம்பேறி தான். வருவதா வேண்டாமா
என்று முடிவெடுக்கவே ஏழு மணியாகி விடுகிறது!

அருமையான சாலைகள்.
விரைந்து கொண்டிருக்கிற எக்கச்சக்க கார்கள்.. கார்கள்.. கார்கள்..
அப்போதைக்கப்போது, புகையைக் கக்கிக் கொண்டு எதிர்ப்படும் காரிகைகள்.
ஒரு மணி நேர நடையை 'நடை கட்டி விட்டுத்' திரும்பும் போது..

அந்த பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன்.

'நான் breadக்கு மாறிட்டேனே!' அதுக்கு JAM வேண்டியிருந்தது!
கடையில் இருந்த பொருள்களில், அட.. காஞ்சிபுரம் கைக்குத்தல் அரிசி,

ரசப் பொடி.. இப்படியெல்லாம் தமிழ் எழுத்துகள் தெரிந்தன.
அப்போது தான், திடீரென்று அந்தப் பாடல் ஒலித்தது...

மன்மத ராசா, மன்மத ராசா!

ஒரு ஆட்டம் ஆடி விடலாமா என்று கூட யோசித்து விட்டேன்.
15 நாட்கள் கழித்து தமிழ் வார்த்தைகள் காதில் விழுகின்றன.

[அதுவும் முதல் வார்த்தையே மன்மத ராசா!]

இந்தப் பாட்டை சில நாட்களுக்கு முன் என் நண்பர்களிடம் விவாதத்தின் போது கிண்டலடித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது யோசிக்கையில்..
பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது!!


சிரித்துக் கொண்டே,
'சுபமூகா'

0 பின்னூட்டங்கள்: