பொங்கல் திருநாள். மதுரை மாநகரில் பொங்கல் திருநாள் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம் என்று சென்றிருந்தேன்.
வீதியெங்கும் வீதியை மறைத்து வைத்ததைப் போல், வண்ணக் கோலங்கள்! ஒவ்வொரு கோலத்திற்கும் பக்கத்தில்..
WELCOME TO HAPPY PONGAL !
[இங்கேயே முடித்து விட்டால் இது ஒரு அருமையான புதுக் கவிதைக்குக் கருவாக அமையும்!]
ஒரு வீட்டின் கதவைத் தட்டினேன். ஒரு பெண் கதவைத் திறந்தாள்.
'யாராவது அமெரிக்காவிலிருந்து வருகிறார்களா?' என்றேன்.
'இல்லை! எனது அப்பா தான் ஆட்டையாம்பட்டியிலிருந்து வருகிறார்!' என்றது அந்தப் பெண்!
'எனக்கு ஒரு சந்தேகம். தமிழர் திருநாளில் எங்கு பார்த்தாலும் HAPPY PONGAL என்று ஆங்கிலம் ஏன்?' என்று கேட்டே விட்டேன்.
'நீங்கள் வீட்டின் முகப்பைப் பார்க்கவில்லை போலிருக்கிறது!' என்றாள் அவள்.
வீட்டின் முகப்பைப் பார்க்க அங்கு -
'இனிய பொங்கல் திருநாளுக்கு நல்வரவு!'
என்று எழுதியிருந்தது.
'தமிழை வீட்டின் முகப்பில் ஏற்றி விட்டோம். ஆங்கிலத்தை வீதியில் வீசி எறிந்து விட்டோம்!' என்றாள் அவள் பெருமிதத்தோடு!
ரசித்து கைதட்ட வைத்து விட்டார் பேராசிரியர் அப்துல் காதர். சென்னையில் 29வது புத்தகக் கண்காட்சியில் மனதைக் கவர்ந்த கவியரங்கத்தில்!
இது நடந்தது மதுரைன்னா சொன்னீங்க?! நிச்சயமா இருக்கும். சங்கம் இருக்கோ இல்லையோ தமிழை வளர்ப்பதற்கு அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் :-)
ReplyDeleteGood Thinking. But English?...
ReplyDeleteI differ from your point ( Sorry. I am unable to post in Tamil)